இம்ரான்கான் மீது காதல் கொண்ட பெண்கள்

SOCIAL SHARE
Pin It

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால், படித்து முடித்த கையுடன் மைதானத்தில் களமிறங்கினார்.... முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

ஆக்ஸ்போர்டு கெபில் கல்லூரியில் அரசியல், பொருளியல் (பொருளாதாரம்) மற்றும் தத்துவவியல் பிரவில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்.

 தனது வாலிப வயதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரபலமானவர். அவர் ஆடுகளத்தில் மட்டுமல்ல, காதல் களத்திலும் பிரபலமான வீரர்களில் ஒருவர்.

இம்ரான் கான் தனது இளம் வயதில் ராக்ஸ்டார் போன்ற தோற்றம் கொண்டிருந்தார். அவரது தோற்றத்தினாலேயே அவர் மீது காதல் கொண்ட பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
 
1984ம் ஆண்டு ஒரு நாளேடுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் சிங்கிளாக பெண்களை காண்பதே அரிது. அங்கே மதுபான கடைகள், டிஸ்கோத்தே, ஏன் தனியாக பெண்களை சந்திக்க இடமே கிடையாது. பெண்களை சந்தித்து பழகுவது என்பது வாழ்க்கையின் ஒரு அலாதியான இன்பம். அதை தான் நான் விரும்புகிறேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார் இம்ரான் கான்.
 
ரேகா என்றென்றும் மிகவும் பிரபலமான நடிகை. அவரை இன்றும் பழம்பெரும் நடிகை என்று சொல்லிவிட முடியாது.  இம்ரான் கான் மும்பைக்கு வரும்போதெல்லாம், அவரும் ரேகாவும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகை ஜீனத் அமனுக்கும் இம்ரான் கானுக்கும் காதல் என்று வதந்தி பரவியது. 1979 நவம்பரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு விஜயம் செய்தது, இம்ரான் கானை 'பிளேபாய்' என்று அழைத்தார்கள். அந்த ஆண்டு இம்ரான் கான் தனது பிறந்தநாளின்போது பெங்களூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார். அப்போது, டிரஸ்ஸிங் அறையில் இம்ரான் தனது 27 வது பிறந்தநாளை தனது அணியினருடன் கொண்டாடினார், ஆனால் சில இந்திய பத்திரிக்கைகளில் இம்ரான் தனது 27 வது பிறந்த நாளை பாலிவுட் நடிகை ஜீனத் அமனுடன் கொண்டாடியதாக கூறின. கிரிக்கெட் மைதானத்தில் கேக் வெட்டிய பிறகு, இம்ரான் ஜீனத்தை தனியாக சந்தித்தாரோ என்னவோ? ஜீனத் அமனோ, இம்ரான் கானோ தங்களுக்கு இடையிலான உறவு பற்றி வெளிப்படையாக பேசவில்லை.

பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியுடன் இம்ரானின் பெயரை இணைத்து வதந்திகள் உலா வந்தன. ஆனால் இருவரும் தங்கள் உறவு பற்றி மறுத்தும் பேசவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை.

இம்ரான் கானுக்கும் பெங்காலி நடிகை மூன் மூன் செனுக்கும் இடையிலான நெருக்கம் அந்த நேரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மூன் மூன் செனை இம்ரான் விரும்புவதாக கூறப்பட்டது.  

பாலிவுட் நடிகைகளின் விருப்பமான கிரிக்கெட் ஹீரோ இம்ரான் கான் என்று கூறப்பட்ட காலம் அது. அவரது காதல் கதைகள் இன்றும் பிரபலமாக உள்ளன.

1995ல் தனது 42வது வயதில் முதல் திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். இவர் ஜெமிமா கோல்ட்ஸ்மித் எனும், யூத பில்லியினரான சர் ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித் என்பவரின் மகளை திருமணம் செய்துக் கொண்டார். இம்ரான் கானுக்கும், ஜெமிமாவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம்.  இந்த தம்பதிகளுக்கு சுலைமான் இசா கான் மற்றும் குவாஸிம் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனது உடல்நல பிரச்சனை காரணமாக ஜெமிமா பெரும்பாலான நாட்களை இங்கிலாந்தில் கழிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது.  ஏறத்தாழ திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் 2004ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.
 
முதல் மனைவியுடன் பிரிவு ஏற்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி தொலைக்காட்சியில் பணிப்புரிந்து வந்த ரெஹாம் கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். ஆனால், இவர்களது இல்லற பந்தம் பத்து மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இம்ரான் கான் தன் வாழ்க்கையையே நாசம் செய்துவிட்டார். அவர் தன்னை ஒரு கடவுள் போல உருவகப்படுத்திக் கொள்கிறார். அவரிடம் நிறைய ஈகோ இருக்கிறது. மேலும், திருமணமல்லாத கள்ளத் தொடர்பு மூலமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறி இம்ரானை பிரிந்தார் ரெஹாம் கான்.
 
புஷ்ரா மேனகா எனும் 39 வயதுமிக்க பெண்மணியை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். புஷ்ரா மேனகா ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் பெற்றவர்.


 

ARUNACHALAM