Editor's Choice

அதிகளவில் தண்ணீர் அருந்தினால் சீறுநீரக வேலை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது உங்களுக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம். ஏனெனில் நமது நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறப்பினர்கள் அனைவருமே எப்போதும் அதிக தண்ணீரை அருந்துமாறுதான் நம்மிடம் பரிந்துரைப்பார்கள். இதை பற்றி நியூட்ரிஷியன் என்ற இதழ் ஒரு ஆய்வை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அதிகப்படியான நீரை அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை பராமரிக்க முடியாமல் போய்விடும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த குழப்பங்களால் உங்களுக்கு சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

உடலின் ஆற்றலுக்கு எலக்ட்ரோலைட் உதவுகிறது. இந்த எலக்ட்ரோலைட் சமநிலையில் இருக்க நீர் உதவுகிறது. இந்த எலக்ட்ரோலைட்டுகளை அடிப்படையாக கொண்டே நமது ஆற்றலின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு சோர்வும் மயக்கமும் நேரிட கூடும்.

எப்போதும் உங்கள் உடலில் நீரேற்றத்தின் அளவை சரிப்பார்க்க வேண்டும். அதற்கு சிறந்த வழி உங்கள் சிறுநீரின் நிறத்தை சரிப்பார்ப்பதே ஆகும். உங்கள் சிறுநீரானது மிகவும் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் உங்களுக்கு குறைந்த நீரிழப்பு இருக்கிறது என பொருளாகும்.

ஆனால் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் உங்கள் நீரேற்ற நிலை சரியாக உள்ளது என பொருளாகும். ஆனால் அதிக நீர் குடிப்பவர்களுக்கு சிறுநீர் தண்ணீர் நிறத்தில் இருக்கும். அவர்களுக்கு அதிக நீரிழப்பு இருப்பதற்கான அறிகுறியாகவே சிறுநீர் நிறமற்று வெளியாகிறது.

 அதிகப்படியான நீரிழப்பிற்கு முதல் அறிகுறியே அதிகமாக சிறுநீர் கழிப்பதே ஆகும்.  

இரத்தத்தில் சோடியமின் அளவு குறைய இந்த அதிகளவு தண்ணீர் அருந்துவது காரணமாக உள்ளது. சாதரணமாக அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் அதனால் உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

 

Editor's Choice

வைட்டமின் சி உங்கள் அழகு வழக்கத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் பல்வேறு வழிகளைக் கண்டறிய தொடர்ந்து படியுங்கள்.

கொழுப்பு, தசைநார்கள், இரத்த நாளங்கள் மற்றும் நமது சருமத்தை ஒன்றாக ஆதரிக்க உதவும் ஒரு புரதமான கொலாஜனை உற்பத்தி செய்யும் உடலின் திறனில் வைட்டமின் சி ஒரு முக்கிய பகுதியாகும். இதைச் சுருக்கமாக: கொலாஜன் உற்பத்தி உங்கள் நகங்களை உள்ளே இருந்து பலப்படுத்தும்.

மயிர்க்கால்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இரும்பை உறிஞ்சுவதற்கும், தொல்லைதரும் பிளவு முனைகளை நீக்குவதற்கும் சூப்பர் வைட்டமின் போதுமானது.

வைட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரிகளையும், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தவும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படலாம். உங்கள் தோல் பராமரிப்பு வரிசையில் மாய்ஸ்சரைசர் அல்லது சீரம் போன்ற வைட்டமின் சி பேக் செய்யப்பட்ட தயாரிப்பை இணைப்பது சூரியனின் தேவையற்ற விளைவுகளை உங்கள் நிறத்திற்கு மாற்றும்.

மெலனின் அதிகரிப்பு காரணமாக சருமத்தில் நிறமியை உருவாக்குகிறது மற்றும் ஹார்மோன்கள், சூரியன் அல்லது முகப்பரு அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற அழற்சியின் விளைவாக இருண்ட புள்ளிகள் ஏற்படுகின்றன. மேற்பூச்சு வைட்டமின் சி என்பது சூரியனுக்கு அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக ஏற்படும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் வயதான ஆரம்ப அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த வழியாகும்.

 

Editor's Choice

இந்தியாவில் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் செயலி. நம்மில் பெரும்பாலோர் பல்வேறு நோக்கங்களுக்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம். தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் அணுகவில்லை என்று உறுதியாக சொல்லிவிட முடியுமா?  நமது அந்தரங்க விஷயங்களில் யாராவது தந்திரமாக முயன்றால் அதை சாமார்த்தியமாக முறியடிக்க இந்த குறிப்புகள் உதவும்.

1- இரட்டை அங்கீகாரம்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப்-இன் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் யாருக்கும் கிடைக்க வேண்டாம் என்பதை இரட்டை அங்கீகாரத்தை (Two-factor authentication) எப்போதுமே செயல்படுத்தவும்.

2- கைரேகை பூட்டு (Finger print lock)

உங்கள் வாட்ஸ்அப் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்களைப் பாதுகாக்க கைரேகை மூலம் (Finger print lock) பூட்டிவிடலாம்.

