Editor's Choice

2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு  அறிவித்துள்ளது. அதன்படி 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக தனுஷ், துணை நடிகராக விஜய் சேதுபதி, இசையமைப்பாளராக டி.இமான் தேர்வாகி உள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தமிழில் கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, ஹிந்தி)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - ஹிந்தி)

சிறந்த படம் - மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி - படம் : தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (படம் : விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், ஹிந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (படம் : கே.டி. எனும் கருப்புதுரை)


Editor's Choice
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ந்து மூன்று முறை தடுக்கி விழுந்தும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
 
அமெரிக்காவின் அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அங்குள்ள ஆசிய-அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்டார். 
 
விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். அவர் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.விமானத்தின் படிக்கட்டுகளில் அவசரம் அவசரமாக அவர் ஏறியதால் 2 முறை தடுக்கியதுடன், கடைசியாக தடுக்கி விழுந்தே விட்டார்.
 
விழுந்து, எழுந்து, முழங்கால்களை தடவிக்கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு உள்ளே சென்று மறைகிறார் பைடன். அவர் மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவச் சென்றது போல தெரியவில்லை.  இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் எதுவும் தங்கள் பத்திரிகைகளில் முக்கியப்படுத்தவில்லையாம்.
 
வெளிநாட்டு ஊடகங்கள்தான் பைடன் விழுந்ததை பெரியதாக செய்தியாக்கியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை வட்டாரமோ, பைடன் காற்று பலமாக வீசியதால் தடுமாறியதாக தெரிவித்துள்ளது.

 

Editor's Choice

இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா வேகமாக பரவிய சமயத்தில் மார்ச் 22 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைப்பற்றி பலரும் நினைவுக்கூர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.

நோய் பரவுவதை தடுக்க கடந்தாண்டு மார்ச்சில் தேசிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதல் ஊரடங்கு கடந்த மார்ச் 22ம் தேதியான இன்று தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் கொரோனாவை எதிர்த்து போராடும் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்க கைதட்டி ஊக்கப்படுத்தும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்தியா முழுக்க மக்கள் அதை செய்தனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் மெல்ல உயர்ந்து சில மாதங்கள் நாடு முழுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டது, பின் படிப்படியாக அவை தளர்த்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது மீண்டும் ஓராண்டுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. கடந்தாண்டு இதேநாளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தினத்தை டுவிட்டரில் பலரும் நினைவுக்கூர்ந்து டிரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில் டுவிட்டரில் #JanataCurfew, #Lockdown ஆகிய ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

* தேசிய ஊரடங்கின் முதலாண்டு நாள் இன்று. கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற 21 நாள் ஆகும் என பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ஓராண்டு ஆகிவிட்டது. 1.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். 12.2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். லட்சக்கணக்கான தொழில்கள் மூடப்பட்டுள்ளது.

* கொரோனாவை எதிர்த்து போராடும் அனைத்து சுகாதார பணியாளர்கள், அவசரகால உதவிக்காக பணிபுரியும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சல்யூட்.

பொதுவாக பலரும் இந்தக் காலக்கட்டத்தில் தாங்கள் என்ன மாதிரியான சூழ்நிலைகளை சந்தித்தோம், எப்படி அன்றைய தினம் கடந்தது என்பதை தங்களது கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

Editor's Choice
அமீரகத்தின் மிகப்பெரிய புதிய சரக்கு கப்பல் எம்.வி.ஹபீத் தனது சேவையை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எம்.வி. ஹபீத் என்ற புதிய சரக்கு கப்பல் சமீபத்தில் சேவையை தொடங்குவற்காக அபுதாபி துறைமுகத்தில் பதிவு செய்தது. இந்த கப்பல் அமீரகத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என்ற பெருமையை பெறுகிறது. இந்த கப்பலை சபீன் என்ற குழுமம் வாங்கியுள்ளது.

அமீரகம் மற்றும் ஓமன் நாட்டின் எல்லைப் பகுதியையொட்டி மிகப்பெரிய மலை ஜெபல் ஹபீத் உள்ளது. இந்த மலையின் நினைவாக கப்பலுக்கு எம்.வி. ஹபீத் என பெயரிடப்பட்டுள்ளது.

ரோமானியா நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த கப்பலை அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த கப்பலில் அதிக அளவில் சரக்குகளை ஏற்றும் வகையில் கிரேன் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கப்பல் 254 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது ஆகும். இந்த கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் வகையில் 4 மிகப்பெரிய கிரேன்கள் உள்ளது. மேலும் அதிகமான அளவு பொருட்களை வைக்க 7 சரக்கு பெட்டகங்கள் வைக்கும் அறைகள் உள்ளது.

ஒரு லட்சத்து ஆயிரத்து 648 டன் சரக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கொள்ளளவு கொண்டது. 15 ஆயிரத்து 200 குதிரைத் திறன் கொண்ட டீசல் என்ஜின் இதில் உள்ளது.

அபுதாபி துறைமுகத்தின் சேவைகள் மேலும் விரிவடைய இந்த புதிய கப்பல் உதவியாக இருக்கும். விரைவில் இந்த சரக்கு கப்பல் பயன்பாட்டுக்கு வருகிறது.

