அழகான கையெழுத்து, அழகற்ற கையெழுத்து ஒரு ஓப்பீடு!

SOCIAL SHARE
Pin It

பொதுவாக ஒருவரின் கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள்.

ஒரு நகைச்சுவைக்காக சொல்லுவது என்றால் டாக்டரின் கையெழுத்து நன்றாக இருக்காது ஆனால் அவுங்க நல்லா சிறப்பாக இருப்பார்கள்.

ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்தும், கூட அவரது வாழ்க்கை முறையை, எதிர் காலத்தை துல்லியமாக அறிய முடியும் என்பதை மிகச் சிலரே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்திருக்கிறார்.

அதுபோல ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் செல்வந்தர் ஆகியிருக்கிறார்.

இந்த கலைக்கு ஆங்கிலத்தில் ‘கிராபாலஜி’ (Graphology) என்று பெயர்.

நாம் நமது கையினால் எழுதுவதால் அதன் பெயர் கையெழுத்து என்றாகிறது. ஆனால் அந்த கையெழுத்து, ஒவ்வொருவரின் மூளை இடும் கட்டளைப்படிதான் அமைகிறது என்கிறது விஞ்ஞானம். இந்தக் கையெழுத்து இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஒவ்வொருவரின் மூளைதான். அதற்கு ஏற்ற வகையில்தான் கை செயல்படுகிறது.

ஒருவர் தங்களது கையெழுத்தை எந்த மொழியில் எழுதினாலும், அந்த எழுத்துகளின் வடிவங்களை வைத்து, அந்த நபரின் இயல்பான குணாதிசயங்களையும், அவரது எதிர்காலத்தையும் வெகு துல்லியமாக கண்டறிய முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைகளுக்குள் தான் ஒருவரது கையெழுத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் எழுதும் நிலையை வைத்தே ஒருவரின் தலையெழுத்தை கூறிவிடுவதே இந்தக் கலையின் சிறப்பம்சம். ஒருவரது கையெழுத்து சரியில்லை என்றால், அதை மாற்றி அமைத்து, சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் இங்கு வழி இருக்கிறது.

பொதுவாக அரிசாண்டில் (Horizantal) என்ற நிலையில் தங்களது கையெழுத்தை தெளிவற்ற நிலையில் வரைந்தால், அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இதே பலன் 15 டிகிரி என்ற நிலையில் எழுதுபவர்களுக்கும் உண்டு.

இந்த பலன், ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். கையெழுத்தை 30 டிகிரி கோணத்தில் எழுதுபவர்கள் பெண் பாலராக இருப்பின், அவர்கள் புகழ்பெற்ற வாழ்க்கையை அடைவார்கள்.

ஆனால் ஆண்களுக்கு அது துன்பங்களைத்தான் கொடுக்கும். அதே நேரத்தில் 45 டிகிரி கோணத்தில் பெயர் தெரியும்படி கையெழுத்திடும் நபர்களுக்கு, அவர்களின் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் ஒருசிலர், அதன் கீழே நீளமான அடிக்கோடு வரைவார்கள். அது அவ்வளவு நல்லதல்ல. இதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. வேண்டுமானால் 1 செ.மீட்டருக்கும் குறைவான அடிக்கோட்டை வரையலாம்.

கையெழுத்திற்கும் ஒருவித சக்தி உண்டு. பலன் உண்டு. அதனை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நமது கையெழுத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், நமது தலையெழுத்தும் நல்ல விதமாக அமையும்.

பொதுவாக பல மதத்தினர் தங்கள் கடவுள் பெயரை ஆயிரம் முறை என எழுதி வேண்டுவார்கள். இதுவும் அவர்களின் கையெழுத்தின் சிறப்பைக்கொண்டே அவர்களின் வேண்டுதலில் நன்மை/தீமை அமைகின்றது என கையெழுத்து வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

கண்டிப்பாக கையெழுத்து ஒருவரின் தலையெழுத்தை மாற்றும் என 100% சொல்லுகிறார்கள்  கையெழுத்து ஆராய்ச்சியாளர்கள்.

 

ARUNACHALAM