இங்கிலாந்து நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசிவருகிறது. கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில் விமானம், சரக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றால் இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் விமான சேவை ஜனவரி 7ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 8ம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.













