Editor's Choice

வாழைப்பழம் சாப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தோலை தூக்கி எறிகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தின் தோலிலும் பல நன்மைகள் உள்ளன.  

1. வாழைப்பழத் தோலை உங்கள் சருமத்தில் தேய்த்துக்கொண்டால் சருமம் பிரகாசமாகும், சுருக்கங்கள் குறையும்.
2. கண் வீக்கம் அல்லது வலி இருந்தால், கண்களை மூடி, அதன் மேல் வாழைப்பழத் தோலை வைத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். 
3. சருமத்தில் நீரோட்டத்தை  அதிகரிக்க வாழைப்பழத் தோல் மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது.
4. முகப்பரு வடுக்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும். 
5. சோரியாசிஸ் அதாவது தடுப்புத் தோல் பிரச்சனை உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது ஈரப்பதத்தை அளித்து நமைச்சலையும் தடுப்புத் தன்மையையும் நீக்கும். 
6. மருவை அகற்ற, ஒரு பழுத்த வாழைப்பழத் தோலை அதன் மேல் வைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விட வேண்டும்.

வாழைப்பழத்தோலில் அதிக பீனாலிக்ஸ் இருக்கின்றன என்றும் இவற்றில் அதிக ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டியாக்சிடெண்ட் பண்புகள் உள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்றும் 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோலில் கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

வாழைப்பழத்தை கூந்தலுக்கான ஒரு மாஸ்காக பயன்படுத்தலாம் என கூந்தல் ஆரோக்கிய நிபுணர்கள் கருதுகிறார்கள். இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. 

2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி, வாழை தோல்கள் ஆக்டினோமைசெட் டெம்கிமிட்டன்ஸ் மற்றும் ஜிங்கிவாலிஸுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த பாக்டீரியாக்கள் ஈறு வீக்கம் மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பீரியண்டால்ட் நோய்களுக்கு வழிவகுக்கின்றன். வாழைப்பழத் தோலை பற்களில் தேய்ப்பது பற்களை வெண்மையாக்குவதோடு ஈறுகளையும் வலுப்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

வாழை தோல்களில் ஆண்டிமைக்ரோபையல், ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இவை முதலுதவிக்கு பெரிதும் உதவுகின்றன என நாட்டுப்புற மருத்துவத்தில் உறுதியாக நம்பப்படுகின்றது:

1. வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், நமைச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கவும், பூச்சிக்கடிக்கும், விஷக்கடிகளுக்கும், சிறு கொப்பளங்களுக்கும் வாழைப்பழத் தோல் நல்ல நிவாரணமாக இருக்கும். 

2.  வாழைப்பழத்தோலை நெற்றியிலும் கழுத்தின் பின்புறத்திலும் வைப்பதால் தலைவலி குறையும். 

3. தோலில் சிறு பிளவு ஏற்பட்டால், அந்த இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலை 15 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், சருமத்தின் மேற்பரப்பில் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

Editor's Choice

இந்தியாவில்  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என, இரு கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகளை செலுத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் மீது தடுப்பூசி ஆய்வுகள் நடத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கடந்த மே மாதம் 11ம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பாட்னாவில் ஏற்கனவே 12 - 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ள நிலையில்,  ஜூன் 7 முதல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 2 - 6 மற்றும் 6 - 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி ஆய்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நாடு முழுவதும் உள்ள உடல் வலிமை மிக்க 525 தன்னார்வலர்களுக்கு நடத்தப்படும் எனவும், அவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்' எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
Editor's Choice

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத்தொடங்கி 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது அலை போல் இரண்டாவது அலையிலும் தமிழகத்தில் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோரில் பெரும்பாலானவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை. 

இது தொடர்பாக பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டது. பொது சுகாதாரத்துறையினர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தின் 765 இடங்களில் பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மொத்தம் 22 ஆயிரத்து 904 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. 

இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுசுகாதாரத்துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவில் 23 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளது. முழு விவரம் இங்கே காண்க.,

திருவள்ளூர்: 49 சதவீதம் 
செங்கல்பட்: 43 சதவீதம்
காஞ்சிபுரம்: 38 சதவீதம்
நாகப்பட்டினம்: 9 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புதிறன் உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இதே போன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 31 சதவீதம் பேருக்கு எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டது. 22690 இல் 6995 மாதிரிகள் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகக் கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுவதற்கு முன்பே ஆய்வு நடத்தப்பட்டதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் உருமாறி வீரியம் அடைந்து இருப்பதும் எதிர்ப்பாற்றல் உருவாகாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது.

Editor's Choice

இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருப்பது இந்தியாவில் இந்த தொற்று அதிகரிப்பதற்கான ஒரு காரணம் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக உலகம் முழுவதும் சுமார் 38 நாடுகளில் கருப்பு பூஞ்சை தொற்று என்று சொல்லக்கூடிய இந்த மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஆண்டு ஒன்றிற்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என பூஞ்சை தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூஞ்சை தொற்றுகள் குறித்த நிபுணர் டேவிட் டென்னிங், பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் வேறு எந்த நாட்டை காட்டிலும் இந்த தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறார்.

"கருப்பு பூஞ்சை தொற்று, மோசமாக கையாளப்படும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. அது இந்தியாவில் அதிகம் உள்ளது," என்கிறார் அவர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர்களில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 94 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 71சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் அதிகம் பேருக்கு நீரிழிவு உள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை.

அமெரிக்காவில் அதிக அளவில் நீரிழிவு கொண்டவர்கள் உள்ளனர். கிட்டதட்ட அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல அங்குதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இருப்பினும் மியூகோர்மைகோசிஸ் அரிதாக ஏற்படுகிறது. அங்கு நீரிழிவு உள்ளவர்களில் வெறும் 3 சதவீதம் பேர்தான் அதுகுறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்கள் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கையில் நீரிழிவு உள்ளவர்களில் சுமார் 57 சதவீதம் பேருக்கு நீரிழிவு இருப்பது கண்டறியப்படவில்லை எனவும் அந்த எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்று தெரிவிக்கிறது.

"இந்தியாவில் பலர் முறையான உடல் நல பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை என்பதால் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு அங்கு அதிகமாக உள்ளது".

பலருக்கு பிற நோய் பாதிப்பு ஏற்படும்போதுதான் நீரிழிவு குறித்து கண்டறியப்படுகிறது என்றும், மேலும் பலர் அதற்கான முறையான சிகிச்சை எடுத்து கொள்வதில்லை.

சரியான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றால் நீரிழிவு நோய் மேலும் பல தொற்றுகளுக்கு வித்திடும். அதில் பூஞ்சை தொற்றும் ஒன்று.

திசு மாதிரி எடுப்பதில் உள்ள சிரமம், நீரிழிவு நோய் சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஆகியவை கருப்பு பூஞ்சை தொற்றுகள் கண்டறியப்படாமல் இருப்பதற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்டீராய்டுகளை அதிகப்படியாக பயன்படுத்துவதும் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் டெக்சாமெதாசோன் மற்றும் மிதைல்ப்ரெட்னிசொலோன் ஆகிய இரண்டு ஸ்டீராய்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

அதிகப்படியான ஸ்டீராய்டுகள் நல்லது அல்ல என்பது ஆய்வுகளின் மூலம் நன்றாக தெரிகிறது என்கிறார் மருத்துவர் டென்னிங்.

