பிரபல வணிக இதழான போர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்’ என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.
ஆண்டுதோறும், ஆன்லைன் பரிந்துரை, ஜூரிக்களின் பட்டியல் மற்றும் ஃபோர்ப்ஸ் குழுவின் ஆய்வு என மூன்று கேட்டகிரியில் 30 வயதுக்குள் சாதித்த 30 இளம் சாதனையாளர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி (நடிகையர் திலகம்) படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி, இப்போது மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்லா பட ஷூட்டிங்கில் துபாயில் பிஸியாக இருக்கிறார்
கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான 28 வயதானகீர்த்தி சுரேஷ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தென்னிந்திய பிரபலம் கீர்த்தி சுரேஷ் மட்டும்தான். போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.
அந்தப் பட்டியலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் ‘புல்புல்’லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
“போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.













