தி பேமிலி மேன் சீரிஸ்க்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

SOCIAL SHARE
Pin It

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி தெரியும், இது என்ன இந்தி சீரியல் எதிர்ப்பு போராட்டம்?

தி பேமிலி மேன் சீரியலின் முதல் பாகம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. பல விருதுகளையும் குவித்துள்ளது. இந்தத் தொடரில் தமிழ் நடிகை பிரியாமணி நடித்திருக்கிறார். சிறந்த நடிப்புக்கான விருதும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்தி மொழியில் வெளியாகவிருக்கும் The Family Man Season -2 தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சமந்தாவும் நடிக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலைப்போர்  தொடர்பான காட்சிகள் இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. ராணுவ சீருடை அணிந்த சமந்தா தமிழ் பெண்ணாக சித்தரிக்கப்பட்டு, பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன.

இது போன்ற சீரியல்கள் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை நிறுத்தவேண்டும் என்று வைகோ கண்டனக் கொடி பிடித்துள்ளார்.

தி பேமிலி மேன்-2 (The Family Man Season -2) இந்தி தொடரை தடை செய்ய வேண்டும் என்று  மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர்   வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வலைத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து ”STOP Amazon Prime Video From Releasing Family Man2 Sign the Petition!” என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த வலைதளத் தொடர் வெளியாகிறது. இந்த சீரியலை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ARUNACHALAM