இரண்டு பங்குதாரர்களுக்கு குறையாமல் உள்ள கூட்டு வணிக நிறுவனங்களை மாவட்டப் பதிவாளரிடம் பதிவு செய்துக்கொள்ளலாம்.
கூட்டு வணிக பதிவு விண்ணப்பத்தில் வழக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காயரால் ஒவ்வொரு பங்குதாரரின் கையொப்பமும் அத்தாட்சி செய்யப்பட வேண்டும்.
கூட்டு நிறுவனம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் தபால் மூலமாகவும் அனுப்பலாம்.
பதிவு செய்யப்பட்டு கூட்டு வணிக நிறுவனம் தங்களது முன் ஆண்டு அறிக்கையினை ஒவ்வொரு வருடமும் தவறாமல் தாக்கல் செய்யும் நிலையிலேயே அந்நிறுவனம் தொடர்ந்து நடைபெறுவதாக கருத இயலும்.
• பங்குதாரர்கள் மாற்றம் குறித்த அறிக்கை கோர்வை செய்திடல் வேண்டும்.
பதிவு பொதுமக்களுக்கு தகவல் அளித்தல்
பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவுத்துறையின் சம்மந்தப்பட்ட தற்போதைய விவரங்கள் உள்ளன.
ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் முக்கியமான தகவல் அடங்கிய விளம்பரப் பலகை உள்ளது. மேலும் ஒவ்வொரு சார்பதிவாளரும் பதிவு பொதுமக்களுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றனர்.
ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் குறைகள் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்கப் பட்டுள்ளன
அனைத்து மாவட்டம் மற்றும் மண்டல அலுவலகத்தில் அலுவலர்கள் பிரதி திங்கட்கிழமை பொதுமக்களின் குறைகளை கேட்டறிகின்றனர்.
பதிவுத்துறைத் தலைவர் அலுவலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியுடன் ஒரு பிரிவு ஏற்படுத்தப் பட்டு அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்படுகின்றது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் இருக்கும் தலைமை எழுத்தர் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக செயல்பட்டு பதிவு பொதுமக்களுக்கு வழிகாட்டியாக உள்ளனர்.
Project STAR திட்டத்தில் அனைத்து அலுவலகமும் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய தள முகவரி www.tnreginet.gov.in
இணைதயத்தின் மூலமாக சான்றிட்ட நகல்கள் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் இணைதளத்தின் மூலமாக சான்றிட்ட நகல்கள் குறித்து விண்ணப்பம் செய்து சான்றிட்ட நகல்கள் தயாரான பின்னர் நேரடியாக அலுவலகம் வந்து உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் அல்லது தனியார் அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு பொதுமக்கள் தாங்கள் செலுத்திய தொகைகளுக்கு உரிய ரசீது கேட்டு பெற அறிவிக்கப் படுகிறது.
பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் குறித்த விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டுப் பெறலாம்.
சேவையில் குறைககள் இருக்கும் நிலையில் :-
ஒருவர் தனது ஐயப்பாட்டிற்கு சரியான பதில்கிடைக்காத நிலையிலும் அல்லது
ஏதேனும் ஒரு சேவை பொருத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைபெறாமலும் தாமதமாக ஏற்படும் நிலையில்:
பாதிக்கப்பட்ட நபர் கடிதம் மூலமாகவோ, நேரடியாகவோ மாவட்டப் பதிவாளர் அல்லது மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் அல்லது பதிவுத்துறைத் தலைவர் அவர்களை அணுகலாம்
அல்லது
புகார் பெட்டியில் புகார் தெரிவிக்கலாம்.
அல்லது
மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மூலம் புகார் தெரிவிக்கலாம்













