Editor's Choice
ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!
 
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.
 
அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.
 
இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் *வாலாஜபாத்* *தாலுகாவில்* கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
 
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.
 
சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை
img class="j1lvzwm4" src="data:;base64," width="18" height="18" />
Editor's Choice

பால்பண்ணையைத் தொடங்கி லாபம் ஈட்ட நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு 25 சதவீதம், அதாவது 1.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் 7 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கிறது மத்திய அரசு.

Editor's Choice

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அதிலும் தற்போது கொரோனா நெருக்கடியால், 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தில் வேலை கிடைப்பது என்பது சந்தேகமே.

அப்படி பாதிக்கப்பட்டவரா நீங்கள்?. உங்களை முதலாளியாக்க கை கொடுக்கிறது தமிழக அரசின் UYEGP வேலைவாய்ப்பு திட்டம்.

UYEGP திட்டம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதன் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme) படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் என்பதை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை(Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.

தொழிலின் திட்ட மதிப்பு (Project Value)

உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் ரூ. 10 இலட்சம் வரைக் கடன் வழங்கப்படும்.

சேவை சார்ந்த நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

மானியம் (Subsidy))

அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக (Subsides) அரசு அளிக்கிறது.

கல்வித்தகுதி

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

சொந்த முதலீடு (Entrepreneur Contribution of Capital Investment)

சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.

பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாக (Owner Capital Investment)  செலுத்த வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution)

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர். வங்கிகள் முலம் 70 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது.

குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income)

UYEGP திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள்

படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள் (DIC-District Industries Center), TIIC (The Tamilnadu Industrial Investment Corporation) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றை அணுகி விண்ணபிக்கலாம்.

பயிற்சி (Training)

இத்திட்டத்தின் பயனாளிகளை மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) தேர்ந்தெடுக்கிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI-ENTREPRENEUR DEVELOPMENT INSTITUTE) மூலம் ஒரு மாத கால தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி  வழங்கப்படும்.

எனவே UYEGP திட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் ல் msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

Editor's Choice

எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் வாழும் மனிதனுக்கு தேவையானது உணவு மட்டுமே. அந்த உணவைத் தருவது விவசாயமும் அதைச் சார்ந்த பண்ணைத் தொழில் மட்டுமே. வயலில் இறங்கி ஏர் பிடித்தால் மட்டுமே விவசாயம் அல்ல, அவை அல்லாமல் வீடுகளிலும் நம் தோட்டங்களிலும் சிறு சிறு முதலீட்டில் மேலாண்மை

Editor's Choice

நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் அளித்தல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. நபார்டு வங்கி 30 %

Editor's Choice

I. இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை

60 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர், வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 

பக்கம் 46 / 49