Editor's Choice

இத்தாலியில் சாலை விபத்தில் இறந்த ஒரு நபரின் மனைவி மற்றும் காதலி என இருவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் வடகிழக்கில் டுரின் நகரைச் சேர்ந்த 39 வயது நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.  

அந்த மனிதருடன் தொடர்ந்து உறவில் இருந்த பெண்ணுக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்றாலும், அவருக்கும் உரிமை இருப்பதாக காதலியின் வழக்கறிஞர் வாதிட்டார்.  தன்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவரை இழந்த பெண் இழப்பீடு பெற தகுதியுடையவர் என்று காப்பீட்டு நிறுவனத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நெடுஞ்சாலை விபத்தில் இறந்த நபரின் உடலை அடையாளம் காண, காதலியை போலீசார் அழைத்தனர். இந்த செய்தியை லா ஸ்டாம்பா செய்தித்தாள் உறுதி செய்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் விபத்தில் இறந்தவரின் மனைவி பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தார்.
 
இறந்துபோன அந்த நபர் வாரத்தில் மூன்று நாட்கள் காதலியுடனம், நான்கு நாட்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வு ஏற்பட்டதால், காப்பீட்டு நிறுவனம், மனைவிக்கும், காதலிக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்கியது.

இந்த செய்தி மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று அனைவரும் கருதுகின்றனர். இந்த வழக்கை மேற்கோள் காட்டி, எதிர்காலத்தில் இதுபோல் திருமணத்தை தாண்டிய உறவுகளுக்கும் இழப்பீடுகள் கொடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன.  

Editor's Choice
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது. 
 
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
 
கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வந்த அமெரிக்கா தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தேவையில்லை என்று அறிவித்துள்ளது வைரஸ் பாதிப்பில் இருந்து அந்நாடு மீண்டு வருவதை வெளிக்காட்டுகிறது.
 
இந்நிலையில், அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தேவையில்லை என்ற அறிவிப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஓராண்டு கடின உழைப்பு மற்றும் அதிக அளவு தியாகங்களுக்கு பிறகு விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை முகக்கவசம் அணியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
Editor's Choice

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய வீரர்கள் மே மாதம் 19ஆம் தேதி முதல் பாதுகாப்பான வளையமான Bio-bubbleக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“இங்கிலாந்திற்கு பயணிக்கும் இந்திய அணியினர் மும்பையில் ஒன்று சேர்ந்து  மே 19 முதல்  Bio-bubble பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவார்கள். மும்பையில் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்படும் அவர்கள் வேறு எங்கும் வெளியே செல்ல மாட்டார்கள். 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ஜூன் 2 ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படும்”என்று தெரிகிறது.

Bio-bubbleஇல் இருக்கும் வீரர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது அங்கு அவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, இந்திய வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய குழுவினருக்கு சலுகை கிடைத்தால் அது அணிக்கு ஆக்கப்பூர்வமான தகவலாக இருக்கும்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட அணியை (நான்கு காத்திருப்பு வீரர்கள் உட்பட)  பிசிசிஐ அறிவித்தது. செப்டம்பர் 14 ஆம் தேதி முடிவடைய உள்ள போட்டிகளைத் தொடர்ந்து, ஜோ ரூட் (Joe Root) தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கலந்துக் கொள்ளும்.

இந்திய அணியின் 24 பேரில், கே.எல்.ராகுல், மற்றும் விருத்திமான் சஹா என இருவரும் உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும், சில நாட்களுக்கு முன்பு கோவிட் -19 பாதிப்பை எதிர்கொண்ட பிரசீத் கிருஷ்ணாவுக்கு நோய் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவித்தால் தான் அவர் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்வார்.

அதேசமயம், இந்திய மகளிர் அணிக்கான அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். இந்தியா பெண்கள் ஜூன் 16 முதல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று W20I மற்றும் பல T20I மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், மாயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட். ஷமி, எம்.டி.சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா 

காத்திருப்பு வீரர்கள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா

Editor's Choice

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உதவுவதோடு, பணத்தை முதலீடு செய்ய உதவுகிறது. மேலும், எஸ்பிஐ கடன் செயல்முறையை படிப்படியாக எளிதாக்கியுள்ளது. முதலில், நீங்கள் வங்கிக்குச் சென்று கடன் வாங்க விண்ணப்பிக்க வேண்டியிருந்தது, பின்னர் ஆன்லைனில் கடன் வாங்கும் வசதி வந்தது. தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் வசதியை தொடங்கியுள்ளது. 

எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் என்கிற இந்த திட்டத்தில் திருமணத்திற்கோ அல்லது விடுமுறைக்கோ அவசரத் தேவைக்கோ பணம் தேவையென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதலை பெற முடியும். மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் 7208933142 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து லோன் பெறலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், எஸ்எம்எஸ் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைன் எண்ணில் இருந்து PERSONAL என டைப் செய்து 7208933145 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். மிஸ்டுகால் மூலம் கடனைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அல்லது எஸ்பிஐ தொடர்பு மையம் மூலம் விண்ணப்பிக்க 1800-11-2211 ஐ டயல் செய்யலாம். மேலும், எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் பற்றிய கூடுதல் தகவலுக்கு bit.ly/37fnHhp இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் மிஸ்டுகால் கொடுத்ததும் வங்கி உங்கள் தகவல்களைப் பெறும், மேலும் வங்கி சார்பாக நீங்கள் தொடர்பு கொள்ளப்படுவீர்கள். இதில், வங்கியின் பிரதிநிதி உங்கள் வருமானம் மற்றும் உங்கள் கோரிக்கை போன்ற தகவல்களைக் கேட்பார், அதன் பிறகு உங்கள் கடனின் செயலாக்கம் தொடங்கும். இதற்குப் பிறகு, வங்கியின் நிலையான நடைமுறைக்கு ஏற்ப உங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

Editor's Choice
ஈரானில், மாரடைப்பால் இறந்த பின்னரும், ஒரு பெண் தூக்கில் போடப்பட்டுள்ளார். சஹ்ரா இஸ்மாயில் என்ற பெண், தனது கணவர், தன்னையும் தன் மகளையும் துஷ்பிரயோகம் செய்ததாகக்கூறி அவரைக் கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
 
சஹ்ரா இஸ்மாயிலின் கணவர் ஒரு உளவுத்துறை அதிகாரி. சஹ்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தூக்கு மேடைக்கு சஹ்ரா  கொண்டுபோகப்பட்டபோது, அவருக்கு முன்னால் 16 குற்றவாளிகள்  வரிசையில் நின்றிருந்தனர். அவர்கள் தூக்கில் போடப்படுவதை பார்க்க சஹ்ரா  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சஹ்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, அவர் உயிரிழந்துவிட்டார்.
 
ஆனால், ஈரானைப் பொருத்தவரை, கொலை செய்துவிட்டால், இறந்தவருக்காக பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, குற்றவாளி சட்டப்படி தூக்கில் போடப்படும்போது, தூக்கு கயிற்றில் தலை மாட்டப்பட்ட நிலையில் குற்றவாளி நிற்கும் நாற்காலியை பாதிக்கப்பட்டவரின் உறவினர் காலால் எட்டி உதைக்கவேண்டும். அவர்கள் அப்படி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி, நீதி கிடைத்ததாக பொருள். ஆனால், சஹ்ரா  இறந்துபோனதால், அவரது கணவரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காதே! ஆகவே, இறந்துபோனசஹ்ரா வின் உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவரது மாமியார் அவர் நிற்கவைக்கப்பட்டிருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்திருக்கிறார். ஒரு உயிரற்ற உடலுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டது!!!
Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சில காலமாக இந்திய அணியில் ஆடாமல் உள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக உள்ளார். 

ஒரு சமயத்தில் யுஸ்வேந்திர சாஹலுடனான அவரது ஜோடி சூப்பர்ஹிட் ஜோடியாக இருந்தது. ஆனால் இப்போது இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களாலும் இந்திய அணியில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. 

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அனைத்துமே மாறி விட்டது என்றார் குல்தீப் யாதவ். ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், குல்தீப் யாதவ், 'எனக்கு தோனியின் நினைவு அடிக்கடி வரும். அவர் ஸ்டம்புக்கு பின்னாலிருந்து எங்களிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார், ஏதாவது ஆலோசனை கூறிக்கொண்டிருப்பார்." என்றார். 

'தோனி பாய்க்கு மிகப்பெரிய அனுபவம் உண்டு. தோனி அணியில் இருந்தபோது நானும் சாஹலும் ஒன்றாக விளையாடுவோம். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து நானும் சாஹலும் ஒன்றாக விளையாடவில்லை. தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நான் மிக சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். நானும் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்தேன்." என்றார்.

"நான் தோனி பாயை மிஸ் செய்கிறேன். அவரது அனுபவத்தை மிஸ் செய்கிறேன். அதிக போட்டிகளில் விளையாட விளையாட, ஸ்டம்புக்கு பின்னாலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் திறமையும் அவருக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் மறுமுனையில் ஒரு சரியான ஜோடி தேவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது"  என்று குல்தீப் யாதவ் கூறினார். 

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2021லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பக்கம் 23 / 90