Editor's Choice

பெண்களுக்கு, குறிப்பாக சர்க்கரை கோளாறு இருக்கும் பெண்களுக்கு, சிறுநீரக தொற்று ஏற்படுவது சகஜம். இதற்கு, மிக பொதுவான காரணம், இயற்கையிலேயே பெண்களின் சிறுநீரகக் குழாயின் நீளம் மிகவும் சிறியது என்பது தான். இது தவிர, சிறுநீரகங்கள் முழுக்க தொற்றை ஏற்படுத்தும், 'லோநெப்ரைடீஸ்' என்ற நிலை, சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஏற்படும். இதுவும் பொதுவான விஷயம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிலருக்கு அதிக காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது என, ஒன்றோ, ஒன்றுக்கும் அதிகமான அறிகுறிகளோ இருக்கும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாமலும் இருக்கும். சிறுநீரக தொற்று இருந்தால், அடிவயிற்றில் வலி அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அழுத்தம், ஒருவிதமான அசவுகரியமான உணர்வு இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது, கட்டுப்பாடு இல்லாமல் போவது, சிறுநீர் கழித்த சில நிமிடங்களில், மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கு இருக்கும்.

நம் உடலில், குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது, பாக்டீரியா அதிக அளவில் பெருகும். எந்த பகுதியில் சர்க்கரை அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் பாக்டீரியா வளரும். காரணம், பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்கு, சர்க்கரை பிரதான உணவு.

சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, சிறுநீரில், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பாக்டீரியா கிருமிகள் அதிகம் வளர்ந்து, தொற்று பரவி விடும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சர்க்கரையின் அளவு, ரத்தத்தில் அதிகரிக்கும் போது, நரம்புகளின் கட்டுப்பாடு குறைந்து விடும். இதனால், சிறுநீரை கட்டுப்படுத்தும் திறன் குறையும்.

அடிவயிற்றை தொட்டாலே, ஒரு டாக்டரால் இதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அடிவயிற்றை அழுத்தும் போது வலி இருக்கும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். சிறுநீரில் ரத்தக்கசிவு இருந்தாலும், அது தொற்றின் அறிகுறி தான்.

பாக்டீரியா தொற்று, ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை துாண்டுவதால், சிறுநீரில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. பாக்டீரியா தவிர, பூஞ்சை தொற்றும் காரணமாக இருக்கலாம்.

தொற்று இருப்பது தெரிந்தவுடன், 'ஆன்டிபயாடிக்' மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. முதலில், சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவு, 48 - 72 மணி நேரத்தில் கிடைக்கும்.
என்ன வகை பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது, எந்த அளவு கிருமிகள் வளர்ந்திருக்கிறது, மாத்திரைகளால் இதை கட்டுப்படுத்த முடியுமா, ஊசி மருந்து தேவைப்படுமா என தெரிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சையை துவக்க வேண்டும்.

அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்பட்டால், 'அல்ட்ரா சவுண்டு' பரிசோதனை செய்ய வேண்டும். இதில், சிறுநீரக குழாய், சிறுநீரக பைகளில் தொற்று உள்ளதா என தெரிந்து விடும். சிறிய கற்கள் இருந்தாலும் தெரிந்துவிடும். அல்ட்ரா சவுண்டு அல்லது சி.டி., ஸ்கேன் செய்தால் மட்டுமே, முழுமையாக தெரியும்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றினால், உடனடியாக கழித்து விட வேண்டும். அதிக நேரம் அடக்கியபடி இருக்கக் கூடாது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உள்ளாடை, பருத்தியால் ஆன, வெளிர் நிறமாக இருக்க வேண்டியது அவசியம்.சர்க்கரை நோயாளிகளுக்கு, சாதாரணமாகவே தாகம் அதிகம் எடுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் பாதை முழுவதும் வறட்சியாகி, பாக்டீரியா வளர்வது, இன்னும் எளிதாகி விடும்.

