Editor's Choice

காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்டிஎஸ்-ல் காலிப் பணியிடங்கள்: (Multi Tasking Staff)- 8500

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 21

மேலும் விவரம் அறிய: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf

Editor's Choice

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாரம்பரிய வீடு இடிக்கப்படாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக தூக்கப்பட்டு, காலி இடத்துக்கு நகர்த்தப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 139 ஆண்டுகள் பழமையான வீடு, அடியோடு பெயர்க்கப்பட்டு 482 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வைக்கப்பட்டது. பிரம்மாண்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கின் மீது வீடு வைக்கப்பட்டு நகர்த்தி செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் ஆர்ச்சயர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 6 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டை நகர்த்த இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

நிறுவனம்: சென்னை பெர்டிலைசர் லிமிடெட், மணலி, சென்னை.

மொத்த காலிப் பணியிடங்கள்: 45 - துறை வாரியான விவரம்: பட்டதாரிகள் (பயிற்சி)

1. கெமிக்கல் இன்ஜினீயரிங் (வேதியியல், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ டெக்னாஜி- 13

2. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்- 3

3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் -1

4. இன்ஸ்ட்ருமென்டேஷன் (ஐசிஇ, இஐஇ, இன்ஸ்ட்ருமென்டேஷன்) இன்ஜினீயரிங்-1

5. சிவில் இன்ஜினீயரிங்- 1

6. ஐடி/ சிஎஸ் – (ஐடி/சிஎஸ்/இசிஇ) - 02

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம்.

பயிற்சியின்போது மாத ஊக்கத்தொகை-ரூ. 4,984

II- டெக்னீஷியன் (டிப்ளமோ)- பயிற்சி

1. கெமிக்கல் (கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ டெக்னாலஜி) இன்ஜினீயரிங்- 15

2. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்/ ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்- 4

3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்- 02

4. இன்ஸ்ட்ருமென்டேஷன் (ஐசிஇ, இஐஇ, இன்ஸ்ட்ருமென்டேஷன்) இன்ஜினீயரிங்-2

5. சிவில் இன்ஜினீயரிங்- 1

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருப்போர் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின்போது மாத ஊக்கத்தொகை ரூ. 3,542

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 24

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2021/02/MFL_2020-21_Notification.pdf


Editor's Choice

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற விவகாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சிறை நிர்வாகத்திடம் தமிழக சிறையில் உள்ள பேரறிவாளன் தரப்பில் கோரப்பட்டது. இந்த தகவல்களை பெற முடியாததால், மும்பை உயர் நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பு நாடியது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதில், ‘மும்பை தொடர் வெடிகுண்டு விவகாரத்தில் நடிகர் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? அதற்குப் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன? அதற்கான விபரங்களை ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு தரவேண்டும். மேற்கண்ட விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய உள்துறைக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக பேரறிவாளன் தரப்பில், கருணை மற்றும் அமைச்சரவை தீர்மானம் தொடர்பான விஷயத்தில் ஆளுநர் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

மாசி மாதப் பெளர்ணமியில் காவிரிக் கரை கிராமங்களில் காமதகனம் நடக்கும். தவறினால் பங்குனி மாத முழு நிலவில் நடக்கும். இந்த இரண்டு மாதங்களின் ஒரு அமாவாசையிலிருந்து மூன்று, ஐந்து, ஏழாம் நாளில் காமண்டி நடுவார்கள். வளர்பிறையின் கடைசி நாளான பெளர்ணமியில் காமதேவனுக்கு அடையாளமாகும் காமண்டியைக் கொளுத்திவிடுவார்கள். நல்ல மழைக்காகவும் விளைச்சலுக்காகவும் இந்த விழா நடக்கிறது.

மேட்டூர் அணை மூடி, காவிரியில் நீரோட்டம் நின்றுபோயிருக்கும். ஊரல் சாரல் மட்டும் கருமணல் தெரியும் பளிங்கு நீராக ஆறுகளில் நெளிந்து ஓடிக்கொண்டிருக்கும். காலையும் மாலையும் பனிமூட்டம் இன்னும் கலைந்திருக்காது. ஒரு மாதத்துக்கு மேல் மும்முரப்பட்டிருந்த அறுவடை ஓயும் நேரம். மஞ்சள் நிற நெல் தாளின் மணத்தோடு இளங்காற்று. மாமரமும் புங்க மரமும் மருதாணித் தளிராகத் துளிர்க்கும். இன்னும் சில நாட்களில் காமனின் வரவு கூறி இளவேனிலும் வந்துவிடும். இப்போது ஏன் காமனை எரிக்கிறார்கள்?

