அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நாளில் நான்கு விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 20ம் தேதி, ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மற்றும் கலவரக்காரர்களைத் தவிர, விண்வெளிப் பொருள்களும் (celestial objects) ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஊறு விளைவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்களில், தொடர்ச்சியான சிறுகோள்கள் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , ஒரு சிறுகோள் (asteroid) ஒரு மணி நேரத்திற்கு 46,000 கிலோமீட்டர் (29,000 மைல்) என்ற வேகத்தில் நமது கிரகத்தை நோக்கி பயணித்து வந்து கொண்டிருக்கிறது.
பூமிக்கு அருகில் வரும் பொருட்களை ஆய்வு செய்யும் நாசாவின் மையம் (NASA’s Center for Near Earth Object Studies), வரவிருக்கும் நாட்களில் ஒரு சில விண்கற்கள் பூமிக்கு அருகில் இருக்கும் என்றும், தொடக்க நாளில் மட்டும் இதுபோன்ற நான்கு சிறுகோள்கள் நமது கிரகத்துடனான பாதைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறது.
நான்கு சிறுகோள்கள் பூமியை நோக்கி பயணிப்பதாக சொல்லும் நாசாவின் கருத்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூமிக்கு மிகவும் நெருக்கமான சிறுகோள் “2021 BK1” பூமியை கடக்கும் போது, அதற்கும் நமது கிரகத்திற்கும் இடையிலான தொலைவு என்பது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரமாக இருக்கும். பூமிக்குச் நோக்கி வரும் சிறுகோள்களின் குழுவின் ஒன்றின் அகலம் 93 மீட்டர்.