90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட தொழில் முடக்கம்

SOCIAL SHARE
Pin It

ஐநா.,வின் ஒரு பகுதியான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தொழில்கள் பல முடங்கின. இதனால் 8.8 சதவீத வேலை நேரம் உலக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ரெஸ்டாரன்ட்கள், பார்கள், அங்காடிகள், விடுதிகள் இதர சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்த பின்னர் மீண்டும் மற்றொரு வேலைக்கு முயற்சிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அப்போது பலர் வேலை இழந்தனர். ஆனால் 2020ஆம் ஆண்டு அதேபோல நான்கு மடங்கு ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக தொழிலாளர் அமைப்பு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் கை ரைடர் கூறுகையில் 1930-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் முடக்கத்தை அடுத்து 2020 இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.. இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ARUNACHALAM