கட்டுப்பாடுகளை தளர்த்த பிரிட்டன் யோசனை!

SOCIAL SHARE
Pin It

இங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் 2-ம் டோஸை எடுத்துக்கொண்ட இரு வாரங்களுக்கு பின்னர், பி.1.617.2 வகைக்கு எதிராக அத்தடுப்பூசி 88% செயல்படுவதா தெரிவித்துள்ளது.  அதுவே பிரிட்டனில் பரவிய பி.1.1.7 வகைக்கு எதிராக 93% செயல்திறன் கொண்டிருக்கிறது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி  இந்தியாவில் பரவியுள்ள வகைக்கு எதிராக 60% செயல்படுகிறது. பிரிட்டனில் பரவியுள்ள வகைக்கு எதிராக 66% செயல்திறன் பெற்றுள்ளது.

மேலும், பைசர் மற்றும் கோவிஷீல்டின் முதல் தடுப்பூசி போட்ட 3 வாரங்களுக்கு பின்னர் இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் வகை தாக்கினால் 33% செயல்திறன் இருக்கும், பிரிட்டன் வகை வைரஸ் என்றால் 50% செயல்திறன் இருக்கும் என கூறியுள்ளது. இம்முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் சுகாதார செயலர் மட் ஹன்காக், திட்டத்தின் சரியான பாதையில் செல்கிறோம் என தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் எடுத்த பிறகு தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பதை இந்த தரவுகள் காட்டுகிறது.

இதன் காரணமாக விரைவில் பிரிட்டன்வாசிகளுக்கு 2-ம் கட்ட தடுப்பூசியை போட்டுவிட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. 

ARUNACHALAM