சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

SOCIAL SHARE
Pin It

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி, ஏற்கனவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். IPL-லிலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் தோன ஆடுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ன. CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் 2022 ஆம் ஆண்டின் CSK போட்டிகளிலும் தோனியே அணியை வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், தோனிக்குப் பிறகு யார் என்ற கேள்வி அவ்வப்போது கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரகயான் ஓஜா, அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது உள்ள கேன் வில்லியம்சன் பெயரை அவர் எடுத்துள்ளார். SRH அணியால் பயன்படுத்தப்படாமல் உள்ள கேன் வில்லியம்சன் தோனிக்குப் பிறகு அவருக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார் என அவர் எண்ணுவதாகக் கூறியுள்ளார். தோனிக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாதான் CSK அணியின் கேப்டனாக இருப்பார் என்ற ஊகம் உள்ள நிலையிலும், ஜடேஜா துணை கேப்டனாக இருப்பார் என்றே ஓஜா கருதுகிறார். 

ஐபிஎல்லில் தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடிக்கொண்டிருக்கும் CSK அணி, இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

“கடந்த 8-10 ஆண்டுகளாக  வீரர்களை அடிக்கடி மாற்றுவதில்லை என தோனி கூறியுள்ளார். எங்களுடன் நீண்ட நாட்களாக ஆடும் வீரர்களுக்கே எங்கள் அணுகுமுறையை நன்றாக புரிந்துகொள்ள முடியும். வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அணியில் இலக்கு, நோக்கம் ஆகியவற்றுடன் வீரர்களின் கண்ணோட்டமும் முழுமையாக ஒத்திசைந்து உள்ளது. வாய்ப்பு கிடைக்காவிட்டால், யாரும் சோர்ந்து போவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை நிரூபிக்க தயாராக காத்திருக்கிறார்கள். அதுதான் இந்த அணியின் பலமாக உள்ளது" என்று வெற்றிக்குப் பிறகு கூறினார் தோனி.

ARUNACHALAM