Editor's Choice

சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தல் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீனா ஹாரிஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர்,  பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவதும், பகுதி நேரமாக தனியார்  நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தும் வந்துள்ளார். அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து  வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், திஷா ரவி வன்முறையை தூண்டி விடுவதாக டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2  வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் அழுதபடியே தெரிவித்தார். இதற்கிடையே இதே வழக்கில் திஷா ரவியின் நெருங்கிய தோழியும் வழக்கறிஞருமான நிகிதா ஜேக்கப் என்பவருக்கு எதிராக ஜாமினில் வெளியே வராத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது

Editor's Choice

உலக புகழ் பெற்ற தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு  தற்போது வெளியாகியுள்ளது. Digital Content Associate, Catalog Lead – German, Support Engineer, Manager Catalog – Retail Systems, Operations Manager, Senior Catalog Associate, Catalog Lead, Quality Assurance Engineer I & Other ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Chennai Amazon
பணியின் பெயர் Digital Content Associate, Catalog Lead – German, Support Engineer, Manager Catalog – Retail Systems, Operations Manager, Senior Catalog Associate, Catalog Lead, Quality Assurance Engineer I & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Digital Content Associate, Catalog Lead – German, Support Engineer, Manager Catalog – Retail Systems, Operations Manager, Senior Catalog Associate, Catalog Lead, Quality Assurance Engineer I & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கணினியில் MS Office அல்லது அதற்கு இணையான செயல்பாடுகளில் அறிவும் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  1. Aptitude Test
  2. GD
  3. Technical Interview
  4. HR Interview
  5. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    Chennai Amazon Jobs – Apply Here

Editor's Choice

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சால் கடுமையாக திணறியது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் ஆல் அவுட்டானது.

இந்நிலையில் மைதானத்தில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரசிகர்களை பார்த்து விசில் அடித்து, கைதட்டி உற்சாகப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்களும் பதிலுக்கு விசில் அடிக்க, பிகில் பட காட்சி போல், சத்தமா.. சரியா கேட்கல என்பதுபோல் விராட்கோலி சைகை காட்ட ரசிகர்கள் மேலும் சத்தம் போட்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில்  இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Editor's Choice

டெல்லி எல்லை பகுதியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேசத்தை விவசாயிகள், திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லையில்  விவசாயிகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் ஜனவரி 26 அன்று டெல்லியில் ஒரு டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதில் பெரிய அளவிலான வன்முறை நடைபெற்று, செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. சுமார் 500 காவல் துறையினர் காயமடைந்தனர். 

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்த ஸ்வீடன் நாட்டின் சுற்று சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், தவறுதலாக, சதி திட்ட விபரங்கள் அடங்கிய  டூல் கிட் என்னும் ஒரு தொகுப்பை பகிர்ந்து கொண்டதில், தில்லியில் நடக்கும் போராட்டத்தின் சர்வதேச சதி அம்பலமாகியது. 

கிரெட்டா பகிர்ந்த டூல் கிட் தொகுப்பில் ஜனவரி 26 போராட்டங்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ட்வீட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை டேக் செய்ய வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதை அடுத்து,  இந்த டூல் கிட் தொகுப்பை பதிவேற்றியவர்களின் கணிணி ஐபி முகவரியைக்  கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை கூகிளின் உதவியை நாடியது. 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது சுற்று சூழல் ஆர்வலரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. திஷா ரவி டூல் கிட்டில், சில மாற்றங்களை செய்து பின்னர் அதை அவர் மற்றவர்களுக்கு அனுப்பினார் என காவல் துறை கூறியது.

ராகேஷ் டிக்கைட் மற்றும் பிற வேளாண் சங்க தலைவர்கள் மீது யுஏபிஏ மற்றும் பிற கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

சாக்லேட் தினத்தன்று பெண் மருத்துவருக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூர மருத்துவர்..!

மீரட் மாவட்ட மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த, சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  பெண் மருத்துவர் இரவு  பணியில் (night duty) இருந்த நேரத்தில், அவர்  அறைக்குச் சென்றபோது, டாக்டர் விவேக் அறைக்கு அவளைப் பின்தொடர வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பெண் மருத்துவருக்கு சாக்லேட் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இப்போது இந்த வழக்கின் புகார் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் சம்பவம் நடந்ததில் இருந்து டாக்டர் விவேக் தலைமறைவாக உள்ளார்.  இந்த வழக்கில், மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட மருத்துவமனையின் நிர்வாகம் கூறுகிறது.

 

Editor's Choice

அழியாக் காதல், மாளாக் காதல், மீளாக் காதல் என காதலில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், யானைக் காதல் பற்றித் தெரியுமா? இதோ யானையில் அமர்ந்து காதலை திருமண பந்தத்தில் மாற்றிய 59 ஜோடிகள்…

மாத்தி யோசி என்பது இன்றைய தலைமுறையினரின் தாரக மந்திரமாக இருக்கிறது. ’பழைய கள்ளு, புதிய மொந்தையில்’ என்ற பழமொழியை உண்மையாக்குவதைப் போல, திருமணம் என்ற சமூக பந்தத்தில் இணையும் நிகழ்ச்சியை புது மாதிரியாக நடத்தியிருக்கின்றனர்.  

மணமேடையில் அமர்ந்து, நல்ல நாள், முகூர்த்த நேரம் பார்த்து தாலி கட்டிக் கொள்வது வழக்கம். அந்த வழக்கம் என்ற பழக்கத்தை மாற்றிக் காட்டியுள்ளனர் தாய்லாந்து நாட்டின் காதலர்கள்.

தாய்லாந்தைச் சேர்ந்த இந்த ஜோடிகள் காதலர் தினத்தில் யானைகளின் மேல் அமர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தனர். 

கிழக்கு பாங்காக் மாகாணத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் காதலர் தினத்தன்று இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த பிரம்மாண்ட விழாவில் ஐம்பத்தி ஒன்பது தம்பதிகள், யானை சவாரி செய்துக் கொண்டே திருமணம் செய்து கொண்டனர்.

மேள தாள வரவேற்புடன் யானைகளின் ஊர்வலம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி என்றால், நடனக் கலைஞர்கள் நர்த்தனமாட, இசைக் கலைஞர்கள் இசைத்திட வித்தியாசமான திருமண நிகழ்வு பிரம்மாண்டமானதாக இருந்தது.

தம்பதிகள் மட்டுமா யானையில் பயணம் செய்தனர். திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரியும் ஒரு யானையில் அமர்ந்து திருமண உரிமத்தில் தம்பதிகள் கையெழுத்திட்டதை மேற்பார்வையிட்டார்.

யானையில் அமர்ந்து திருமணம் செய்யும்  இந்த பாரம்பரியம் சோன்பூரி மாகாணத்தில் உள்ள நோங் நூச் என்ற தோட்டத்தில்  ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும், பொதுவாக இதில் நூறு ஜோடிகள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மணமக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒதுக்கி வைத்த தாய்லாந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் விதித்த பயணத் தடையை இன்னும் நீக்கவில்லை.
தாய்லாந்து சுற்றுலாவை மையமாக கொண்ட நாடாக இருந்தாலும், பயணத்தடையை இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 37 / 74