Editor's Choice

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்தார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார். 

இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு செனட் சபை எம்.பி. ஜோ மேன்ச்சின் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்தது.
 
இருப்பினும் வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் நீரா தாண்டன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடங்கள் 11
கடைசி தேதி 02.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CMRL வேலைவாய்ப்பு 2021 :

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ வயது வரம்பு :

01.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  1. General Manager – 50 வயது
  2. Chief Vigilance Officer – 50 வயது
  3. DGM/ JGM/ AGM – 40-47 வயது
  4. DGM /JGM – 40-43 வயது
  5. Manager – 28 வயது
CMRL கல்வித்தகுதி :
  • General Manager & DGM/ JGM/ AGM & Manager – Bachelor Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer – Any graduates அல்லது Post Graduation in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DGM/ JGM – Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூந்தமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

Editor's Choice

ஆஸ்திரேலிய விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில் துறையினரும் இது வரை இல்லாத அளவில், எலி படைகளின் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில், சமீபத்திய மாதங்களில், லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆஸ்திரேலியாவில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் அனைத்தும், எலிகளுக்கு இரையாகி, இப்போது அனைத்தும் வீணாகி விட்டன. சேமிப்பு கிடங்குகளில் மட்டுமல்லாது ஊரக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் எலிகள் படையெடுத்து நோயாளிகளை கடித்து வருகிறது.  

எலிகள் படையெடுப்பு தொடர்பான  படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு  பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லூசி தாக்ரே ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இறந்த மற்றும் உயிருள்ள எலிகள் தரையில்  கொட்டப்படுவதைக் காணலாம்.

"எங்கள் வீடுகளின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள எலிகள், எங்கள் உடைகளையும், உணவையும் அழித்து விட்டது. அதோடு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.  அரசு இதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறுகிறார்

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அதை பார்த்து மக்கள் திகிலடைந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Editor's Choice

இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையில் அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • M.V Mechanic 05
  • Copper & Tinsmith 01
  • Painter 01
  • Tyreman 01
  • M.V Electrician 02
  • Driver 25
அஞ்சல் துறை தகுதி விவரங்கள்:

மேற்கூறிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தார்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு [MSE / B9-4 / X / 2019 & MSE / B9-2 / XV / 2021] 05.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறுகிய அறிவிப்பாக மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. என்ற முகவரிக்கு 26.05.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Editor's Choice

அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் என்று இளவரசர் ஹாரி தெரிவித்தார்.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய ஹாரி, ‛ அரச குடும்பத்தில் வாழ்ந்ததை பெரிய சுமையாக கருதினேன், எனக்கு 20 வயது ஆகும் போதே அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் அம்மா டயனாவின் நிலை தன் மனைவிக்கும் குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரச குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டேன்' இவ்வாறு ஹாரி கூறினார்.

"என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, மற்றவர்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று ஹாரி கூறுகிறார்.

தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்.

இது எல்லாவற்றையும் எனக்கு அதுவரை கிடைத்திராத தாய் என்ற பட்டம் இருந்தது மிக முக்கியமானது. எனது மகன் பாதுகாப்பாக இல்லாதது மற்றும் இந்த குடும்பத்தின் முதல் வாரிசு, மற்ற பேரப்பிள்ளைகளைப் போல பட்டத்துடன் அழைக்கப்படாதது வருத்தம்தான். நான் கர்ப்பமாக இருந்தபோதே எனது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டமோ இளவரசி பட்டமோ வழங்கப்படாமல் இருக்க விதிகள் மாற்றப்பட்டன. அப்படி பறிப்பது அவர்களின் உரிமை கிடையாது. ஏன் எப்படி செய்ய வேண்டும்? என ஹாரியின் மனைவி மேகன் தெரிவித்தார். 

Editor's Choice

தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.  எஸ்பி ஜனநாதன் இயக்கும் அரசியல் த்ரில்லர் திரைப்படம் லாபம்.

படப்பிடிப்பின்போது மீடியாவுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், நாட்டின் நிலைமை சிறப்பாக இல்லை. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் போராடுகிறோம்.  மெதுவாகவும் படிப்படியாகவும் லாக்டவுன் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது என கூறினார்.

லாக்டவுன் இருந்தாலும், சில நகரங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் வீட்டில் தங்க அறிவுறுத்தினாலும், வயிற்றை நிரப்பவும், தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்ளவும், பிற காரணங்களுக்காகவும் மக்கள் வேலைக்கு செல்கிறார்கள். எனவே நான் வேலை செய்வது பெரிய விஷயம் இல்லை என்று ஸ்ருதி ஹாசன் சொல்கிறார். 
 
 பணத் தேவை இருக்கும் வேறு எவரையும் போலவே எனக்கும் செலவுக்கு பணம் தேவை. அதனால் நான் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நான் முடிக்க வேண்டிய பிற தொழில்முறை கடமைகளையும் முக்கியமானதாக நினைக்கிறேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறினார்.  

தனது சொந்த பில்களை செலுத்த வேண்டும் என்பதற்காக வேலை செய்வது அவசியம் என்கிறார் ஸ்ருதி.

நான் குழந்தை இல்லை எனது சொந்த விருப்பப்படி வாழ்வேன் என்று சொல்லும் ஸ்ருதி, "எனக்கு வரம்புகள் உள்ளன. என் அப்பா அல்லது மம்மி எனக்கு உதவி செய்யவில்லை" என்று கூறுகிறார்.  தான் வாழ்க்கையில் எடுத்த ஒவ்வொரு முடிவிற்கும் பெருமைப்படுவதாக சொல்கிறார்.

"நல்லதோ, கெட்டதோ, நானே நான் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளேன். தொற்றுநோய்க்கு ஒரு வீட்டை வாங்கினேன் எனவே, எனக்கு அடிப்படை நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளன" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.

லாக்டவுன் மற்றும் பல காரணங்களால் வெளியில் செல்வதும், பணியிலும் முடக்க நிலை ஏற்பட்டதால், ஸ்ருதிஹாசன் வீட்டிலேயே தங்கி தனது இசை ஆர்வத்தை பூர்த்தி செய்வது மற்றும் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

 

பக்கம் 22 / 90