Editor's Choice

புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனை ஜோராக உள்ளது. அடுத்து எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இ தற்கான தொழில் நுட்பம், விற்பனை சந்தையை ஆய்வு செய்து வருகிறது. 7 ஆண்டுகளில் 23 புது பைக்குகளை களமிறக்க உள்ளது.

இதில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எலக்ட்ரிக் வகை பைக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் எலக்ட்ரிக் பைக்கை 2023ல் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பீல்டு கிளாசிக் 350 அடிப்படையில் வடிவமைக்கப்படும். பாஸ்ட் சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புளூடூத் மூலம் அலைபேசியை இணைக்கும் வசதி, டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இன்டர்நெட் வசதி, வட்டவடிவ எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை இருக்கை, இரட்டை வண்ணங்கள் போன்ற அம்சங்கள் இடம் பெறும். 10 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். சிங்கிள் சார்ஜில் 250 கி.மீ., துாரம் பயணிக்கலாம்.

ராயல் என்பீல்டு எலக்ட்ரின் பைக்கின் விலை 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எ

Editor's Choice

தனது செயலி பாதுகாப்பானது என பயனர்களுக்கு ஸ்டேடஸ் வைத்து வாட்ஸ்ஆப் தெரியப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக, புதிய கொள்கையை, வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது. பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு,   பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு செயலிகளுக்கு, பலர் மாறினர். இதையடுத்து, 'புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்நிறுவனம் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது. இது அனைத்து பயனர்களும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், ‛உங்களது குறுஞ்செய்தி, இருப்பிடம், உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படவோ, வெளியிடப்படவோ மாட்டாது. உங்களின் தொடர்பு எண்களை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம்,' என ஸ்டேட்டசில் அந்நிறுவனம் வைத்துள்ளது.

Editor's Choice
நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன், அமலா பால் உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வருபவர், ரவீணா ரவி. இவர், பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் அம்மா வேட நடிகை ஸ்ரீஜாவின் மகள். ரவீணாவின் தந்தை ரவியும் டப்பிங் பேசுவார், நடிப்பார். ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்துக்காக, சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் ஜோடியாக நடிக்க குடும்பப்பாங்கான நடிகையை தேடியபோது கிடைத்தவர், ரவீணா. 
 
சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்திலும் நடித்திருந்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிடும் ராக்கி என்ற படத்தில், வசந்த் ரவி ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடிக்கிறார். 
 
ஆனால், டப்பிங் பேசுவதை அவர் நிறுத்தவில்லை.  இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. 
 
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு ரவீணா டப்பிங் பேசியுள்ளார்.   ஈஸ்வரன் படத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்திலும் நிதி அகர்வாலுக்கு டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் துறையில் ரவீணாவுக்கு அமைந்தது போன்ற அதிர்ஷ்டம் யாருக்கும் அமைந்ததில்லை என்று சொல்கிறார்கள்.
Editor's Choice

வங்கி கணக்கில் மொபைல் எண் பதிவேட்டைப் பெறுவது மிகவும் முக்கியம், இது கணக்கு தொடர்பான சிறிய மற்றும் பெரிய விஷயங்களின் புதுப்பிப்புகளைப் பெறுகிறது. ஆனால் சில நேரங்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஏதேனும் சிக்கல் உள்ளது அல்லது சில காரணங்களால் அது நிறுத்தப்படும். இந்த வழக்கில், நீங்கள் அதை உடனடியாக மாற்ற வேண்டும். ஏனென்றால், போலி மொபைல் எண்கள் மூலம் இன்று பல வங்கி மோசடிகள் செய்யப்படுகின்றன. எனவே உங்கள் பதிவு செய்யப்பட்ட எண் மூடப்பட்டிருந்தால், வங்கியில் புதிய எண்ணை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

எனவே நீங்கள் ஒரு வங்கிக் கணக்கின் (Bank Account) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை எளிதாக செய்ய முடியும். தனதுவாடிக்கையாளர்கள் கிளைக்குச் செல்லாமல் எண்ணை மாற்றுவதற்கான வசதியை வங்கி வழங்குகிறது.

உங்களிடம் வங்கி கணக்கு இருந்தால், உங்கள் மொபைல் அல்லது கணினி மூலம் வங்கிக் கணக்கின் மொபைல் எண்ணை வீட்டிலேயே மாற்றலாம்.

