கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மாரடைப்பு...

SOCIAL SHARE
Pin It

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

சரியான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில மருந்துகள் மற்றும் புதிய தடுப்பூசிகளைக் கொண்டு நோய் பரவல் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மேலும் அதிர்ச்சியான தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பருவத்தினருக்கு மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுக் குறைபாடு, இதய செயலிழப்பு, இதய வலி ஆகியவை ஏற்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ரத்தம் உறைவு, ரத்தத்தில் அடர்த்தி அதிகம் ஆகியவை ஏற்படுவதாகவும், இதனால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரலில் ஆக்சிஜன் உள்ளிழுக்கும் தன்மை தடைபடுவதாக புனே மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லும்முன் D-Dimer என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், அதில் ரத்தத்தின் அடர்த்தி மற்றும் உறைவு குறித்து அறிந்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர். ஒருவேளை, பரிசோதனையில் ரத்தம் உறையும் தன்மை அதிகம் இருந்தால் அபிக்ஸபான் மருந்தை அடுத்த 3 வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், இதன்முலம் இதய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.
 

ARUNACHALAM