ஐபிஎல்-14 வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.
எனவே இந்த ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் சுமார் 1114 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவர்களில் சுமார் 292 பேர் மட்டுமே இறுதி ஏலப் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் இந்திய வீரர்கள் 164 பேர் ஆவர், மீதமுள்ள 128 பேர் வெளிநாட்டினர். ஹர்பஜன் சிங், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.2கோடி அடிப்படையாக உள்ளது.
உமேஷ் யாதவ், விகாரி உள்ளிட்ட 11 பேர் ரூ.1 கோடி பட்டியலில் உள்ளனர் .. இந்த ஏலத்தில் ஸ்ரீசந்தின் பெயர் இடம்பெறவில்லை.













