மீனவரை விழுங்கித் துப்பிய திமிங்கலம்..!

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரை அருகே ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கதை ஒன்று உண்டு. பினோஜியோ என்கிற இந்த கதையில் மீனவர் ஒருவர் ஒருவரை பிரமாண்ட திமிங்கலம் ஒன்று விழுங்கி பின்னர் துப்பிவிடும். இக்கதை தற்போது உண்மை சம்பவமாகியுள்ளது.

மைக்கேல் பக்காடு என்கிற அமெரிக்க மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். 35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த அவரை ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று எதிர்பாராவிதமாக விழுங்கியது.

30 விநாடிகள் திமிங்கலத்தின் இருட்டடித்த வாயில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நீந்திக் கொண்டிருந்த நிலையில் தனக்கே உரித்தான பாணியில் கடலுக்குமேலே எகிறிகுதித்த திமிங்கலம், அவரை காரித் துப்பியது. துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்த மைக்கேல், பின்னர் கரைக்கு வந்து சேர்ந்தார்.

இதனால் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில் பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும்.

இவ்வாறு திமிங்கலம் தனது உணவைத் தேடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ARUNACHALAM