முன்னதாக, வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) இப்போது இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவிருப்பதாக அறிவித்திருந்தது. 

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு, பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் கட்டண சேவை நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) ஒப்புதல் பெற்றது, 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) இணைந்து செயல்படவிருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப் தனது யுபிஐ பயனர் தளத்தை தரப்படுத்தப்பட்ட முறையில் விரிவாக்க முடியும், பதிவுசெய்யப்பட்ட பயனர் தளத்தில் 20 மில்லியன். "UPI ஒரு உருமாறும் சேவையாகும், இதற்கு முன்னர் எங்கள் டிஜிட்டல் (Digital), பொருளாதாரம் (Economic) மற்றும் நிதி பரிமாற்றம் ஆகியவற்றின் நன்மைகளை அதிக அளவில் பயனர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் கூட்டாகக் மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியாவின் வாட்ஸ்அப்பின் தலைவர் அபிஜித் போஸ் (Abhijit Bose) கூறினார். பேஸ்புக் நடத்திய 'Fuel for India' என்ற மெய்நிகர் நிகழ்வின் போது இதை அபிஜித் போஸ் தெரிவித்தார்.

Editor's Choice

பொலிவு பெறும் சருமம்

மிக உலர் சருமம் மற்றும் எளிதில் பாதிக்க கூடிய சருமத்தை நீங்கள் பெற்றிருந்தால், ஒளிப்படங்களில் தோன்றும் போது, மேக்கப் அதை மேலும் அதிகமாக்க செய்யலாம். உலர் சரும பிரச்சனையை எதிர்கொள்ள, டீ ட்ரி ஆயிலை, பாதம் எண்ணெயுடன் கலந்து, படுக்க செல்லும் முன் உங்கள் முகத்தில் தடவிக்கொள்ளவும். இது அழமான நீர்த்தன்மை அளிப்பதோடு, கரு வளையங்களையும் அகற்றும்.

மிக மென்மையான பாதங்கள்

திருமண வைபவத்தின் போது நீங்கள் உலர் பாதத்துடன் காட்சி அளிக்க விரும்பமாட்டீர்கள். உங்கள் பாதத்தின் மீது வாசலின் தடவி, அதன் மீது பருத்தி சாக்ஸ் அணிவதன் மூலம் குழந்தை போன்ற மென் சருமத்தை பெறலாம். உலர் மற்றும் கோடுகள் கொண்ட பாதங்களுக்கு இது மிகவும் செயல்திறன் வாய்ந்த சிகிச்சையாகும்.

பளிரிடும் பற்களுக்கு

திருமண தினத்தன்று யாரும் மஞ்சள் படிந்த அல்லது துகள்கள் சிக்கிய பற்களுடன் காட்சிகள் அளிக்க விரும்ப மாட்டார்கள். சிவப்பு லிப்ஸ்டிக், பற்களின் மஞ்சள் தன்மையை மேலும் அதிகமாக்கி, தோற்றத்தை பாதிக்கலாம். உங்கள் டூத் பிரெஷ்சில் பேக்கிங் சோடா அல்லது கறி தூவி பல் தேய்த்தால், பளிரிடும் பற்களோடு மின்னும் புன்னகை பெறலாம்.

எதிர்பாராத பிரேக் அவுட்

திருமண நாளுக்கு முன், கண்டறியப்படாத பிரேக் அவுட்கள் மிகுந்த சங்கடத்தை அளிக்கலாம். படுக்க செல்லும் முன், கொஞ்சம் பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் இதை அகற்றலாம். இது பருக்களையும் உலர வைத்து, வடுக்களையும் விட்டுச்செல்லாமல் இருக்கும்.

Editor's Choice
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.
 
* சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
 
• நெற்றியின் முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுகிறது. கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைகிறது.
 
• நெற்றியில் குங்குமம் வைப்பதன் மூலம் அறிவாற்றலை அதிகப்படுத்த முடியும்
 
* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.
 
* குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
 
* பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
 
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
 
* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
 
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
 
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
 
*  கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
 
* குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
 
* சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக்  கட்டுபாட்டிற்கு நல்லது.
 
Editor's Choice
சீரகத் தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
 
சீரகத் தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வந்தால் சுகப் பிரசவம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். 6 மாதக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டால் சீரகத் தண்ணீரை வயதிற்கேற்ப கொடுத்துவரலாம்.
 
சுகப் பிரசவம் நிகழ்ந்த பின்னரும் பாலூட்டும் தாய்மார்கள் சீரகத்தினை அதிக அளவு எடுத்துக் கொண்டால் பால் அதிகம் சுரக்கும், மேலும் ஆஸ்துமா, சளி, இருமல்  பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தில் டீப் போட்டு குடிக்கலாம்.
 
பித்தம், கபம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தினை சாதத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தினமும் காலையில் சீரக டீ குடித்து வந்தால்  உடல் புத்துணர்ச்சி பெறும். மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.
 
சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில்1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் அது பல உடல் உபாதைகளை நீக்குகிறது.
 
செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்தால் வயிறு வலி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், வாயுத் தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த  தீர்வாக உள்ளது.

பக்கம் 78 / 90