இரவு பணி - கேன்சர் வரும் அபாயம்

SOCIAL SHARE
Pin It

பகலில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து இரவுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட வகை கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு 24 மணி இயற்கையான சீன்களின் இயக்கத்தில் தடையை ஏற்படுத்துகிறது. அவர்களின் 'டி.என்.ஏ'விலும் பாதிப்பை உருவாக்குகிறது.   எதிர்காலத்தில் இரவில் பணியாற்றுபவர்களுக்கு கேன்சர் வரும் அபாயமும் உள்ளது.

இரவினால் உணவு செரிமானக் குழாய் பாதிக்கப்பட்டு அல்சர் போன்ற பாதிப்புகளும், தூக்கமின்மையால் அவதிப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

மாறிவரும் உலகில் இரவு பணி என்பது கட்டாயமாகியுள்ள நிலையில், தொடர்ந்து இரவு நேர பணி செய்யாமல், பகல், இரவு என மாறி பணி செய்தால் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு பணி முடித்துவிட்டு காலையில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடல் பருமனாகி அதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, அதன்பிறகு சிறிய குளியல் போட்டு, காலை நேர உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் நோய் உபாதையிலிருந்து தப்பிக்கலாம்.

ARUNACHALAM