மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்த சூழலில் சென்னை ஐ.ஐ.டி-யின் ”bio medical engineering” துறை "லிங்க முத்திரை" எனப்படும் யோக முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம் என கண்டறிந்துள்ளது. இந்த முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்யாமல் இதுபோன்ற நிகழ்வுகளை அரங்கேற்றி வருவதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.













