பொதுவெளியில் பிரான்ஸ் அதிபரை அறைந்தவருக்கு 4 மாதம் சிறை

SOCIAL SHARE
Pin It

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், மக்களை சந்தித்து உரையாடுவதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரான்சின் தென்கிழக்கு மாகாணத்திற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

அவ்வாறு சென்ற இடத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க மேக்ரான் அவர்கள் அருகே சென்றார்.

அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவருக்கு அதிபர் கை கொடுத்த நிலையில், அந்த நபர் யாரும் எதிர்பாராத விதமாக தனது கையால், அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் திடீரென மேக்ரான் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த நபருடன் இருந்த மற்றொரு நபர் மேக்ரானுக்கு எதிராக முழக்கமிட்டடார்.

அவரை அதிபரின் பாதுகாவலர்கள் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் டேமியன் டரெல், 28, என, தெரிந்தது. அவருக்கு, பிரான்சின் வேலென்ஸ் நீதிமன்றம், நான்கு மாத சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

ARUNACHALAM