பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

SOCIAL SHARE
Pin It

பப்பாளிப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது பலரால் வெறுக்கப்படுகிறது. ஏனென்றால் இது அசாதாரண மென்மைத்தன்மை கொண்டுள்ளதோடு இனிப்புச் சுவை மட்டுமல்லாமல், கடைசியில் கசப்புச் சுவையும் சேர்ந்தே இருப்பதால், பலர் இதை விரும்புவதில்லை.

இந்தப் பழம் கரிகா பப்பாளி தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா என்றாலும், இந்தியா முழுவதும் இது பரவலாகக் கிடைக்கிறது.

உடலில் நடைபெறும் பொதுவான உடலியல் செயல்முறைகளால் நம் உடல் முக்கிய உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏராளமான அடிப்படைக்கூறுகளை உருவாக்கும். அது மட்டுமல்லாமல், மாசுபடுதல், வெப்பம், வைரஸ்கள் மேலும் இதைப்போன்ற பிற அம்சங்கள் போன்ற ஏராளமான சுற்றுச்சூழல் காரணிகளாலும் பாதிக்கப்படுகிறோம், இவையும்கூட ஏராளமான ஃப்ரீ ரேடிகல்ஸ் என்று குறிப்பிடப்படும் அணுக்கள் உருவாக வழிகோலுகின்றன.

தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ்தான் புற்றுநோய், இதய நோய்கள், பக்க வாதம் போன்ற பல நிலவரங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

பப்பாளியில் ஏராளமான ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது என்பது ஒரு நல்ல விஷயம். இந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் கரோட்டினாய்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இதோடு, இதில் உடலுக்கு உடலுக்கு வழக்கமாகத் தேவைப்படுவதைக் காட்டிலு மிக அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது, இதில் நம் கண்களை, பார்வையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான   வைட்டமின் ‘ஏ’ செறிந்து காணப்படுகிறது.

இதை மேலும் அதிகமாக வலியுறுத்தவே இதைத் தனியாகக் குறிப்பிடுகிறேன். பப்பாளியில் ஆற்றல் வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் செறிந்துள்ளது – இது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உடலில் பாதுகாப்புத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை முதுமையடைவதற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கின்றன. உண்மையில், பப்பாளிச் சாறு ஃப்ரீ ரேடிகல்ஸ் உருவாக்கத்தால் உண்டாகும் அல்சீமர் நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

ஃப்ரீ ரேடிகல்ஸ் நீரிழிவு, கல்லீரல் நோய், தைராய்டு நோய் உண்டாவதற்கும் காரணமாக உள்ளன. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸ்களை சமன்படுத்துவதன் மூலம் பப்பாளி நம் ஆரோக்கியத்தை இந்தப் பிரச்சினைகளிலிருந்து தடுக்கும் நன்மையைச் செய்கிறது

பப்பாளியில் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட லைகோபீன் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில், சில சமயங்களில், இதன் பாதுகாக்கும் பண்புகளுக்காக புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களை தினமும் பப்பாளி உண்ணச் சொல்கிறார்கள். இதிலும்கூட இதன் பாதுகாக்கும் அம்சங்களுக்குக் காரணமாக இருப்பது இதில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள். புற்றுநோயின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உருவாகும் ஆக்ஸிஜனேற்றம் பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சேதமடைகிறது.

புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்க வேண்டும் என்றால் தினமும் பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும். பப்பாளிச் சாறுகள் மற்றும் அவை உண்மையில் எவ்வாறு உதவும் என்பது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

ARUNACHALAM