கண்ணனோடு தன்னைச் சேர்த்துவைக்கச் சொல்லி, தையிலும் மாசியிலும் பங்குனியிலும் ஆண்டாள் காமதேவனை வேண்டுகிறாள். அவன் வரவுக்காக தை மாதம் தரை விளக்கிக் கோலமிடுகிறாள். மாசியில் தூவாளி மணலால் தெருவை அலங்கரிக்கிறாள். தலையை அள்ளி முடிந்துகொள்ளாமலும், தாம்பூலம் தரிக்காத உதடு வெளுத்துப்போகவும், ஒரு வேளை மட்டுமே உண்டு மூன்று வேளையும் காமனைத் தொழுகிறாள். கண்ணனோடு சேர்வதற்குக் காமனின் கருணை வேண்டி மேற்கொள்ளும் நோன்பைச் சொல்வது ஒரு அழகான இலக்கிய மரபு.

ஒரு புராணத்தில் காமதேவனின் மனைவி ரதியின் புலம்பலாக வருபவை சிருங்காரத்தின் ரச நுட்பம் காட்டும் சங்கதிகள். “நீ எப்போதும் என் மனதில் இருக்கிறாய் என்று சொல்வீர்கள். அது உண்மையானால், நீங்கள் எரிந்துபோனபோது நானும் அல்லவா கூடவே எரிந்திருக்க வேண்டும்?” என்று ரதி புலம்புகிறாள். . புராணத்தை உண்மை என்றே கொண்டாலும் இந்த ரதியின் காதலன் எரிந்துபோனான் என்ற அந்த உண்மையை நம் மனம் ஒப்புமா? எரியவில்லை என்று ஒரு கட்சியும் எரிந்தான் என்று ஒன்றும் காமண்டியில் லாவணி பாடுவதற்கு வேறு என்ன உளவியல் அடிப்படை வேண்டும்? சில கதைகளின் முடிவோடு நம் மனம் சமாதானமாகாது. எரித்தது சிவனே ஆனாலும் இந்த சமாதானம் வராது. வாலியைக் கொன்ற ராம பாணத்தோடு யார்தான் சமாதானமானார்கள்?

காமண்டி நடுவதற்குப் பெரியது, சிறியது, அதற்கும் சிறியது என்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய சதுரங்கள்போல் மண்ணால் மேடை கட்டிக்கொள்வார்கள். அதன் நடுவே மூன்று கிளைகள் உள்ள, ஆள் உயர ஆமணக்குச் செடி, கொருக்காத் தட்டை, துவரை மிளார் - இம்மூன்றையும் நடுவார்கள். தர்ப்பையைப் பிரியாகத் திரித்து இவற்றைச் சேர்த்துக் கட்டியதுபோல் சுற்றிவிடுவார்கள். ஒரு வறட்டியை நடுவில் துளையிட்டுத் தொங்கும்படி இதில் கட்டிவிடுவார்கள். மண்ணில் பிடித்த சிவலிங்கமும் மேடையில் உண்டு. இதுதான் காமண்டி. காமதகனம் வரை இதற்கு ஊர் மக்கள் மாலையில் விளக்கேற்றி, அபிஷேகம் செய்து, அவல் கடலை, சுண்டல் படைத்தும் மாவிளக்கு வைத்தும் கும்பிடுகிறார்கள். பெளர்ணமியில் பத்து வயதுச் சிறுவர்கள் நால்வருக்கு சிவன், பார்வதி, மன்மதன், ரதி என்றும் ஐந்தாவதாக ஒரு சிறுவனுக்கு உரல் பண்டாரமென்றும் வேஷம் கட்டுவார்கள். தூக்குச் சப்பரத்தில் ரதி, மன்மதன் படத்தை வைத்துத் தெருக்களில் வலம்வருவார்கள். அப்போது வில் அம்போடு மன்மதன், கூடவே ரதியும் சிவனும் பார்வதியும் சப்பரத்துக்கு முன்னால் செல்வார்கள். உரல் பண்டாரம் மட்டும் உரல் மேல் காமண்டி அருகே காவலுக்காக அமர்ந்திருப்பார்.

