கொடிபோல் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கை முறையின் காரணமாக நம்மால் அப்படி உடலை பராமரிக்க முடிவதில்லை. ஏன்னென்றால், நாம் உண்ணும் உணவு தான் காரணம். இனி நம் உணவு முறைகளை மாற்றி நம் உடலை கொடிப்போல் வைத்து கொள்வோம்.
நம் முன்னோர்கள் சிறுதானியங்களை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர், அதனால் தான் அவர்களுக்கு எந்த நோயும் வராமல் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து வந்தனர். தினம் ஒரு சிறு தானியம் என்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.
திணை, சாமை, வரகு,கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி இவை அவைத்துமே சிறு தானிய வகைகள் ஆகும். “ கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு” என்று மூதாதையர்கள் கூறியுள்ளனர். உடலின் உள்ள கொழுப்பினை நீக்க கொள்ளு மிகவும் உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கொள்ளை உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறைந்து கொடி போன்று மாறிவிடலாம்.
கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்-
கொள்ளு = 1 கப்
காய்ந்த மிளகாய் = 3
மல்லி = 1 டீஸ்பூன்
சீரகம் = 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை = 10 இலைகள்
பூண்டு = 3 பல்
கடுகு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை
கொள்ளை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். பின்பு வேகவைத்த கொள்ளு, காய்ந்த மிளகாய், மல்லி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வதக்கி அரைத்து வைத்துள்ளவற்றை சேர்ந்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் இறக்கினால் சுவையான சத்தான ரசம் தயார்.













