ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் ஜன.,16 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கோவிஷீல்டுக்கான தடுப்பூசி மருந்து இரண்டாவது டோஸ்க்கான கால நீட்டிப்பை 4 வாரத்திலிருந்து 8 வாரமாக மத்திய அரசு நீடித்துள்ளது.
நாடு முழுவதும் 4.84 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













