Editor's Choice

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.

இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.

சிறுநீர்த்தொற்று பலவகையான பிரச்னைகளுக்கு காரணமாகின்றது. குறிப்பாக, கோடையில் சிறுநீர் பிரச்னை பாடாக படுத்தி விடும். கவனமாக இல்லை என்றால், சிறுநீரகத்தில் கல், அழற்சி பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு, உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி ஐயும் உருவாக்கும். மற்றும் சிறுநீர்கழித்தல் இலகுவாக இல்லாத சந்தர்ப்பத்தில் அதாவது சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்புக்கள் இருப்பின், சிறு நீர்வடி குழாயில் பழைய தொற்றுக்கள் விளைவாக ஏதும் சுருக்கங்கள் இருத்தல், போன்றவற்றாலும் இது ஏற்படலாம். மாறான கட்டமைப்பு ஏதும் இருப்பின் அது மேலும் சிறுநீர்ப்பை அலர்ஜியை அதிகரிக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை வெறுமையாக இருப்பினும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுதல், அது போல் சிறுநீர் கழிக்கும் போது நோய் ஏற்படுவது, விரும்பத்தகாத மணத்துடன் மேகமூட்டம் போல் தெளிவற்று காணப்படும்.
இவ்வாறான அறிகுறிகளை வைத்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பை தொற்றிருப்பின் சிறுநீர் கழிக்கும் வேளைகளில் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிலசமயம் சிறுநீருடன் ரத்தம் வெளியேறும் தன்மையும் காணப்படும். இத்தொற்றை சரிவர குணப்படுத்தாத நிலையில் அது வேறு சில நோய்க்கும் வழிவகுக்கும்.

 

Editor's Choice

ஏரோசோல்கள் என்பது வைரஸ் உள்ள திரவத்துளி அல்லது வாயு-திரவ துகள்.

“பரவுதலை நிறுத்துங்கள், தொற்றுநோயை நசுக்குங்கள்”,​​ “எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: அறிகுறிகளைக் காட்டாதவர்களும் வைரஸைப் பரப்பலாம்” என்று அழைக்கப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பைப் அமைப்பு பகிர்ந்துள்ளது. சரியான காற்றோட்டம் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். ​​“ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்கும்போது ஏர் கண்டிஷனர்களை இயக்குதல், அறைக்குள் பாதிக்கப்பட்ட காற்றை நிரப்புதல் போன்றவை பாதிக்கப்பட்ட கேரியரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயத்தை அதிகரிக்கும்” என்று அமைப்பு கூறியுள்ளது.

அலுவலகங்கள், ஆடிட்டோரியங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற மூடிய பொது இடங்களில் கேபிள் விசிறி அமைப்புகள் மற்றும் கூரை வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தவும் இந்த ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது. “அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் வடிப்பான்களை மாற்றுவது போன்றவை மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது,” என்றும் ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஏரோசல் மற்றும் நீர்த்துளி பரவுதல் பற்றி விளக்கிய ஆலோசகர், பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்களின் வடிவத்தில் உமிழ்நீர் மற்றும் நாசி வெளியேற்றங்கள் வைரஸ் பரவுதலின் முதன்மையான பரவும் முறை என்று கூறினார்.

“பாதிக்கப்பட்ட நபரால் வெளிப்படும் நீர்த்துளிகள் சுற்றுப்புறத்தின் பல்வேறு மேற்பரப்புகளில் இறங்குகின்றன. அங்கு அவை நீண்ட காலம் உயிர்வாழ முடியும். எனவே, கதவு கைப்பிடிகள், லைட் சுவிட்சுகள், மேசைகள், நாற்காலிகள் போன்றவற்றை ப்ளீச் மற்றும் ஃபீனைல் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ”

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொன்றுக்கு பரவும் அபாயத்தை நீர்த்துப்போகச் செய்வதில் நன்கு காற்றோட்டமான இடங்களின் முக்கியத்துவத்தையும் இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது. “ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலமும், வெளியேற்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும் வாசனையை காற்றில் இருந்து நீர்த்துப்போகச் செய்வது போல, மேம்பட்ட திசைக் காற்று ஓட்டத்துடன் காற்றோட்டமான இடங்கள், காற்றில் திரட்டப்பட்ட வைரஸை வெளியேற்றுவதன் மூலம், பரவும் அபாயத்தைக் குறைக்கின்றன,”

வைரஸைக் கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு, கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் சமூக அளவிலான சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்படல் போன்றவை வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறின. “இப்பகுதியில் நுழையும் மக்களுக்கு விரைவான ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்பட வேண்டும். சோதனைகளை நடத்தும் சுகாதார ஊழியர்களுக்கு N95 முகக்கவசங்கள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்க ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட வேண்டும், ” என்று ஆலோசகர் கூறினார்.

Editor's Choice

இருவேறு தடுப்பு மருந்து டோஸ்களை எடுத்து கொண்டவர்களுக்கு குளிர், தலைவலி, தசை வலி போன்ற பிரச்னைகள் அடிக்கடி எழுந்துள்ளன. வெவ்வேறு தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டதால் உண்டான பாதகமான விளைவுகள் குறைந்த நேரமே இருந்தன.

