- மருத்துவம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 193
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்:
தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.
அரசு மூலதன மானியம்:
பயனாளிகளின் தகுதிகள்:
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்:
காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதி சான்றிதழ் – சாதி சார்ந்த தொழில் சிறப்பு பிரிவினற்கான கடன் வசதி பெரும் போது.
கடன்:
கடன் பெற பயனாளிகள் வங்கியில் சென்று கடன் பெறுவதற்கான அனுமதி பெற்று இருத்தல் அவசியம். பயனாளிகள் குறிப்பிடும் வங்கிகளுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.
வங்கிகள் இந்த விண்ணப்பங்களை பெற்ற பின் 60 நாட்களுக்குள் வாரியத்திடம் இந்த திட்டத்தில் கடன் பெற தகுதியானவரா மற்றும் தகுதியற்ற நிலை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.
வங்கிகள் திட்ட மதிப்பில் 95% கடன் அளிக்க வேண்டும். பயனாளிகள் 5% கொண்டு வர வேண்டும். இதற்கான வட்டி வங்கிகளின் திட்டங்களுக்கு உட்பட்டது. திரும்ப செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
இந்த கடன் முழுவதும் மத்திய அரசின் கிரிடிட் கேரண்டி டிரஸ்ட் பண்ட் திட்டத்தில் வருவதால் வங்கிகள் எந்தவித சொத்து பிணையம் தனிநபர் உத்திரவாதம் கேட்க கூடாது.
முதலில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெறுதல் அவசியம். இப்பயிற்சியினை தொழில் ஆரம்பிக்கும் முன்போ அல்லது கடன் பெற்ற உடனையோ பெற்று கொள்ளலாம்.
பயனாளிகளின் விண்ணப்பங்களை கயிறு வாரியத்தின் அதிகாரி சரி பார்த்து அதை போர்டு உறுப்பினர்களுக்கு அளிப்பார். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு போர்டு சிபாரிசு செய்யும்.
பயனாளிகள் கடன் உறுதி செய்யபட்ட உடன் வங்கிகள் பயனாளிகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத்தை கணக்கிட்டு வாரியத்திடம் அளிக்க வேண்டும். வாரியம் இந்த மானியத்தை எல்லா நடைமுறைகள் சரியாக இருப்பின் 30 நாட்களுக்குள் வங்கிக்கு பயனாளியின் மானியத் தொகையை அளிக்கும்.
வங்கிகள் மானியத் தொகையை பெற்று 30 நாட்களுக்குள் பயனாளிக்கு கடன் வழங்க வேண்டும். மானியங்கள் அதிகமாக பெறப்பட்டு இருந்தால் கடன் தொகை பெற்ற பின் அதிகமான மானியத் தொகையை திரும்ப தர வேண்டும்.
இந்த திட்டம் கடன் பெற்று 6 மாதத்திற்குள் முடிவு பெற்று இறுத்தல் அவசியம்.
பயனாளியிடம் விண்ணப்பங்கள் பெற்ற பின் இந்த விண்ணப்பங்களின் நிலை பற்றி வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். இ-டிராக்கிங் சிஸ்டம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கண்காணிக்கலாம்.
பயனாளிகள் தங்கள் பங்குத் தொகையினை 30 நாட்களுக்குள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களுடன் இணைக்கபட வேண்டிய இணைப்புகள்:
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உங்கள் ஏரியாவை பொறுத்து தேர்வு செய்யவும். தமிழகத்தில் விண்ணபிக்க,
COIR BOARD REGIONAL OFFICE
DOOR NO.103, VALLALAR STREET
TEL/FAX: 04259-222450.
இந்த திட்டத்தில் இப்போது ஆன்லைனிலும் விண்ணபிக்கலாம். அதற்கான இணையதள முகவரி http://www.coirservices.gov.in/frm_login.aspx
விவாசயத்தொழிலை லாபகரமானதாக மாற்ற மத்திய -மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தற்போதைய விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில் நீங்களும் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா?
இந்தத் திட்டத்தின் பெயர் Agriclinic and Agribusiness Centres Scheme (AC&ABC). இதன்படி விவசாயி, விவசாயத்துடன் இணைந்த ஒருவர் அல்லது அதில் சேர விரும்பும் ஒருவர், புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்க விரும்பினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடன் அக்ரி கிளினிக் (Agri Clinic) மற்றும் அக்ரி வணிக மைய திட்டம் (Agri Business center scheme) மூலம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வகுப்பு தேவைப்படும். அதன் பின்னர் நீங்கள் தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால் நபாரட் வங்கி (NABARD வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கடன் வழங்கும்.
வேளாண் பட்டதாரி, முதுகலை அல்லது டிப்ளோமா படிப்பை முடித்த ஒருவர் விவசாயம் தொடர்பான வர்த்தக வணிகங்களைச் செய்ய உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்த பகுதியின் விவசாயிகளின் நிலையையும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என அரசு நம்புகிறது.
விவசாய வணிகம் தொடர்பான பயிற்சிக்கு ஒரு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிர்சி மையங்கள் அனைத்தும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAG - National Agricultural Extension Management Institute) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
பயிற்சி முடிந்ததும், விவசாயம் அல்லது அதைச் சேர்ந்த ஒரு தொழிலைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு நபார்டில் (NABARD Bank) இருந்து கடன் வாங்க முழு உதவி வழங்கப்படும். வேளாண் தொழிலைத் தொடங்க, விண்ணப்பதாரர்களுக்கு (தொழில் முனைவோர்) ரூ .20 லட்சம் வரையிலும், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவுக்கு ரூ .1 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
இதில் கூடுதலாக, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவின், பழங்குடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்களைப் பெற வேளாண் வணிகம் குறித்த கூடுதல் தகவலுக்கு, 1800-425-1556, 9951851556 கட்டணமில்லா எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நாட்டிலுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடியால் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் மானிய நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கும் கிஷான் கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த ஜன் தன் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றால் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப்ட் (Overdraft) முறையில் பணம் எடுக்க முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும்.
முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை சரியாக கடைபிடிக்க வேண்டும்
இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும்.
அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
10 வயது குழந்தைக்குக் கூட இத்திட்டத்தின் கீழ் எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.
சமீபகாலமாக, எரிவாயு மானியம், குடும்ப உறுப்பினர் அட்டை மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய-மாநில அரசு நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இடைத்தரகர்களின் மோசடி, முறைகேடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்கம் 42 / 49



