Editor's Choice


சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் இங்கே காணலாம்.

1 - கிஃப்ட் ஷாப் (Mall Gift Store)
2 - திருமண ஏற்பாட்டாளர் (Wedding Planner/Match Maker)
3 - சிறப்பு கல்வி வகுப்புகள் (Coaching Classes)
4 - பல்பொருள் அங்காடி (Stationary Shop)
5 - மளிகைக் கடை (Grocery Shop)
6 - நடமாடும் உணவகம் (Mobile food stalls)
7 - மொபைல் கடை (Mobile shop)
8 - யோகா பயிற்சியகம் (Yoga Institute)
9 - கம்ப்யூட்டர் கடை (Computer Store)
10 - பாதுகாவலர்/துப்பறியும் நிபுணர் (Security/Detective Agency)
11 - ரியல் எஸ்டேட் ஆலோசகர் (Real Estate Consultant)
12 - பயண ஏற்பாட்டாளர் (Travel Agency)
13 - உடற்பயிற்சியகம் (Gyms)
14 - வெப் டிசைனர் (Freelancing: Web designer, Web Developer, SEO expert)
15 - கம்ப்யூட்டர் பயிற்சியகம் (Computer Training Institute)
16 - விளையாட்டு மையம் (Game Parlor)
17 - அஞ்சல் சேவை (Courier Agency)
18 - மனித வள மேம்பாட்டு ஆலோசகர் (HR Consultancy)
19 - விளம்பர ஏற்பாட்டாளர் (Advertisement Agency)
20 - ஃபாஸ்ட் புட் கடை (Fast food shop)
21 - எஸ்.இ.ஓ ஆலோசகர் (SEO consultant)
22 - தகவல் பதிவு சேவை (Data Entry Services)
23 - அலங்கார பொருள் விற்பனை (Curio Shop)
24 - செகண்ட் ஹேண்ட் ஆட்டோ டீலர் (Second Hand Auto Dealer)
25 - பேக்கிங் (Packers & Movers)
26 - இனிப்பு கடை (Dairy and Sweet Shop)
27 - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Management)

Editor's Choice
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு அதிகட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
• தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (NADP) ன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
• இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ விவசாயகள் மானியம் பெறலாம்.
 
• இதன்படி மீனவர்கள் உங்களுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டை அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணை குட்டை அமைத்தல்(1000 செ.மீ), மீன் மீன்குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவீனத்திற்கு மீன்வளத்துறை மூலம் மானியம் 40 சதவீதம் வழங்கப்படவுள்ளது.
 
• அதில் ஒரு அலகிற்கு (1000 செ.மீ) அதிகபட்சம் ரூ.99,000 செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ. 39,600 வரை மான்யம் வழங்கப்படுகிறது.
 
• விருப்பம் உள்ளவர்கள் முகவரி எண் 5வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலூர்-632006 என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் வேலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
• விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 0416- 2240329.
Editor's Choice

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேதிக் பெயின்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துள்ளார். வேதிக் பெயின்ட் என்ற பெயரிலான இந்த பெயின்ட் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேதிக் பெயின்ட் உதவும் என கட்கரி கூறியிருக்கிறார்.

வேதிக் பெயின்ட் சிறப்பு அம்சங்கள்!!

*சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்ட மாட்டுச் சாணத்தில் இருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது.

*டிஸ்டம்பர், எமல்சன் ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியாக உள்ள இந்த பெயின்ட், சுவற்றில் அடித்தபின் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும்.

*சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, இந்த பெயின்டால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 55 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

Editor's Choice

அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா என்பது அரசு ஈட்டுறுதி கழகத்தால் இஎஸ்ஐ (ESIC)செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன் மூலம் இஎஸ்ஐ-ல் காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது அவர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2018ஆம் முதல் இந்த திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் பலரும் தங்களில் வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) சார்பாக சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

50 சதவீத சம்பளம்

  • வேலையை இழந்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தொகை, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும்

  • கொரோனா பாதிப்பால் வேலையை இழந்தவர்களுக்கும் வேலையை இழப்பவர்களுக்கும் 50 சதவீத சம்பளம் கிடைக்கும்.

  • இத்திட்டம் 2021 ஜூன் மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும்

  • இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விதிமுறைகள்

  • நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும்.

  • ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை ESI பங்களிப்பிலிருந்து பெற முடியும். இது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 நாட்களுக்கான பங்களிப்பை பெற முடியும்.

  • காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

  • இதில் அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

  • காப்பீடு செய்யப்பட்ட நபர் கடைசி ESIC கிளை அலுவலகத்தில் நேரடியாக கோரிக்கையை சமர்ப்பிக்லாம், இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இத்திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்

    முதலில் அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனாவின் https://www.esic.nic.in/. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தை ஓப்பன் செய்ய வேண்டும்.

  • அந்த பக்கத்தில் Atal Bimit Vyakti Kalyan Yojana’ என்ற வசதியை கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

  • பதிவிறக்கம் செய்த படிவத்தை முழுவதும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு அதைத் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்ப படிவத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்ய - இங்கே கிளிக் செய்க

Click here for Direct Link to Apply 

இந்தப் படிவத்துடன், non-judicial stamp paper, ஏபி -1 முதல் ஏபி -4 வரையிலான படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு நீங்கள் ESIC (www.esic.nic.in) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

Editor's Choice

மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைக்கவும், ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதியை ஏற்படுத்தவும், பாசன நீர் குழாய்களை அமைக்கவும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

10 கோடி இலக்கு 

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியே 51 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சோழமாதேவி, வேடப்பட்டி, சர்க்கார் கண்ணாடி புதூர், அக்ரகார கண்ணாடி புதூர், கொழுமம், குமரலிங்கம், சங்கராமநல்லூர், பாப்பான்குளம் கிராமங்களில் குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

அனைத்து வட்டாரங்களிலும் நுண்ணீர் பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது. நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க அதற்குச் செலவாகும் தொகையில் 50 சதவீத தொகை என நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது.

யாரை அணுகவேண்டும்? 

நுண்நீர் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Editor's Choice

கால்நடை வளர்ப்போர், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூ1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) உதவுகிறது.

இன்னும் பல பலன்களை அளிக்கும் இந்த கால்நடை உழவர் கடன் அட்டையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து பார்ப்போம்.

விவசாயத்தின் ஆதரவுத் தொழில்களுள் ஒன்று கால்நடை வளர்ப்பு. இந்த கால்நடை வளர்ப்பு என்பது வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கால்நடை துறையை மேம்படுத்தவும் கால்நடை துறையில் ஈடுபட விரும்புவர்களுக்கு உதவும் வகையிலும் கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.

திட்டத்தின் பயன்கள் (Benefits of Scheme)

  • கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூ1.60 லட்சம் வரையிலான தொகையைக் கடனாக பெற முடியும்.

  • இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.

  • கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானியமாகச் செலுத்தும். . இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாகக் குறைகிறது.

  • கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த கடன் அட்டையைப் பெற கால்நடை பராமரிப்புத் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடன் அட்டை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து நில ஆவணம் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கால்நடை உரிமையாளர்கள் இரண்டு எருமைமாடுகள் வாங்க கடன் வழங்கப்படும். அதனுடன் கடன் அட்டையும் சேர்த்து வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கவும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

பக்கம் 41 / 49