தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் சீஷெல்ஸ் தீவு

SOCIAL SHARE
Pin It

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியசுக்கு அருகிலுள்ள சீஷெல்ஸ் தீவில் 61 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போது மீண்டும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சீஷெல்ஸ் தமிழ் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு தீவு நாடு. தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். கொரோனா சேதம் இங்கேயும் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தொகையில் 61.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே நீக்கப்பட்டன. நாட்டின் வருமானத்தில் 72 சதவீதம் சுற்றுலாவைப் பொறுத்தது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்தது.

சுற்றுலாவுக்கு அனுமதியளிக்கும் முன், அந்த நாட்டில் 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு, 9,184 ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,700 சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்; இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம், 'புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 33 சதவீதம் பேர் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி போடவர்கள். தடுப்பூசி போட்டும் தொற்றுக்குள்ளான யாரும் இறக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கடந்த வாரம் பள்ளிகளை மூடுவது, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட தடைகளை மீண்டும் விதித்துள்ளோம். மீண்டும் சுற்றுலாவுக்கு தடை விதித்தால், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். பொருளாதார நெருக்கடியை அரசால் சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARUNACHALAM