Editor's Choice

இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவ சேவை அணுகுமுறையில் வரையறை செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு கூறியுள்ளது. இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் தொடர்பான ஆதரவு மற்றும் மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா முன்வந்த நிலையில் இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் புதிய கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் கடுமையாக உயர்ந்துள்ளன. புதிய கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையை மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா அமெரிக்க குடிமக்களுக்கு சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி விமானங்களை தேர்வு செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இங்குள்ள குடிமக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆலோசனையும் வழங்கியுள்ளது.

Editor's Choice
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் உலக அளவில் உச்சமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்தியாவுடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளிலும் இந்திய பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.
 
“இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள் மற்றும் இந்தியா வழியாக வரும் வேறு நாட்டு பயணிகளுக்கும் கம்போடியாவில் நுழைய மறு அறிவிப்பு வரும்வரை தடை விதிக்கப்படுவதாகவும், கடந்த 3 வாரங்களில் இந்தியா சென்று திரும்பிய எந்த பயணியும் கம்போடியாவில் நுழைய முடியாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Editor's Choice

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ‘எவர்கிரீன்’, கடந்த மாதம் 23ம் தேதி எகிப்தில் உள்ள உலகின் மிக முக்கியமன நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாய் வழியாக சென்றது. அப்போது வீசிய சூறாவளி காற்றால், கட்டுப்பாட்டை இழந்து கால்வாயின் குறுக்கே தரைதட்டியது. இதனால், அந்த வழியாக பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்தன. ஒரு வாரத்துக்கு மேல் நடந்த மீட்பு பணிக்குப் பிறகு, ‘எவர் கிரீன்’ கப்பல் மீட்கப்பட்டது.

இந்த கால்வாயை, ‘சூயஸ் கால்வாய் ஆணையம்’ நிர்வகித்து வருகிறது. அதற்கு, இந்த பாதையை உலக நாடுகளின் கப்பல்கள் பயன்படுத்துவதில் தினமும் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், கப்பல் தரைதட்டியதால் அதை மீட்பதற்காக ஏற்பட்ட செலவு, கால்வாயில் ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு, நீர்வழிப் போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கும்படி சூயஸ் நிர்வாகம் கேட்டது. இதை கேட்டு, எவர்கிரீன் கப்பல் உரிமையாளரான ஷோய் கிசென் கைஷா நிறுவனம் அதிர்ந்தது. அவ்வளவு பெரிய தொகை வழங்க முடியாது என தெரிவித்தது.

இதையடுத்து, அதன் மீது எகிப்து நீதிமன்றத்தில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது, சூயஸ் கால்வாயின் அருகில் உள்ள செயற்கை ஏரி ஒன்றில் எவர்கிரீன் கப்பலை சூயஸ் கால்வாய் நிர்வாகம் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த கப்பலை இயக்கிய மாலுமிகள், ஊழியர்கள் என மொத்தம் 26 பேர் கப்பலில் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள். எவர்கிரீன் கப்பல் உரிமையாளர்- சூயஸ் கால்வாய் ஆணையம் இடையிலான சட்ட மோதலால், ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் கப்பலிலேயே முடங்கி கிடக்கின்றனர். இவர்கள் கப்பலை விட்டு வெளியே வருவதற்கு சூயஸ் கால்வாய் ஆணையம் அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக இந்திய கடல் தொழில் சங்கத்தின் தலைவர் அப்துல்கானி செராங் கூறுகையில், ‘‘கப்பலில் இருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்கள். அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும். நஷ்டஈடு பிரச்னை முடியும் வரையில் அவர்களை கப்பலில் வைத்திருப்பது இயலாத காரியம்,” என்றார். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

* விபத்து உள்ளிட்ட சர்ச்சைகளால் கப்பல் ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடிப்பது புதிதல்ல. இதற்கும் முன்பும் பல சம்பவங்கள் உலகளவில் நடந்துள்ளன.
* சர்வதேச கடல்சார் அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இதுபோன்ற 31 சம்பவங்களில் 470 ஊழியர்கள் சிக்கி உள்ளனர்.
* கடந்த 2004ம் ஆண்டு முதல் இதுபோன்ற 438 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இதில், 5,700க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Editor's Choice

Axis வங்கி தனது பல சேவைகளுக்கான கட்டணத்தை மே 1ம் தேதி முதல் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Axis வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் மினிமம் பேலன்ஸ் தொகை இல்லாவிடில் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

SMS அலர்ட்டுக்காக முன்னதாக மாதம் 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு எஸ் எம் எஸிற்கு 25 பைசாவாகவும், இது அதிகபட்சம் 25 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1முதல் அலுக்கு வரும் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இது ஒன் டைம் பாஸ்வேர்டுகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.

ஏடிஎம்மில் ஒவ்வொரு மாதமும் கட்டணமில்லாமல் 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னதாக 5 ரூபாயாக இருந்தது. 

Editor's Choice

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டது. ஆனால், இறுதி செய்யப்படாமல் இருந்தது. 'ஏலே' பட வெளியீடு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு 'ஏலே' படத்தைக் கொடுத்துவிட்டார். பின்பு, 'ஜகமே தந்திரம்' படத்தையும் ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்துவிட்டார். ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் விலை கொடுத்து 'ஜகமே தந்திரம்' படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடு குறித்து தனுஷ் தரப்பில் அதிருப்தி நிலவி வந்தாலும் மேற்கொண்டு இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 

தற்போது ஜூன் 18ஆம் தேதி அன்று படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமா அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பகிரப்பட்டுள்ளது.

Editor's Choice

முகம் மற்றும் உடலை மறைக்கும், 'பர்கா' போன்ற உடைகளுடன், பொது இடங்களில் நடமாட தடை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில், 2019ல் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில், 270 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உடலை மறைக்கும், 'பர்கா' உடை அணிந்து பொது இடங்களுக்கு வர, தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முகம் மற்றும் உடலை மறைக்கும், 'பர்கா' உள்ளிட்ட அனைத்து வகை உடைகளுடன் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவைக் குழு,  ஒப்புதல் அளித்துள்ளது.

முகம் மற்றும் முழு உடலை மறைக்கும் உடைகளுடன் பொது இடங்களில் நடமாடுவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இதற்கு தடை விதிப்பது என, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட பின், அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பக்கம் 35 / 90