பூஞ்சை தாக்குதல் கலர் கலரா வருது : டுவிட்டரில் டிரெண்டிங்

SOCIAL SHARE
Pin It

கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் நிற பூஞ்சை நோய் தாக்குதல் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட்டிங் ஆனது.
 
'மியூகோர்மைகோசிஸ்' ( Mucormycosis ) என்று அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான் என்றாலும் நோய் தீவிரமானால் உயிரிழப்பும் ஏற்படும். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் இறக்கவும் செய்துள்ளனர்.

இதையடுத்து பீஹாரில் இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியபட்டன.  இதையும் விட ஆபத்தான மஞ்சள் நிற பூஞ்சை நோய், உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உடன் இப்படி கலர் கலரா பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை நோய் தாக்குதல் இந்திய மக்கள் இடையே ஒரு அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்று மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி டுவிட்டரில் வேகமாக பரவியதால் இந்த விஷயம் #YellowFungus என்ற பெயரில் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.

‛‛கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல். எனக்கு என்னம்மோ இது சீனாவின் பயோ வார் போன்று தெரிகிறது''. ‛‛என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை... கலர் கலரா வந்து மக்களை சாவடிக்கிறது. கறுப்பு, வெள்ளை, மஞ்சள், அடுத்து என்ன பின்க் நிறமா...''. ‛‛இந்தியாவில் நடக்கும் மனித அழிவுக்கான போட்டி பந்தயத்தில் புதிய போட்டியாளராக மஞ்சள் பூஞ்சை உள்ளே நுழைந்துள்ளார்'' உள்ளிட்ட கருத்துக்கள் பதிவாகி உள்ளன. கறுப்பு, வெள்ளை, மஞ்சள் அடுத்து என்ன கலர்.... என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ARUNACHALAM