ஒரு ஆவணம் பதிவு மறுதளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து மேல்முறையீடு 30 நாட்களுக் குள் மாவட்டப் பதிவாளரிடம் செய்துக்கொள்ளலாம்.
மாவட்டப் பதிவாளரால் ஒரு ஆவணத்திற்கு குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதை ஏற்காத நிலையில், ஆவணதாரர் பதிவுத்துறைத் தலைவர் மற்றும் முதன்மை வருவாய் கட்டுப்பாடு அலுவலர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.
வழிகாட்டி மதிப்பினை ஏற்றுக்கொள்ளலாத நிலையில் அந்த ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அன்னாரால் சொத்தின் உரிய சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.
மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களால் சொத்தின் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய வித்தியாச மதிப்பிற்கு 2 மாத கால கெடுவிற்குள் குறைவு முத்திரைத் தீர்வை செலுத்தப்பட வேண்டும். தவறின் மாதம் ஒன்றுக்கு 1% வட்டி வசூலிக்கப்படும்.
மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட சந்தை மதிப்பினை ஏற்றுக்கொள்ளத நிகழ்வுகளில் அன்னாரால் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களுக்குள் பதிவுத்துறைத் தலைவர் / முதன்மை வருவாய் கட்டுபாடு அலுவலர் அவர்களிடம் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.
கிழிந்து போன, உபயோகிக்கப்படாத முத்திரைத்தாள் மற்றும் முத்திரைத்தாள் திருப்புத்தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு எதிராக பதிவுத்துறைத்துறைத் தலைவர் அவர் களிடம் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.
சங்கப் பதிவு ரத்து, சங்கப் பதிவு மறுப்பு, செயல்படாத சங்கங்கள் குறித்த மேல்முறையீடுகளை பதிவுத் துறைத் தலைவர் அவர்களிடம் செய்துக்கொள்ளலாம்.
இன்னபிற விவரங்கள் அறிந்துக்கொள்ள இணையதள முகவரியில் www.tnreginet.gov.in விஜயம் செய்யவும். தகவல்கள்
பதிவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பதிவு பொதுமக்களால் கோரப்படும் தகவல்களை வழங்க கடமைப்பட்டவர்களாவார்கள்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இருக்கும் விளம்பரப் பலகையில் அனைத்து முக்கிய விவரங் களும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலக நேரத்தில் பதிவு பொதுமக்கள் கோரும் அனைத்து விவரங்களை வழங்க சார் பதிவாளர் கடமைப்பட்டவர்களாவார்கள்.
சார்பதிவாளர்கள் பதிவு பொதுமக்களுக்கு தேவையான விவரங்களை வழங்கக்கூடிய தகவல் மையமாக உள்ளனர்.
ஆலோசனைப்பெட்டிகள் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ளன.