வீட்டுக்கு வீடு அந்த சப்பரத்துக்குத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிக் கும்பிடுவார்கள். சப்பரம் காமண்டிக்குத் திரும்பியதும் மன்மதன் படத்தைத் தனியாகக் கிழித்து காமண்டியில் வைத்து, அதனோடு காமண்டியை எரித்துவிடுவார்கள். எரிந்து சாம்பலாகி அடங்கியதும் எல்லோரும் ஆற்றுக்குச் சென்று தலைமுழுகி வீடு திரும்புகிறார்கள். காமண்டி கொளுத்தும் வரை நிகழ்ச்சி வெறும் குறியீடுதான். எரித்துவிட்டுக் குளிக்கும்போது அதுவரை குறியீடாக இருந்தது சட்டென்று நிஜமாக மாறிவிடுகிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் குறியீடு ததும்பி நிஜத்துக்குள் விழுவது புராணங்களை நிகழ்த்துவதில் வரும் நாடகப் புதிர். அப்போது வேஷம் நிஜமாகும் ரசவாதம் நடக்கும். இப்படி இல்லையென்றால், காமண்டி எரிந்த பிறகு ஏன் எல்லோரும் தலைகுளிக்க வேண்டும்?

எரிந்த சாம்பலை மூன்றாம் நாள் அகற்றிவிட்டு, புது மேடையில் சிவலிங்கம் வைத்து, மன்மதன் உயிர்த்துவிட்டதாகப் பூஜை செய்கிறார்கள். ரதிக்கு மட்டுமே அவன் உருவம், மற்றவர்களுக்கு அவன் அருவம் என்பது சிவனின் கருணை. காமத்தைக் கடியும் மரபு ஓர் இழை. காமனை தேவனாக்கி வழிபடும் இழை இன்னொன்று. அவனையே ஆண்டு தவறாமல் எரித்து, அருவமாக மீட்டுக்கொள்வது மற்றொன்று. காவிரிக்கரை கலாச்சாரம் ஒன்றோடு ஒன்று ஓயாமல் உரையாடும் உறவில் நிலைத்துவிட்ட எதிராளி இழைகள்.

Editor's Choice

அனைத்து வகையான டிஜிட்டல் தரவையும் சேமிக்க பென் டிரைவ்கள் மிகவும் பயன்படுகின்றன. வழக்கமாக நாம் தனிப்பட்ட தகவல்கள், அலுவலக தகவல்கள் என அனைத்தையும் பென் டிரைவில் சேமித்து வைக்கிறோம். ஆனால் பல கணினிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகளில் இந்த பென் டிரைவைப் பயன்படுத்தும்போது, ​​அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தரவை யாரும் பார்க்கக்கூடாது என நீங்கள் எண்ணினால், சில எளிய வழிகள் மூலம் நீங்கள் உங்கள் தரவுகளைப் பாதுகாக்கலாம்.  ங்கள் உங்கள் பென் டிரைவை லாக் செய்யலாம்.

உங்கள் பென் டிரைவின் தரவும் பாதுகாப்பாக இருக்கும், வேறு யாரும் அதை உபயோகிக்க முடியாது. பென் டிரைவில் பாஸ்வேர்ட் அமைக்க மென்பொருள் எதுவும் தேவையில்லை. 

முதலில், USB Pen Drive-ஐ கணினியில் செருகவும்.  டிரைவில் வலது கிளிக் செய்யவும். பின்னர், ‘Turn on BitLocker’-ஐ செலக்ட் செய்யவும்.

இப்போது 'Use Password to protect the Drive’-ல் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, பாஸ்வர்டை (Password) உள்ளிடவும். இந்த பாஸ்வர்டை இரு ஃபீல்டுகளிலும் உள்ளிடவும்.

'Save the key for future reference’ என்ற செய்தி வரும் வரை ‘next’ பட்டனை அழுத்தியபடி இருக்கவும்.

இப்போது குறியாக்க செயல்முறை (Encryption Process) தானாகவே தொடங்கும். இதற்குப் பிறகு, நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் மூலம் உங்கள் PenDrive பாதுகாக்கப்படும்.

 

பக்கம் 58 / 90