கொரோனா தடுப்பூசி போட்டால் தான் சீனாவுக்குள் அனுமதி

SOCIAL SHARE
Pin It

கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும், கொரோனா உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டு நவம்பர் முதல் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பயணிகளுக்கு சீனா தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவின் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவுக்குள் வர அனுமதிக்கப்படும் என சீன தூதரகங்கள் அறிவித்துள்ளன.

சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் சீனாவில் மருத்துவக் கல்லூரிகளில் பயில்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‛பிற நாட்டு தடுப்பு மருந்துகளை பரஸ்பரம் அனுமதிக்கும் நடைமுறை வரும், ஆனால் அதற்குக் கொஞ்சம் காலமெடுக்கும்' என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு மாணவர்களுக்குப் பொருந்துமா என்பதை சீனா விளக்கவில்லை.

ARUNACHALAM