ஆவணம் தயாரித்தல்

SOCIAL SHARE
Pin It

ஓர் ஆவணத்தை இணையதளத்திலும் மற்றும் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மாதிரி ஆவண வரைவுகளை உபயோகப்படுத்தி எழுதிக் கொடுப்பவர்களில் எவரேனும் ஒருவர் வரைவு செய்யலாம்.

 வழக்கறிஞர்கள்

 உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள்

 ஆவணங்களின் மாதிரி வரைவுகள் சார்பதிவாளர் மற்றும் இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

 ஆவணத்தில் வழங்கப்பட வேண்டிய விவரங்கள் :-

 ஆவணத்தில் எழுதிக் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் ஆகியோர்களுக்கு அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண்/கைபேசி எண், புகைப்பட அடையாள அட்டை விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

 சொத்தின் சந்தை மதிப்பு மற்றும் கைமாறுத் தொகை விவரங்கள்.

 சொத்தின் முழு விவரம், கட்டிடம் இருப்பின் அதன் விவரமும் சேர்த்து.

 ஆவணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதிக் கொடுப்பவர் கையொப்பமிட வேண்டும். கடைசி பக்கத்தில் அத்தாட்சி செய்யும் சாட்சிகள் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

 விக்கிரைய ஆவணத்தில் எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதிப் பெறுபவர் கண்டிப்பாக அனைத்து பக்கங்களிலும் கையொப்பமிட்டு, ஆவணம் பதிவு செய்யும் நாளில் இரண்டு சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னர் ஆஜராக வேண்டும்.

 அதிகார ஆவணங்கள் தொடர்பாக முதல்வர் மற்றும் முகவர் ஆவணங்களின் அனைத்து பக்கத்திலும் கையொப்பமிட்டு ஆவணம் பதிவு செய்யும் நாளில் இரண்டு சாட்சிகளின் புகைப்பட அடையாள அட்டையுடன் சார்பதிவாளர் முன்னர் ஆஜராக வேண்டும். அதிகார ஆவணங்கள் பொருத்து சாட்சிகளுடைய கையொப்பம் மற்றும் கைரேகையும் பெறப்படும்.

 ஆவணம் பதிவு செய்வதற்கு தாக்கல் செய்ய காலக்கெடு :-

 ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் தொடர்புடைய சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்கு மேல் எட்டு மாதங் களுக்குள் சார்பதிவாளரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகை செலுத்தி தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு உரிய காரணங்களை விளக்கி மாவட்டப் பதிவாளரிடமிருந்து தாமத மன்னிக்கப் பெறலாம்.

 உயில்களைப் பொருத்து சார்பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்து பதிவு செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.

 ஆவணங்கள் பதிவு செய்ய எங்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 தமிழ்நாட்டிலுள்ள சொத்துக்களை, தமிழ்நாட்டில் மட்டுமே கீழ்கண்ட அலுவலகங்களில் பதிவிற்காக தாக்கல் செய்யலாம்.

 சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்டப் பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்டப் பதிவாளரிடம் பதிவு செய்ய ஆவணம் தாக்கல் செய்யலாம்.

 29.03.1997 முதல் தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களைப் பொருத்து வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் செல்லத்தக்கதல்ல.

ARUNACHALAM