Editor's Choice

டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் டிராகன் பழம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பழத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பரிசீலனை செய்த அம்மாநில அரசு, ‛டிராகன்' பழத்திற்கு கமலம் என பெயர் சூட்டியுள்ளது.

பெயர் மாற்றியதில், எந்த அரசியல் காரணமும் இல்லை குஜராத் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கமலம் என்றால் இந்தி மொழியில் தாமரை என அர்த்தம். பழத்திற்கு கூட பாஜகவின் தாமரை சின்னம் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 

Editor's Choice

Amazon Prime Video ஐ பார்ப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மொபைல் மட்டுமே திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது சந்தாவுக்கு 89 ரூபாய் மட்டுமே செலவாகும்.

அமேசான் இந்தியாவுக்கான சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. நிறுவனத்தின் இந்த திட்டத்தின் பெயர் Amazon Prime Video Mobile Edition. இந்த சிறப்புத் திட்டம் மொபைலுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல்களில் மட்டுமே அதை அனுபவிக்க முடியும். இதனை ஏர்டெல் நிறுவனத்துடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Amazon Prime Video Mobile Edition இன் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் நீங்கள் கூடுதல் நன்மையையும் பெறுவீர்கள். Amazon Prime Video Mobile Edition ஒற்றை பயனர் மொபைல் மட்டுமே திட்டம். நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்தால், இந்த சேவையின் பலனைப் பெறுவீர்கள்.

ஏதேனும் Airtel பயனர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த விரும்பினால், அவர்களுக்கும் இலவச ட்ரையல் கிடைக்கும். அவர்களுக்கு 30 நாட்கள் இலவச ட்ரையல் கிடைக்கும். இதற்காக, ஏர்டெல் பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள Airtel Thanks App சென்று அவர்களின் மொபைல் எண்ணில் கையொப்பமிட வேண்டும். இந்த இலவச திட்டம் 30 நாட்களுக்கு மட்டுமே. இப்போது நீங்கள் Amazon Prime Video Mobile Edition தொடர விரும்பினால், நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 Amazon Prime Videoக்கு  ரூ.131தான்.

Editor's Choice

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நாளில் நான்கு விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 20ம் தேதி, ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மற்றும் கலவரக்காரர்களைத் தவிர, விண்வெளிப் பொருள்களும் (celestial objects) ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஊறு விளைவிக்கலாம் என்று கூறப்படுகிறது.  

அடுத்த சில நாட்களில், தொடர்ச்சியான சிறுகோள்கள் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , ஒரு சிறுகோள் (asteroid) ஒரு மணி நேரத்திற்கு 46,000 கிலோமீட்டர் (29,000 மைல்) என்ற வேகத்தில் நமது கிரகத்தை நோக்கி பயணித்து வந்து கொண்டிருக்கிறது. 

பூமிக்கு அருகில் வரும் பொருட்களை ஆய்வு செய்யும் நாசாவின் மையம் (NASA’s Center for Near Earth Object Studies), வரவிருக்கும் நாட்களில் ஒரு சில விண்கற்கள் பூமிக்கு அருகில் இருக்கும் என்றும், தொடக்க நாளில் மட்டும் இதுபோன்ற நான்கு சிறுகோள்கள் நமது கிரகத்துடனான பாதைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறது.

நான்கு சிறுகோள்கள் பூமியை நோக்கி பயணிப்பதாக சொல்லும் நாசாவின் கருத்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூமிக்கு மிகவும் நெருக்கமான சிறுகோள் “2021 BK1” பூமியை கடக்கும் போது, அதற்கும் நமது கிரகத்திற்கும் இடையிலான தொலைவு என்பது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரமாக இருக்கும். பூமிக்குச் நோக்கி வரும்  சிறுகோள்களின் குழுவின் ஒன்றின் அகலம் 93 மீட்டர்.

 

Editor's Choice

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள், 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவை பார்வையிட 1,15,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. நிகழ்ச்சி முடியும் வரை மாஸ்க் அணிவது கட்டாயம். கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு, விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானத்தில் முடிவடையும். அணிவகுப்பின் நீளமும் 8.2 கி.மீ., தூரத்தில் இருந்து 3.3 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்றவே இந்த ஏற்பாடு. அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதில் 96 பேர் மட்டுமே இடம்பெறுவார்கள்.

அணிவகுப்பு நடக்கும் இடத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது கொரோனா அறிகுறி யாருக்கேனும் தென்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த 8 பூத்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு டாக்டர் மற்றும் மருத்துவ உதவியார் நியமிக்கப்படுவார்கள். அணிவகுப்பு நடக்கும் இடங்களில் தூய்மைபடுத்தப்படுவதுடன், விஐபிக்கள் அமரும் இடங்களில், வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

Editor's Choice

இன்றைய நவீன காலகட்டத்தில் சோலார் ஃபென்சிங் (Solar Fencing) என்பது நவீனமயமாக்கப்பட்ட மற்றும் புதிய மரபை உருவாக்கும் பாதுகாப்பு வழிகளில் முக்கியமானது. சூரியசக்தியில் இயங்கும் வேலி, ஒருவரின் சொத்தை பாதுகாப்பதோடு, புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.  

மின்சார வேலி போல செயல்படும் Solar Fencing, மனிதர்களோ விலங்குகளோ (Animals) வேலியுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. உயிர் இழப்பு ஏதும் ஏற்படாது என்பதை உறுதிசெய்யும் இந்த பாதுகாப்பு வழிமுறை, திருட்டு மற்றும் அத்துமீறலைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கிறது.

  1. செலவு குறைவு, மலிவானது
  2. குறைந்த பராமரிப்பு செலவு
  3. சிறந்த பாதுகாப்பு, மிகவும் நம்பகமானது
  4. மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்தவிதமான உடல் ரீதியான தீங்கும் ஏற்படாது
  5. புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது
  6. மையப்படுத்தப்பட்ட அலாரம் அமைப்புடன் வருகிறது
  7. தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்கிறது  
  8. மின்சாரத்தை கட்டுப்படுத்தும் அலகு (CCU)
  9. மின் ஆற்றல்
  10. வேலியில் மின்னழுத்த அலாரம் (FVAL)
  11. ஒளி மின்னழுத்தத் தொகுதி
  12. சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க, விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதற்காக 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய சோலார் ஃபென்சிங் (Solar Fencing) அமைக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் கிடைக்கும்.

Editor's Choice

மாஸ்டர் படம் தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் ரூ.26 கோடி வசூல் செய்து இருக்கிறது. பொங்கல் அன்று ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முந்திய விஜய் படங்களின் சாதனையை ‘மாஸ்டர்’ முறியடித்து இருக்கிறது. இத்தனைக்கும் அரசு விதித்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு எல்லா தியேட்டர்களிலும் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.எல்லா விஜய் படங்களையும் போல் இந்த படமும் பல பிரச்சினைகளை சந்தித்த பின்னரே திரைக்கு வந்தது. 

மாஸ்டர் படமும் இந்தியில் ‘ரீமேக்’ ஆக உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

பக்கம் 71 / 90