கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இந்தியாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 47 நாடுகள் வழங்கியுள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பியது. அதற்கு நன்றிக்கடனாக, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களும், நிறுவனங்களும், இந்திய வம்சாவளியினரும் போட்டி போட்டு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றனர். அதனால், இதுவரை இல்லாத வகையில், இரு வாரங்களில் 3,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. வரும் நாட்களில், இந்த உதவி 7,000 கோடி ரூபாயாக உயரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.110 கோடி ஆகும்.
இந்த தொகை 'கேர்' (CARE), 'எய்டு இந்தியா' (Aid India), 'சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா' (Sewa International USA) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 73.47 கோடி ரூபாய், 18.36 கோடி ரூபாய், 18.36 கோடி ரூபாய் என, மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.