`தி காம் கோவ்` ஆய்வு என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய கொரோனா திரிபுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பு தருகிறதா என்று பார்ப்பதற்கும் விநியோகம் தடைப்படும் நெருக்கடியை சமாளிக்கவும் முதல் டோஸில் ஒரு தடுப்பூசியும், இரண்டாம் டோஸில் வேறொரு தடுப்பூசியும் வழங்கும் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

கனடாவின் ஆண்டாரியோ மற்றும் க்யூபெக் போன்ற மாகாணங்கள், ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகளின் வரத்து குறித்தும் அரிய ரத்த உறைவுகள் ஏற்படுவதாலும் எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளை கலந்து செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தன.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 830 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் 50 வயதுக்கும் மேல். இந்த ஆய்வின் முழு விவரம் ஜூன் மாதம் வெளியாகும்.

ஆரம்பக் கட்ட தகவல்கள் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியாகியுள்ளது.

இரண்டு ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட 10 தன்னார்வலர்களில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்து என கலவையாக எடுத்துக் கொண்டவர்களில் 34 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

"இதே வித்தியாசங்கள் குளிர், மந்தநிலை, தலைவலி, தசை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுக்கும் பொருந்தும்" என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர்.

"இந்த ஆய்வில் ஒன்று மட்டும் புரிகிறது. இம்மாதிரி கலவையான தடுப்பு மருந்தை ஒரே நாளில் ஒரு வார்டில் இருக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் செலுத்த நினைக்கமாட்டீர்கள், ஏனென்றால் அடுத்தநாள் அதிகம் பேர் விடுமுறையில் இருப்பர்" என்றார் அவர்.

பக்கவிளைவுகள் ஏற்படும் சதவீதம் அதிமாக இருப்பதை அவர் இவ்வாறு சுட்டி காட்டுகிறார்.

ஏப்ரல் மாதம் இந்த ஆய்வில் மேலும் 1,050 தன்னார்வலர்கள் இணைந்து, மாடர்னா மற்றும் நோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டு சோதனைக்கு உள்ளாகினர்.

Editor's Choice

கூகுள் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கூகிள் இப்போது உங்கள் உடல்நலம் குறித்த தகவல்களையும் உங்களுக்கு தெரிவிக்கும். கூகிளின் I / O 2021 நிகழ்வில் நிறுவனம் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சுகாதார கருவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியுடன் வரும் நாட்களில் கூகிள் உடலின் தோல் தொடர்பான சில நோய்களை அடையாளம் காண முடியும் என கூறப்பட்டுள்ளது. கூகிள் ஒரு சிறப்பு வகை AI கருவியை உருவாக்கி வருகிறது. இதனால் பல கடுமையான நோய்களை அடையாளம் காண முடிகிறது.

இந்த கருவி வீட்டில் இருந்தபடியே தோல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் காண உதவும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை செய்ய, ஸ்மார்ட்போனின் கேமராவை தேவைப்படும் தோல் பகுதியை நோக்கி காட்ட வேண்டும். அதன் பிறகு அது மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து படங்களை எடுக்கும். உங்கள் தோல் வகையைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும். உங்களுக்கு எத்தனை காலமாக பிரச்சனை உள்ளது, பிற அறிகுறிகள் ஆகியவை பற்றிய கேள்விகளும் கேட்கப்படும். இவை, சரியான பிரச்சனையை கண்டறிய உதவும். 

Google AI Health கருவி 288 வகையான தோல் நோய்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. உங்கள் சருமத்தின் நிலையைப் பார்த்து, உங்களுக்கு எந்த வகையான நோய் வர வாய்ப்புள்ளது என AI கருவி ஆராய்ந்து சொல்லும். இதற்காக, பயனர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை. லாக்டவுனின் போது கூகிளின் AI ஹெல்த் கருவி மிகவும் உதவியாக இருக்கும். கூகிள், இந்த AI ஹெல்த் கருவியை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யக்கூடும். வரும் நாட்களில், எக்ஸ்ரே போன்ற அம்சத்தை கூகிள் ஹெல்த் கருவியில் சேர்க்கலாம். இந்த கருவியின் உதவியுடன், நோய்கள் விரைவில் அடையாளம் காணப்படும்.

 

Editor's Choice

ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி-ஐ  இப்போது கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்பட்டு வந்தன. 

ஸ்பட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்காக டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் பின்னர், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-யின் ஊசி செலுத்தல் விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் நடக்கும்.  

ரஷ்ய தடுப்பூசி (Vaccine) ஸ்பூட்னிக்-வி ஒரு டோஸ் அப்பல்லோ மருத்துவமனையில் ரூ.1250 க்கு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவமனையின் செலவும் அடங்கும். டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இது குறித்த தகவல் அளித்தபோது, ஸ்பூட்னிக் வி-யின் விலை ரூ.948 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதகாவும், அதில் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கூறியது. இதன் பின்னர், தடுப்பூசியின் விலை ரூ.995.4 ஆக இருக்கும் என்றது ரெட்டீஸ் நிறுவனம். இதற்குப் பிறகு, மருத்துவமனை செலவுகளைச் சேர்த்த பிறகு, தடுப்பூசியின் விலை ரூ.1250 ஆக இருக்கும்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

 

பக்கம் 9 / 49