Editor's Choice

தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நதியா. இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன.

ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், சிவகுமார், விஜயகாந்த், சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய நதியா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல இந்தி நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது' என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Editor's Choice

ரத்த குழாய்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட், இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூளைக்கு ரத்தத்தை முறையாக செலுத்துவதற்கு பலூனிங் என்ற முறையின் வாயிலாக ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதில் ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட் கருவியையும், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை குணப்படுத்துவதற்கான கருவியையும் இந்தியர்கள் விரைவில் பெறவிருக்கிறார்கள்.

இதயத்தில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்துவதற்கு தற்போது வெளிநாட்டுகளிலிருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டென்ட் கருவியின் விலை இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட மிகவும் குறைவானதாக இருக்கும். இதேபோல் ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் போது ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்துவதற்கான கருவி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னார்வ நிறுவனமாக இயங்கும் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய விண்வெளி ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்ஏஎல்), பெங்களூருவுடன் இணைந்து தயாரித்த இரண்டு உயிரி மருத்துவ உட்பொருத்து கருவிகளுக்காக அந்த நிறுவனம் புனேவில் இயங்கும் பயோராட் மெடிசிஸ் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதயத்தில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்துவதற்கு தற்போது வெளிநாட்டுகளிலிருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டென்ட் கருவியின் விலை இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட மிகவும் குறைவானதாக இருக்கும். இதேபோல் ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் போது ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்துவதற்கான கருவி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னார்வ நிறுவனமாக இயங்கும் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய விண்வெளி ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்ஏஎல்), பெங்களூருவுடன் இணைந்து தயாரித்த இரண்டு உயிரி மருத்துவ உட்பொருத்து கருவிகளுக்காக அந்த நிறுவனம் புனேவில் இயங்கும் பயோராட் மெடிசிஸ் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

 

 

Editor's Choice

பாண்டிராஜ் - சூர்யா இணையும் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு.

ஏனென்றால், ஒரே கட்டமாக படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என அழைத்து வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியாங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்னும் அந்தப் படம் வெளியாகவில்லை. அதற்குள் சூர்யாவுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, படப்பூஜை அன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Editor's Choice
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ள அனுமதியளித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு  முற்றுப்புள்ளி வைத்திருப்பதை காட்டுகிறது. அதேசமயம், இந்த முடிவிலேனும் ரஜினி உறுதியாக இருப்பதே அவரை நம்பிப் பின்தொடரும் ரசிகர்களுக்கு அவர் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.

‘நானும் அரசியலுக்கு வருகிறேன்; என்னால் ஆனதைச் செய்கிறேன்’ என்று சொன்னவர் அல்ல ரஜினிகாந்த். ஒட்டுமொத்த அமைப்பும் கோளாறு; இன்றைக்கு அரசியலிலுள்ள அனைவருமே கோளாறானவர்கள் என்ற பொருள்படப் பேசியவர். ஒட்டுமொத்த அமைப்பையுமே மாற்றப்போவதாகச் சூளுரைத்தவர். கொரோனா அலை உச்சம் தொட்ட பிறகே அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன் என்பதை அவர் அறிவித்தார். அதுவரை பொதுவெளியில் காணாமலே இருந்தார்.

எங்கோ சுயத்தை அறுத்துக்கொண்டு பொதுவாழ்வில் அதைப் பணயம் வைப்பதன் வாயிலாகவே ஒருவர் அரசியலில் கால் பதிக்க முடியும்.  மக்களிடமிருந்தும் பொதுச் சமூகத்திலிருந்தும் முற்றிலும் தனித்து இயங்கலாம் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் ரசியல் களத்தில் உயிரோட்டத்தோடு இயங்க முடியாது. தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் எத்தனை மக்கள் செயல்பாட்டாளர்களை நாம் இழந்திருக்கிறோம்! விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நேசிக்கும் மண்ணுக்கும் சமூகத்துக்கும் உரமாக மாற உறுதிகொள்வது அது. எல்லோருக்கும் அது கட்டாயம் இல்லை. அரசியலர்களுக்கு அது அவசியம். அதனால்தான் அவர்கள் ‘தலைவர்’ ஆகிறார்கள்.

