நடிகை கங்கனா ரனாவத்தின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

SOCIAL SHARE
Pin It

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது நடிகை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கங்கனா செய்திருந்தது தான் அவரது கணக்கில் இருந்து வெளியான கடைசி ட்வீட் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மம்தா பானர்ஜி குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கங்கனா ஒரு ட்வீட்டில் மம்தா பானர்ஜி தொடர்பான ஒரு மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இப்போது அதிகாரப்பூர்வமாக, கங்கனாவின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கங்கனா ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் தேர்தலுக்குப் பிறகு தாக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.  சமூக ஊடகங்களில் கங்கனாவின் ட்வீட் பல சர்ச்சைகளை ஏற்கனவே எழுப்பியிருக்கிறது. 

சிவசேனாவுக்கு எதிராகவும் கங்கனாவின் கருத்துகள் வெளியாகியிருந்தன.
 
அரசியல் குறித்த கங்கனாவின் வெளிப்படையான கருத்து பரிமாற்றம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மம்தாவின் டி.எம்.சி, சிவசேனா என அரசியல் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் தனது அப்பட்டமான  கருத்துகளை அதிரடியாக வெளியிடுவது   கங்கனாவின் ஸ்டைல்.

அவரது இந்த அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடக தளமான டிவிட்டர் கங்கனாவின் கணக்கை முடக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ARUNACHALAM