வழிகாட்டிப் பதிவேட்டில் சர்வே எண் / தெருவிற்கு மதிப்பில்லாத நிலையில்
விவசாய நிலம் மனையாக மாற்றப்படும் போது அல்லது மாற்றப்படுவதாக சார்பதிவாளர் சந்தேகிக்கும் நிலையில்.
கட்டிட கள ஆய்வு...
சார்பதிவாளர் கட்டிடத்தை கள ஆய்வு செய்து அதன் மதிப்பினை நிர்ணயம் செய்வார்.
கட்டிடம் பொருத்து சார்பதிவாளர் கணக்கிட்ட மதிப்பு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிட மதிப்பைவிட கூடுதலாக இருக்கும் நிலையில் குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் குறைவு பதிவுக் கட்டணம், இணக்க கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
கட்டிட மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு மேல் உள்ள நிலையிலும், சிறப்பு வகை கட்டிடங்கள் மற்றும் இயந்திரத்தளவாட சமான்கள் உள்ள நிலையில், பதிவுத்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர் அவர்களால் கட்டிட கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை பொருத்து கட்டிட மதிப்பு ரூ.2 லட்சத்திற்கு கீழும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பொருத்து கட்டிட மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு கீழும் உள்ள ஆவணங்களுக்கு கட்டிட கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை.
தனியார் இருப்பிட பதிவு :-
யாருக்கு....?
மருத்துவச் சான்றின் பேரில் உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு.
சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்கு
பொது இடத்திற்கு மற்றும் நீதிமன்றத்திற்குள் வர விலக்களிக்கப்பட்ட நபர்களுக்கு.
பொது இடங்களுக்கு வர விலக்களிக்கப்பட்ட பெண்களுக்கு.
எப்போது....?
தனியார் இருப்பிட பதிவிற்கு அலுவலக நேரத்தில் சார்பதிவாளரிடம் மனு செய்து உரிய கட்டணம் செலுத்தப்படும் நிலையில்:
அலுவலக நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ சார்பதிவாளரால் தனிமனை வருகை செய்யப்படும்.
விடுமுறை நாள் பதிவு - சார்பதிவாளர் விடுமுறைநாளில் அலுவலகத்தில் பணிபுரியும்பட்சத்தில் ஆவணதாரருக்கு அவசர தேவையேற்படின் விடுமுறை நாளில் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.
கட்டாயப் பதிவு :-
எப்போது....?
ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர், சார்பதிவாளர் முன்னிலையில் ஆவணத்தை எழுதிக் கொடுத்ததை ஒப்புக்கொள்ள நேரில் ஆஜராகாத நிலையில், ஆவணத்தை எழுதி வாங்குபவர் கட்டாயப் பதிவிற்கு சார்பதிவாளரிடம் மனு செய்யலாம்.
செயல்முறை :-
கட்டாயப் பதிவு தொடர்பாக ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரிடம் சார்பதிவாளரால் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் ஆவணத்தை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டால் ஆவணம் பதிவு செய்யப்படும். இல்லை எனில் ஆவணம் பதிவு மறுதளிக்கப்படும்.
மேல்முறையீடு :-
கட்டாயப் பதிவு தொடர்பான பதிவு மறுதளிக்கப்படும் ஆணைக்கு எதிராக ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நிர்வாக மாவட்டப் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்துக் கொள்ளலாம். மேல்முறையீட்டின்படி மாவட்டப் பதிவாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதியாணை பிறப்பிக்கப்படும்.