பொதுக் கழிப்பிடங்களை பயன்டுத்தும் போது, கவனமாக இருக்க வேண்டும். இந்திய முறை கழிப்பறை, மற்றவற்றை விடவும் பாதுகாப்பானது. மேற்கத்திய முறை கழிப்பறையை பயன்படுத்தினால், பயன்படுத்துவதற்கு முன் துடைக்க வசதியாக, கண்டிப்பாக, 'டிஷ்யூ பேப்பர்' கொண்டு செல்ல வேண்டும். சர்க்கரை கோளாறு இருக்கும் பெண்கள் என்றில்லை; பெண்களுக்கே சிறுநீரக தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கழிப்பறை கவர்களை, வெளியிடங்களுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது நல்லது. கழிப்பறையை பயன்படுத்தும் போது, சுத்தம் செய்வதற்கு தண்ணீர் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இதற்கென்றே இருக்கும் திரவங்களை, எரிச்சல், வலி இருக்கும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சராசரி சர்க்கரை அளவை பரிசோதிக்கும் சோதனையை செய்து கொள்வது அவசியம்.

பெண்களிடம் சுய சுகாதாரம் குறைவாகவே உள்ளது. வீட்டை, குழந்தைகளை பார்க்கிறோம் என, தங்களை பார்த்துக் கொள்வதில்லை. ரத்த சர்க்கரையின் அளவையும், கட்டுக்குள் வைப்பதில்லை. தொற்று ஆரம்பித்த உடன், டாக்டரிடம் வருவதில்லை. அவர்களாக வீட்டு வைத்தியம் செய்து, முடியாத பட்சத்தில் வருவதும் அதிகம்.
இதனால், சிறுநீர் குழாயில் ஏற்பட்ட தொற்று, சிறுநீர் பைகளுக்கு சென்று விடுகிறது. இந்நிலையில், மாத்திரை மட்டும் வேலை செய்யாது. ஊசி மூலம் அதிக, 'டோஸ்' உள்ள மருந்து தர வேண்டும். தொடர்ந்து, இரண்டு மாதங்கள் கூட மருந்து தேவைப்படலாம்.

டைப் - 1 நீரிழிவு உள்ள, 20 வயதிற்குட்பட்ட பெண்கள், மாதவிடாய் நேரத்தில், நாள் முழுவதும் நாப்கினை மாற்றுவதேயில்லை. இதனாலும், தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு, நான்கு முறையாவது, நாப்கின்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் சிறுநீரக தொற்று ஏற்படாது.

Editor's Choice

தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என லண்டன் ஆய்வு கூறுகிறது. அதிக அழுத்த கொழுப்புப் புரதத்தினை வளர்க்க, பெரிதாக்க இந்த மீன்கள் உதவுவதாக ஆய்வின் முடிவு கூறுகிறது. மேலும் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் மெட்டபாலிஸம்களை வளர்க்கவும் இந்த மீன்கள் உதவும் என ஆய்வு கூறுகிறது.

இதனுடன், தினமும் 30ml கடுகு எண்ணெய் - லியோனிக் அமிலம் கொண்ட உணவுகளை உண்ணுவதாலும், உடல் உவாதைகள் போன்றவற்றை கலைய இயலும். மேலும் உள்ளங்கத்தில் ஏற்படகூடிய சிதைப்பு தரும் காரணிகளை கலைந்தெறிய உதவும். ஐடிஎல் லிபோப்ரோடைன் (குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம்) என்பது எல்டிஎல்-ன் முன்னோடி ஆகும், இது மோசமான கொழுப்பு என்று அறியப்படுகிறது. மீன் வயிற்றில் காணப்படும் நீண்ட சங்கிலி போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் லிப்போபிரைட்டின் அளவு மற்றும் கலவை ஒரு பயனுள்ள விளைவைக் மனிதற்களுள் காட்டுகிறது.

இந்த இரண்டு மாறுதல்களும் இதய நோய்களுக்கான ஆபத்தை குறைக்கும் என கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெறும் ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 40 முதல் 72 வயதிற்குட்பட்ட குழுவில் கிட்டத்தட்ட 100 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.

12 வாரகாலத்திற்கு இவர்களின் மீது ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்: பின்னர் அவர்களுக்கு கடுகு எண்ணெய் குழு, கொழுப்பு மீன் குழு, லீன் மீன் குழு, மற்றும் கட்டுப்பாட்டு குழு என பெயர் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு முறை மாற்றப்பட்டு ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவினை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பக்கம் 3 / 49