Editor's Choice
கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின. திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
 
திருவனந்தபுரம் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 25-ம் தேதி, நடைபெற்ற மாவட்ட செயலகக் கூட்டத்தில் அவரை மேயராக்க சிபிஎம் முடிவு செய்தது. 
 
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆர்யா ராஜேந்திரன் இன்று திருவனந்தபுரத்தில் மேயராக பதவி ஏற்றார். இதனால் கேரளாவில் 21 வயதில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார். புதிய மேயருக்கு மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Editor's Choice

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.

 
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
 
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
 
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.
 
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
 
இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
 
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
 
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
 
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.
 
Editor's Choice

பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரான்சின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடப்பதாகவும், உள்ளே இருந்து கூக்குரல் கேட்பதாகவும் இன்று அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சென்று சண்டை நடந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு பெண் அந்த வீட்டின் கூரை மீது நின்று தன்னை காப்பாற்றும்படி கதறி உள்ளார். அவரை போலீசார் காப்பாற்ற முயன்றனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அந்த நபர், தனது வீட்டிற்கும் தீ வைத்தார். வீட்டின் கூரையில் நின்றிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். தாக்குதல் நடத்திய நபர், சிறிது நேரத்தில் அவரது காருக்குள் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. குடும்ப சண்டையை தடுக்க சென்ற போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Editor's Choice

ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் தினமும் தேன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இதயநோய் வராமல் விரட்டி அடிக்கும் அற்புத சக்தி தேனிற்கு உள்ளது. இதனுடன் லவங்கப்பட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், பல்வேறு அற்புதங்கள் உண்டாகும்.

* தினமும் 2 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப் பவுடர் சேர்த்துச் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும்.

* தேனுடன், லவங்கப்பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீரும்.

* 2 டீஸ்பூன் லவங்கப்பொடியுடன், 1 டீஸ்பூன் தேனை மிதமான சுடுநீரில் கலந்து குடித்துவர சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

* தேனுடன், லவங்கப்பொடியைச் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*வயதானவர்கள் தினமும் காலையில் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் தேனுடன், லவங்கப்பொடியை நன்கு தூவி சாப்பிட இழந்த சக்தியை மீண்டும் பெற முடியும்.

*தினமும் காலையில் தேனையும், லவங்கப்பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.

*தேனையும், லவங்கப்பொடியையும் சம அளவில் கலந்து இருவேளைகளிலும் சாப்பிட்டு வர காது மந்தம் குணமாகிவிடும்.

*உணவு உண்பதற்கு முன்பாக உணவில் 2 டீஸ்பூன் தேனுடன், சிறிது லவங்கப்பொடியை தூவிச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.

* என்றும் இளமையுடன் இருக்க மிதமான சுடுநீரில் 4 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியைக் கலந்து பருகி வர இளமை நிரந்தரமாகும்.

* தினமும் மூன்று வேளையும் 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பொடியை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்துபோகும்.

* தேன், லவங்கப்பொடி இரண்டையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு ஒன்றாகக் கலந்து, சருமத்தில் ஏற்படும் நோய்களான சொறி, படைகள் மீது பூசி வர குணமாகும்.

* தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மிதமான சுடுநீரில் தேனையும், லவங்கப்பொடியையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடலின் எடை குறையும்.

* 1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை சேர்த்து தினமும் 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் குறையும்.

Editor's Choice
கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேயி நகரம் மூழ்கிப் போனது. மண்ணுக்குள் புதைந்து போன இத்தாலி நாட்டின் பாம்பெயி நகரத்தில் தெருவோர துரித உணவகம் செயல்பட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இந்த உணவகம் இயங்கி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஓவியத்தில் காணப்படும் படங்கள், இந்த துரித உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
மேலும் பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன.
 
'டெர்மோபோலியம்' என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு வகைகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் கூஜாவில் உணவு வைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இங்கு கண்டெடுக்கப்பட்ட உணவுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் முதன்முறையாக முழுமையான ஒரு உணவகத்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Editor's Choice

 விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வரும் புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் டிரைலரை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள்  காத்துள்ளனர்.
 
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தளபதி விஜய்யின் படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. 

பக்கம் 60 / 74