 
Editor's Choice

வாட்ஸ்அப்,  இண்ஸ்டாகிராம் மற்றும்  பேஸ்புக் (Facebook)  சேவைகள் உலக அளவில் நேற்று பல இடங்களில் முடங்கியது.

இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர். மேலும் 25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை  எதிர்கொண்டனர்.

"சில பேஸ்புக் சேவைகளை அணுகுவதில், தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது.  இந்த சிக்கலை நாங்கள் தீர்த்து வைத்தோம், மேலும் மக்கள் சிக்கலை சந்தித்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று பேஸ்புக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் (Instagram) தனது ட்வீட்டில், "சிலருக்கு தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர், ஆனால் இப்போது பிரச்சினை சரி செய்யப்பட்டது. சிக்கலுக்கு வருந்துகிறோம்" எனக் கூறியுள்ளது.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அதன் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமில் சிக்கல்களை சந்தித்தாக புகாரளித்ததை அடுத்து, சேவைகள் பல விதமான தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் இன்கார்பரேஷன்  தெரிவித்துள்ளது. " பல அணிகள் சேவையை மீட்டெடுக்க பணியாற்றி வருகின்றன, எங்களால் முடிந்தவரை விரைவில் சேவையை மீட்டெடுப்போம்" என்று பேஸ்புக்கின் கேமிங் யூனிட் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Editor's Choice
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தன.  உகானில் உள்ள விலங்கு உணவு விற்பனை மையமொன்றில் இருந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசானது பரவியது என முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் அதற்கு போதிய சான்றுகள் வெளிவரவில்லை.
 
சீனாவே கொரோனாவுக்கான உற்பத்தி மையம் ஆக இருந்துள்ளது என அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தது.  ஏனெனில், அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
 
சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியது.  இதனால், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் கூறி மிரட்டல் விடுத்தது.
 
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனா நாட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  அதில், சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்தது.
 
உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் பீட்டர் பென் எம்பேரக், சீனாவின் உகானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை.
 
நாங்கள் உகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை.  ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவும் சம்பவங்களும் மிக அரிது என்பது எங்களுக்கு தெரியும் என கூறினார்.
 
எனினும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என குற்றச்சாட்டு எழுப்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன், நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை சாடினார்.
 
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம் அமெரிக்காவில் இருந்து தோன்றியதற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியது.
 
இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளிடம் இருந்து மறைக்கும் நோக்கில், தன்னுடைய டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை சீனா உயிர்த்தியாகம் செய்ய வைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
 
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில், கொரோனா பெருந்தொற்றுக்கான அச்சுறுத்தல் தெரிய தொடங்கியதும், அதனை சில வாரங்கள் வரை சீனா மூடி மறைத்துள்ளது.  இதுபற்றி ஆன்னி ஸ்பேரோ என்பவர் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.  கொரோனா பெருந்தொற்று பரவல் பற்றி ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டு கொண்டது.  ஆனால், 24 மணிநேரத்தில் கொரோனா பற்றி உரிய பதிலளிப்பதற்கு பதிலாக, சட்ட மீறலில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
வதந்திகளை உருவாக்குவோர், நம்புவோர் மற்றும் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம் என உகான் பொது பாதுகாப்பு வாரியம் அறிக்கை அளித்தது.

அதுபற்றி உலக சுகாதார அமைப்பிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, தகவலை தணிக்கை செய்ய முடிவு செய்ததுடன், மறைக்கவும் செய்தது.  சக பணியாளர்களிடம் எச்சரிக்கை விட முயன்ற டாக்டர்களை அமைதிப்படுத்தியது.
 
சீனாவின் இந்த தவறுகளால், சர்வதேச அளவில் பொது சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு உடனடியாக அறிவிக்காமல் இருக்க செய்து விட்டது.
 
கொரோனா பெருந்தொற்றை மூடி மறைத்த சீன அரசால் உலக சுகாதார அமைப்பு கொடிய தவறை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.  கடந்த ஆண்டு ஜனவரி 5ந்தேதி, அறியப்படாத நிம்மோனியா என அந்த அமைப்பு உலகிற்கு தகவல் அளித்ததோடு நின்று விட்டது.
 
எபோலா, ஜிகா மற்றும் எச்.1.என்.1. வைரசுகளை போன்று இதனையும் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டது.
 
கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளிடம் இருந்து மூடி மறைக்க டாக்டர்களை சீனா பலி கொடுத்துள்ளது.  அவர்களுக்கு தேவையான முக கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (பி.பி.இ. உடைகள்) ஆகியவற்றை மருத்துவர்களுக்கு வழங்க மறுத்து விட்டது.
 
கொரோனாவை கட்டுப்படுத்தி சீனா வெற்றி கண்டபோதிலும், தொற்றை மறைத்து உலக அளவில் கொரோனா பரவலை ஏற்படுத்தியதில் முதலிடத்தில் உள்ளது.
 

பக்கம் 7 / 74