Dhoni-யின் முன்னாள் காதலி இறந்தது எப்படி?

SOCIAL SHARE
Pin It

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி ராவத் மற்றும் மகள் ஜீவாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தோனியின் வாழ்க்கையின் சோகமான ஒரு பின் கதையைப் பற்றி பலருக்கு தெரியாது. 

தோனி, சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பு, தோனியின் வாழ்வில் மற்றொரு பெண் இருந்தார். அவரை தோனி மிகவும் நேசித்தார். ஆனால் விதி அவர்கள் இருவரையும் பிரித்தது. தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தயாரிக்கப்பட்ட 'எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தோனியின் முன்னாள் காதலியின் பெயர் பிரியங்கா ஜா. தோனி அவரை மிகவும் நேசித்தார். திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரியங்கா ஒரு கார் விபத்தில் இறந்தார். 

தோனி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் தோனியுடன் இருக்கும் பெண் பிரியங்கா ஜா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா ஜா இந்த உலகை விட்டே சென்று விட்டார் என்பதை தோனி அறிந்ததும், அவர் மிகவும் வேதனை அடைந்தார். அந்த செய்தி அவரை வெகுவாக பாதித்தது. தோனியின் நெருங்கிய நண்பர்கள், இந்த துக்கம் காரணமாக தோனி சில காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் தோனி அதை தனது பலவீனமாக்கிக் கொள்ளாமல் தனது முழு கவனத்தையும் கிரிக்கெட் விளையாட்டில் செலுத்தினார். அதன் பிறகு அவர் இந்திய அணியை வழி நடத்தி உலகக் கோப்பையை நாட்டுக்கு பெற்றுத்  தந்தார்.

ARUNACHALAM