ஓர் ஆவணம் பதிவு செய்தல் எவ்வாறு...?

SOCIAL SHARE
Pin It

 சொத்துக்களை வாங்குவதற்கு முன் அந்த சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றுகளில் உள்ள பதிவுகளை / வில்லங்கங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 எவ்வாறு வில்லங்கச் சான்று பெறுவது?

 வில்லங்கச்சான்றுக்கான விண்ணப்பங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும் மற்றும் இணையதளத்திலும் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

 வில்லங்கச்சான்றுக்கான விண்ணப்பத்தில் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்துதல் வேண்டும். சொத்திற்கான சர்வே எண்ணிற்கு பழைய சர்வே எண் விவரம் இருப்பின் அதன் விவரத்தையும் மனுவில் தெரிவித்தல் வேண்டும். இல்லை எனில் பழைய சர்வே எண் தொடர்பான பதிவுகள் விடுபட வாய்ப்புள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட சொத்திற்கும் இணைதளத்தில் வில்லங்கச்சான்று விண்ணப்பிக்கலாம். உரிய கட்டணம் செலுத்தினால் வில்லங்கச்சான்று தங்களுடைய வீட்டிற்கு நேரடியாகவே அனுப்பி வைக்கப்படும்.

 வழிகாட்டி மதிப்பு....

 இணைதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட சொத்திற்கும் வழிகாட்டி மதிப்பு உள்ளது.

 அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட கிராமங் களின் வழிகாட்டி மதிப்பு பதிவேடுகள் உள்ளன.

  2002, 2003, 2007, 2012 ஆண்டுகள் மற்றும் தற்போதைய 09.06.2017ம் தேதி முதல் நடைமுறையிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான வழிகாட்டி மதிப்பு இணைய தளத்தில் உள்ளது.

 சொத்து மதிப்பீடு :-

 இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட சொத்து மற்றும் ஒரு குறிப்பிட்ட தன்மை கொண்ட ஆவணத்திற்கு எவ்வளவு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் தேவைப்படும் என்ற விவரம் உள்ளது.

 ஒரு சொத்து தொடர்பாக அடிமனை பொருத்து வழிகாட்டி மதிப்பு, கட்டிடம் இருப்பின் பொதுப் பணித்துறையினரால் வழங்கப்பட்ட கட்டிட மதிப்பீடு, செலுத்தப்பட வேண்டிய முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை தொடர்புடைய சார்பதிவாளரிடமிருந்தோ, இணைய தளத்தின் மூலமாகவோ தெரிந்துக்கொள்ளவும்.

 முத்திரைத் தீர்வை செலுத்துதல் :-

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பொருத்து இ-ஸ்டாம்ப் வசதி மற்றும் இந்த சேவை வழங்கக்கூடிய வங்கி கிளைகள் விவரங்கள். இ-ஸ்டாம்ப் இணையதளத்தில் உள்ளன.

 தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பட்டியல் முழுவதும் இணையதளத்தில் உள்ளது. மேலும் அந்தந்த சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பட்டியல் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விளம்பரப் பலகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 முத்திரைத்தாள்களை அதன் மதிப்பிற்கே உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்.

 முத்திரைத்தாள்களை அதன் மதிப்பிற்கு மேல் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வதாக புகார் பெறப்படின் தொடர்புடைய முத்திரைத்தாள் விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படுவ தோடு அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

 முத்திரைத்தாள்களை சார்பதிவாளர் அலுவலகங்கள், கருவூல அலுவலகங்கள், உதவி கண்காணிப்பாளர் (முத்திரை), சென்னை ஆகியோர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

 முத்திரைக் கட்டணத்தை சார்பதிவாளரிடம் ரூ.1000/- வரை ரொக்கமாகவும், உச்சவரம்பின்றி வங்கி வரைவோலையாகவோ, கருவூல செலுத்துச் சீட்டு மூலமாகவோ செலுத்தலாம்.

ARUNACHALAM