Editor's Choice
வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்.
 
அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
 
ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும்.
 
மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.
 
தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.
 
நடைமுறைகள்!
 
முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
 
அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.
 
இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.
 
பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.
 
இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
 
சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.
 
பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.
 
மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
 
அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.
 
சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
 
இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.
 
பள்ளி_மாற்றுச்_சான்றிதழ்!
 
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.
 
விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும்.
 
இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.
 
எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம்.
 
இணைக்க_வேண்டிய_ஆவணங்கள்
 
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.
 
கல்லூரிச்_மாற்றுச்_சான்றிதழ்
 
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.
 
அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்.
 
அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.
 
பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 
பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.
 
அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.
 
பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
 
இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
 
மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.
 
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்
 
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
 
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.
 
இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
 
மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.
 
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.
 
தனித்தேர்வர்களுக்கு
 
தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
 
Editor's Choice
1. ஒப்பந்த தேதி அவசியம்
 
2. விற்பவரின் பெயர் மற்றும் விலாசம், வாங்குபவரின் பெயர் மற்றும் விலாசம் மிக அவசியம்
 
3. சொத்தின் மதிப்பு
 
4. அட்வான்ஸ் தொகை விவரம்
 
5. எவ்வளவு காலத்துக்குள் சொத்தை வாங்கி கொள்ள வேண்டும் அல்லது எவ்வளவு காலத்துக்குள் விற்று விட வேண்டும் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
 
6. அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு அது போக மீதி தொகை விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
 
7. குறிப்பிட்ட காலத்தில் இந்த விஷயங்கள் நடக்காவிட்டால், வரும் சட்ட சிக்கல்களை எழுத்தால் குறிப்பிட வேண்டும்.
 
8. யார் தவறு இழைத்தார்களோ, அவர் மேல் நடவடிக்கை பாயலாம் என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்
 
9. அப்படி சட்டம் பாய்ந்தால், அதற்கு தவறு இழைத்தவர்களே சட்ட செலவுகள் இன்ன பிற செலவுகளையும் ஏற்க வேண்டும் என எழுத வேண்டும்
 
10. சொத்து வாங்குபவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துகளை வாங்க வில்லை என்றால் அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
 
11. சொத்தை விற்பவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்தை ஒப்படைக்கவில்லை என்றால், அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
 
12. சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டும்
 
13. சொத்தின் எல்லைக்குள்பட்ட சார்பதிவாளர் அலுவகத்தில் கட்டாயம் பதிய வேண்டும்.
 
14. இரண்டு சாட்சிகள் அவசியம்
 

சட்ட ஆலோசகர் S. ஆனந்தன்

Editor's Choice

ஆவணங்கள் பதிவு செய்தல்

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் வழங்குதல்

வில்லங்கச் சான்றிதழ் வழங்குதல்.

சங்கங்கள் பதிவு செய்தல்

கூட்டு நிறுவனங்கள் பதிவு செய்தல்

சீட்டு நடவடிக்கைகளை கண்காணித்தல்

பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல்.

இந்து திருமணங்களை பதிவு செய்தல்

தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல்

சிறப்பு திருமணங்களை நடத்தி வைத்தல் மற்றும் பதிவு செய்தல்

அந்தந்த திருமணச் சட்டங்களின் கீழ் சான்றிதழ் வழங்குதல்

இந்திய கிருத்துவ திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின்

சான்றிதழ் வழங்குதல்

பார்சி திருமணம் பதிவு செய்தல்

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய இணையதள சேவைகளைப் பொருத்து பிரத்தியேகமாக 24 X 7 ஓர் வலைதளம் www.tnreginet.gov.in அமைக்கப்பட்டுள்ளது.

 இணையதள சேவை மூலமாக வில்லங்கச் சான்று, சான்றளிக்கப்பட்ட நகல், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றிற்கான விண்ணப்பம் செய்தல். 

வில்லங்கச் சான்றிதழ் / திருமணச் சான்றிதழ்/ சங்கப் பதிவுகள் / சான்றிடப்பட்ட நகல்கள் வழங்குதல்.

பதிவு செய்த சங்கங்கள் சம்மந்தப்பட்ட விவரங்கள் / பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட சீட்டுகளின் விவரங்கள்.

பதிவு செய்யப்பட்ட இந்து திருமணங்களின் விவரங்கள்.

2002, 2003, 2007, 2012 ஆண்டுகள் மற்றும் தற்போதைய 09.06.2017ம் தேதி முதல் நடைமுறையிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக் குமான வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் உள்ளது.

ஆவணங்கள் பதிவு செய்தல்.

Editor's Choice
தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, பெரம்பலுார், கடலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உட்பட, 23 மாவட்டங்களைச்சேர்ந்த, 2,500 இளைஞர்களை தேர்வு செய்து, ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்க, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரியில், 2 மையம்; அம்மாபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தலா ஒன்று; மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என, மொத்தம், ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிச., மாதம் முதல், பயிற்சி துவங்குகிறது.

ஓவன் ஆடை உற்பத்தி டெய்லர், பின்னலாடை டெய்லர், செக்கிங், உற்பத்தி மேற்பார்வையாளர், மெர்ச்சன்டைசர், பேஷன் டிசைனர், தர கட்டுப்பாடு நிர்வாகி என, ஏழுவகை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இது குறித்து, நிப்ட்-- டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:கிராமப்புற இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஏழுவகை பயிற்சிகள் உள்ளன; இளைஞர்கள், கல்வித்தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இரண்டு ஆண்டுகளில், 2500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; முதல்கட்டமாக, 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.இத்திட்டத்தில், 4 முதல் 5 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும் தங்குமிடம், உணவு இலவசம். போக்குவரத்து செலவும் திரும்ப வழங்கப்படும்.டெய்லர், செக்கிங் பயிற்சிக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். பேஷன் டிசைனருக்கு, பிளஸ்2 படித்திருக்க வேண்டும். 

பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்தாலோ அல்லது, நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாக இருந்தால், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், இணைய விருப்பம் உள்ளோர், 97914 83111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Editor's Choice
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது.
 
பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது.
 
பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
 
பட்டா பெயர் மாற்றம்
 
ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும்.
 
நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர்.
 
இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
 
முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம்.
 
அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
 
அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது என்று சொல்லலாம்.
 
உட்பிரிவு பட்டா
 
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம்.
 
அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும்.
 
நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.
 
உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும்.
 
அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.
 
கவனமாக இருக்க வேண்டும்
 
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும்.
 
அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.
 
அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.
 
காலம் தாழ்த்தக்கூடாது
 
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும்.
 
அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.
 
அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
 
மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும்.
 
அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.
 
சட்ட ஆலோசகர் S. ஆனந்தன்
 
Editor's Choice

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் (Farmers Training Center) காளான் மற்றும் காடை வளர்ப்பு குறித்து அடுத்த மாதம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எதையும் முறையாகக் கற்றுக்கொண்டால், திறம்பட செயலாற்றி, எண்ணிய இலக்கை அடைய முடியும். அந்த வகையில், காளான், காடை, நாட்டுக்கோழி, வெள்ளாடு உள்ளிட்டவற்றை வளர்ப்பதில் உள்ள யுக்திகளைக் கற்றுக்கொண்டால், அதிக லாபம் ஈட்ட முடியும்.

அவ்வாறு கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் இயங்கிவரும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் பயிற்சி மையம், அவ்வப்போது பயிற்சிகளை அளித்து ஊக்குவித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை:

6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்
8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள்
20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
22.10.2020 பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், பதிவு அவசியம்.
இந்த பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் மையத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பக்கம் 83 / 90