உதாரணமாக, நீங்கள் SBI வங்கி பற்றி பேசினால், இதற்காக, முதலில் நீங்கள் வங்கியின் வலைத்தளமான www.onlinesbi.com க்கு செல்ல வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை உள்நுழையும்போது, ​​இங்கே நீங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு, தனிப்பட்ட விவரங்களைக் கிளிக் செய்க. இங்கே நீங்கள் உங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

சமர்ப்பித்தால், உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் பழைய எண்ணைக் காண்பீர்கள், அதில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான விருப்பமும் தெரியும்.

இந்த வழிமுறையைப் பின்பற்றி உங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும்.

நீங்கள் இணைய வங்கியைப் பயன்படுத்தாவிட்டால், வங்கிக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணையும் மாற்றலாம். இதற்காக, நீங்கள் உங்கள் வங்கி கிளைக்குச் சென்று மொபைல் எண் மாற்ற படிவத்தை நிரப்ப வேண்டும். இது தவிர, உங்கள் பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலையும் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, வங்கி உங்கள் மொபைல் எண்ணை மாற்றும்.

Editor's Choice

வீடியோக்களில் பார்க்கும் பொருட்களையும் தயாரிப்புகளையும் அந்த தளத்திலிருந்து நேரடியாக வாங்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை யூடியூப் சோதித்து வருகிறது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட யூடியூப் வீடியோக்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளை பார்வையாளர்கள் வீடியோவில் பார்த்தவுடனேயே வாங்க முடியும்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையத்தில் அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களிடையில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் இந்த அம்சத்தை தற்போது சோதித்து வருகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்கள், தங்கள் வீடியோக்களில் விற்பனைக்கு தயாராக உள்ள தயாரிப்புகளையும் பொருட்களையும் சேர்க்கலாம், அவை ஷாப்பிங் பேக் ஐகான் வழியாக பயனர்கள் வாங்குவதற்கு கிடைக்கும்.

கூகிள் பக்கத்தில் புதிய அம்சம் சோதிக்கப்படுவது குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த அம்சம் பார்வையாளர்களுக்கு வீடியோக்களில் பார்க்கும் தயாரிப்புகளுக்கான பொருத்தமான தகவல்களையும் வாங்குவதற்கான விருப்பங்களையும் பெற அனுமதிக்கும் என்று யூடியூப் கூறுகிறது.

சில வீடியோக்களின் கீழ் இடது மூலையில் தோன்றும் ஷாப்பிங் பேக் ஐகானைக் கிளிக் செய்து பார்வையாளர்கள் பிரத்யேக தயாரிப்புகளின் பட்டியலைக் காண முடியும். இங்கிருந்து, அவர்கள் ஒவ்வொரு தயாரிப்பின் பக்கத்தையும் ஆராயலாம். அங்கு அவர்கள் கூடுதல் தகவல்கள், தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் தயாரிப்பு வாங்குவதற்கான விருப்பங்களைக் காணலாம்.

கூகிள் ஷாப்பிங் விளம்பரங்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் பயனர்களுக்கு காட்டத் தொடங்கியது. ஒரு டிஜிட்டல் ஸ்டோர் ஃபிரண்டாவதற்கான முயற்சிகள் அப்போது எடுக்கப்பட்டன. விளம்பரங்கள் பயனர்கள் நேரடியாக வீடியோக்கள் வழியாக ஷாப்பிங் செய்ய அனுமதித்தன.

அக்டோபர் 2020 இல், வீடியோக்களில் இடம்பெறும் தயாரிப்புகளை டேக் மற்றும் டிராக் செய்ய YouTube மென்பொருளைப் பயன்படுத்துமாறு யூடியூப் படைப்பாளர்களைக் கேட்கத் தொடங்கியதாக ப்ளூம்பெர்க் அறிவித்தது. அறிக்கையின்படி, தரவு கூகிளின் ஷாப்பிங் கருவிகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் இணைக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடியோ சேனல்களைக் கொண்டு தன் தளத்தில் அம்சங்களை சோதித்து வருவதாகவும், காண்பிக்கப்படும் தயாரிப்புகளின் மீது படைப்பாளர்களுக்கு கட்டுப்பாடு இருக்கும் என்றும் தெரிகிறது.

 

Editor's Choice
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். 
 
தற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர். உலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் நியூசிலாந்து நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.
 
இப்படத்தை காண திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களில் திரையரங்கில் சென்றது மட்டுமின்றி மாஸ்டர் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
 
மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பார்த்துள்ளார். காரில் மாஸ்டர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன் என அவர் இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி வைரலாகியது.
 
ஒரு வருடத்திற்கு பிறகு, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்ப்பது ரொம்பவே எக்ஸைட்டிங்காக இருக்கு, இது மாஸ்டர் பொங்கல் டா என கிரீத்தி சுரேஷ் டுவீட் போட்டுள்ளார்.

பக்கம் 72 / 90