உப்பு மிகச்சிறந்த ஒரு ஸ்கரப். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட நீக்கும். அதற்கு உப்பை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் தயாரித்து, அதை குளிப்பதற்கு முன் சருமத்தில் தடவி ஊற வைத்து, குளிக்கும் போது, மென்மையாக சிறிது நேரம் தேய்த்து விட்டு, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.
உங்கள் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமானால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியானது சமநிலையுடன் இருக்க வேண்டும். அதற்கு உப்பு பெரிதும் உதவி புரியும். ஆகவே 2 டீஸ்பூன் கல் உப்பை, 4 டீஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து, அதை சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
உப்பு தலைச்சருமத்தில் உள்ள பொடுகைப் போக்கி, ஆரோக்கியமான தலைச் சருமத்தைப் பெற உதவும். அதற்கு உப்பை ஸ்கால்ப் பகுதியில் தூவி விட்டு, பின் கை விரல்களை நீரில் நனைத்து, மென்மையாக ஸ்கால்ப் பகுதியை 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை நீரில் அலசி, மைல்டு கண்டிஷனரை முடிக்கு பயன்படுத்த வேண்டும்.
உப்பு நகங்களை வலுவாக்குவதோடு, க்யூட்டிகிள்களை மென்மையாக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்நீரில் கை மற்றும் கால் விரல்களை பத்து நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நகங்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நகங்கள் பொலிவோடு இருக்கும்.
உப்பு கறைகளைப் போக்கக்கூடிய ஒரு பொருள். அதுவும் பற்களில் உள்ள கறைகளை நீக்கி, பற்களை பளிச்சென்று மாற்றும் திறன் கொண்டது. அதற்கு ஒரு டீஸ்பூன் உப்புடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, நீரில் நனைத்த டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்க்க வேண்டும்.
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் தான், கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இப்படிப்பட்ட பாக்டீரியாக்களை உப்பு திறம்பட அழிக்கும். அதற்கு அரை கப் நீரில் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரை வாயில் ஊப்பு நன்கு கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.