ரஜினியின் முடிவு அவருடைய பல லட்சம் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருப்பது இயல்பானது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய சினிமாக்கள் வழி அவர்களை இந்த இடம் நோக்கி அழைத்து வந்தவர் ரஜினி. அரசியலுக்கு சினிமாவைப் பயன்படுத்திக்கொள்பவராக அல்லாமல், சினிமாவுக்கு அரசியலைப் பயன்படுத்திக்கொள்பவராக இருக்கிறார் என்ற விமர்சனம் ரஜினி மீது பல்லாண்டு காலமாக உண்டு. நிச்சயமாக அவர் பலருடைய வாழ்க்கைக் கனவுகளில் விளையாடியிருக்கிறார்.  இனியும் அவர்களை ஏமாற்றும் விளையாட்டை ரஜினி நடத்தக் கூடாது. ஒருவகையில் ரஜினி சுதாரித்திருக்கிறார். ஒரே பாடலில் கட்சி தொடங்கி, பிரச்சாரம் முடித்து, ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் சினிமாவில் ஜோராக நடக்கலாம். நிஜத்திலும் அப்படி நம்பிக் காலை வைப்பது ஆளைச் சுருட்டிக் குழிக்குள் இழுத்துவிடும். வாழும் காலத்தின் மாபெரும் கலைஞர்களில் ஒருவர் என்ற இடத்தில் ரஜினி இருக்கிறார். அந்த இடமே மகத்தானதுதான். அதேசமயம், பலர் தன்னைப் பின்பற்றத்தக்க ஓரிடத்தில் இருப்பவர் தன்னுடைய சொற்களுக்கு உரிய பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும்.

Editor's Choice

திருநங்கையரின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் தொடங்கியிருக்கிறது. நம்பிக்கை தரும் மாற்றத்தின் சமீபத்திய வரவு டாக்டர் வி.எஸ். பிரியா. கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் இவர். ஜினு சசிதரனாகப் பிறந்த இவர், டாக்டர் பிரியாவாகப் பரிணமித்ததில் தன் குடும்பத்தின் பங்கு முதன்மையானது என்கிறார்.

பள்ளி நாள்களிலேயே தனக்குள் இருந்த பெண்மையை இனம் கண்டுகொண்ட பிரியா, அதை எப்படிக் கையாள்வது என்கிற தேடலில் இறங்கினார். கல்வியில் சிறந்து விளங்குவது அவசியம் என்று நினைத்தவர் தனக்குள் நிகழ்ந்த போராட்டங்களுக்கு நடுவே படிப்பில் கவனம்செலுத்தினார். திருச்சூரில் வைத்தியரத்னம் ஆயுர்வேத கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவப் படிப்பை நிறைவுசெய்தார். பிறகு, மங்களூருவில் மேற்படிப்பை முடித்தார். பட்டாம்பி, கன்னூர், திருப்புனித்துறை ஆகிய இடங்களில் பணியாற்றிய போதுதான் பாலின மாற்றத்துக்குத் தயாரானார்.

திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபோது ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன் அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். இதன்மூலம் கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் என்கிற அடையாளத்தை பிரியா பெற்றிருக்கிறார். குரல் மாற்ற சிகிச்சை உள்ளிட்ட இன்னும் சில சிகிச்சைகளை இவர் மேற்கொள்ளவிருக்கிறார். அறுவைசிகிச்சை முடிந்து தன்னை பிரியாவாக அறிவித்தபோது, “என்னைக் கண்டடைந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் பெண்மையைக் கொண்டாடுகிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்குள் நிலவிய மாறுபாடுகளை வெற்றிகரமாகக் கடந்துவந்துவிட்டேன்” என்று கூறினார்.

மக்களும் சமூகமும் இன்று ஓரளவுக்கு மாறியிருந்தாலும் மாற்றுப் பாலினத்தவர் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்கிறார் பிரியா. அது உண்மை என்பதை, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.

Editor's Choice

அமெரிக்க அதிபர், ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக இன்று பதவியேற்றார்.

இந்நிலையில் பதவி விலகிய டிரம்ப், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்தார். இதையடுத்து இன்று வெள்ளை மாளிகையிலிருந்து தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் வெளியேறினார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க அவரை வழியனுப்பி வைக்கப்பட்டார். இதன் மூலம் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் பெற்றார்.

பக்கம் 70 / 90