உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.
உயில் ஆவணம் பொருத்து பதிவிற்கு தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.
உயில்களை சீலிடப்பட்ட உறைகளுக்குள் வைத்து மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக வைப்பு (Deposit) செய்யலாம்.
அவ்வாறு பாதுகாக்கப்படும் சீலிடப்பட்ட உறைகளுக்குள் உள்ள உயில்களை உயில் எழுதி வைத்தவர் அவரது ஆயுட்காலத்திற்குள் திரும்ப பெறலாம்.
உயில் எழுதி சீலிட்ட உறையில் வைப்பு செய்தவர், இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றுடன் அங்கீகரிக்கப்பட்ட நபர் விண்ணப்பிக்கும் நிலையில், மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்.
சான்றிடப்பட்ட நகல்கள்....
1 புத்தக ஆவணங்களைப் பொருத்து (கிரையம், பரிவர்த்தனை, ஈடு அடமானம், பிற ஆவணங்கள்) சான்றிடப்பட்ட நகல்களை உரிய கட்டணம் செலுத்தி எவராகிலும் பெற்றுக் கொள்ளலாம்.
உயில்களைப் பொருத்து உயிலை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே சான்றிட்ட நகல் பெறலாம்.
உயில் எழுதிக் கொடுத்தவர் இறந்த பின் அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து எவரும் சான்றிட்ட நகலைப் பெறலாம்.
4 புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகார ஆவணங்களைப் பொருத்து தொடர்புடைய ஆவணதாரர்கள் மட்டுமே சான்றிட்ட நகல்களை பெறலாம்.













