சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிட்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஷெர்னி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார்.
தமிழ்ப் படங்களில் நடிக்காமல் நிராகரித்து வந்த அவர், மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில், என்.டி.ஆர்.பயோபிக்கில், பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இவர், இப்போது ஒடிடி-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக, மார்ச் மாதம் முதல் சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த தயாரிப்பாளர்கள், ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்தனர். பெரிய ஹீரோ படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் ஒடிடி-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 'ஓடிடியில் சீரிஸ்கள் பண்ணலாம் என நினைக்கிறேன். ஓடிடி மீது எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. சரியான நேரத்தில் அதை பயன்படுத்துவேன். நடிகர்கள் மட்டுமின்றி பலருடைய வாழ்க்கையை ஓடிடி காப்பாற்றும் என்று நினைக்கிறேன்.
படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காதவர்களுக்கும் ஓடிடி தளங்கள் கைகொடுக்கும் என்று கூறியுள்ளார் வித்யா பாலன். இவர் நடித்திருந்த பயோபிக் படமான, சகுந்தலாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது













