பொதுவாக நாம் அனைவரும் தேவைக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்கிறோம். அளவுக்கதிகமாக சர்க்கரையை எடுத்துகொள்ளும்போது தேவையற்ற உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளும்போது இன்சுலின் அளவு அதிகரித்து இதயப் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு போன்ற குறிப்பிடத்தகுந்த உடல் உபாதைகள் உருவாகும்.
இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க நினைப்பவர்கள் சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றுவது நல்லது. இதன்மூலம் தேவைக்கு அதிகமாக உடலில் சர்க்கரை சேருவதை தடுக்க முடியும். நாம் சாப்பிடும் அனைத்து சர்க்கரையும் தீங்கானது அல்ல. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் வழியே கிடைக்கும் சர்க்கரை உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இனிப்பு பலகாரங்கள், பிஸ்கட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் மூலம் கிடைக்கும் சர்க்கரை உடலுக்கு தீங்கானது. சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றும்போது உடலில் சேரும் தேவையற்ற சர்க்கரையை தடுக்க முடியும்.
சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றுவது என்பது ஒன்றும் அவ்வளவு கடிமான காரியம் அல்ல. டையட்டில் சர்க்கரை உணவுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை சோடா, கடைகளில் விற்பனை செய்யப்படும் தயிர், கெட்சப், சாஸ், நார்ச்சத்து மிக்க பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அளவுக்கதிமான சர்க்கரை உடலில் சேரும்போது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இதயப் பிரச்சனைகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். ஒருவர் ஒரே நாளில் சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது. தொடர்ச்சியான பழக்க வழக்கங்கள் மூலம் சர்க்கரை சேருவதை கட்டுப்படுத்தலாம்.
சுகர் டீடாக்ஸ் முறையை ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு பின்பற்றலாம். இதனை பின்பற்றுவதற்கான முக்கிய நோக்கம் சர்க்கரையுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பை குறைப்பது மட்டுமே. ஓரிரு வாரங்கள் பின்பற்றியபிறகு மீண்டும் ஒரு சில நாட்கள் கொஞ்சமாக இயற்கை வழியில் கிடைக்கும் சர்க்கரை உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை உணவுகளை சேர்த்துக்கொள்வதையும், தவிர்ப்பதையும் மாறிமாறி செய்யும்போது உடலுக்கு கூடுதலான சில நன்மைகளும் உள்ளன.
1. சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றினால் உடலில் அதிகப்படியாக சேரும் கலோரிகள் குறையும், உடல் எடையும் குறையும்
2. உடலில் சேரும் சர்க்கரை குறையும்
3. இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாவதை குறைக்கிறது.
4. சுவாசப் பிரச்சனைகள் பல் பிரச்சனைகள் போன்றவற்றை குறைத்து வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சர்க்கரையை தவிர்ப்பது என்பது பலருக்கும் கஷ்டமான விஷயம். சர்க்கரை எடுத்துகொள்வதை குறைக்கும்போது அது சில அறிகுறிகள் மூலம் நமக்கு அதனை உணர்த்தும். இந்த அளவு குறையும்போது சர்க்கரையை எடுத்துக்கொள்ளுமாறு மூளை உங்களை தூண்டும். ஒரு சிலருக்கு தலைவலி, சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும்.
இந்தமாதியான சூழல்களை எதிர்கொள்பவர்கள் காலை உணவில் அதிகப்படியான புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகள், ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். உடனடியாக சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது முழு பயனையும் கொடுக்காது. படிப்படியாக உணவில் சர்க்கரையை குறைப்பது மட்டுமே சிறந்த வழியாகும். தானியங்கள், நட்ஸ் மற்றும் கொழுப்புள்ள மீன்களை உணவாக எடுத்துக்கொள்வதுடன், மதிய உணவுகளில் அவகோடா சேர்த்துக்கொள்ளலாம்.
புரோட்டின் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரையின் தேவை அதிகம் இருக்காது. தர்பூசணி, வாழைப்பழம் போன்ற பழங்கள் வழியாக கிடைக்கும் இயற்கையான சர்க்கரையை எடுத்துகொள்ளலாம். இனிப்பு தன்மை கிடைப்பதுடன், நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. பாக்கெட் உணவுகள், பாக்கெட் பழச்சாறுகள் செயற்கை சர்க்கரை கொண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.













