Editor's Choice

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் COVID-19 தொற்றுநோயின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தேவைப்பட்டால், சீனாவிடன் சில கேள்விகளை முன் வைப்பது குறித்தும், விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

"கொரோனா வைரஸ்  எங்கிருந்து பரவியது என்பதை ஆராயும் முயற்சியில் எங்கள் தேசிய ஆய்வகங்கள் மற்றும் எங்கள் அரசாங்கத்தின் பிற ஏஜென்சிகள், உளவுத்துறையினர், இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இது தொடர்பான பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முழுமையாக தெரிவிக்கும்படி நான் புலனாய்வு பிரிவிடம் கூறியுள்ளேன், ”என்றார் ஜோ படைன்.

முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், கொரோனா தொடர்புடைய அனைத்து தரவு மற்றும் ஆதாரங்களை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, ஒத்த எண்ணம் கொண்ட  உலகின் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் ஜோ பைடன்  கூறினார்.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரப்பப்பட்டது என உலக நாடுகள் பல குற்றசாட்டுகளை வைத்து வரும் நிலையில்,  இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

Editor's Choice

 மலேசியாவில் இரு மெட்ரோ ரயில் நேருக்கு நேர் மோதி 200 பயணிகள் காயமடைந்துள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கபாதையில் கடந்த 24ம்தேதி இரவு 9 மணி அளவில் மெட்ரோ ரயில் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதே தண்டவாளத்தில் எதிர் முனையில் காலிப்பெட்டிகளுடன் மற்றொரு ரயில் வந்தது. இரு ரயில்களும் மோதியதில், ரயிலில் இருந்த 200 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த 47 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. விபத்தின் போது இரு ரயில்களும் குறைவான வேகத்திலேயே வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Editor's Choice

ஓர் உணவுப்பொருளுக்கு மவுசு அதிகமாக இருந்தால் அதை வைத்து எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட வேண்டும் என ஒரு கூட்டம் நினைக்குமில்லையா? அதற்கு மீன்களும் தப்பவில்லை. விளைவு, சமீப காலமாக மீன் விற்பனையில் பல்வேறு ஏமாற்று வேலைகள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன.

ஃபார்மலின் ரசாயனத்தை மீன்கள் மீது பூசி வைத்தால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் வீசாது. ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களைச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படும். ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்ல பல நாள்கள் ஐஸில் வைத்து விற்பனையாகும் மீன்களைச் சமைத்து சாப்பிட்டாலும் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். முக்கியமாக, தொடர்ந்து ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கும்.

கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.

அப்படியென்றால் மீன்களையே சாப்பிடக்கூடாதா என யோசிக்க வேண்டாம். கெட்டுப் போகாத மீன்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். கெட்டுப்போன மீன்களை எப்படிக் கண்டறிந்து வாங்குவது?

அதிகபட்சம் இரண்டு நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களைச் சாப்பிட்டால் எந்தப் பிரச்னையும் வராது. அதைத் தாண்டும்போதுதான் ரசாயனங்கள் பூசப்பட்டு அவை விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

மீன் ஃபிரெஷ்ஷாக இருக்கிறதா என்பதைப் பெரும்பாலும் செவுள்களை நிமிர்த்திப்பார்த்துதான் தீர்மானிக்கப்படும். செவுள்கள் ரத்தநிறத்தில் இல்லாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அது கெட்டுப்போன மீன் என்பதை உறுதிசெய்துவிடலாம். அதே நேரம், ரசாயனங்கள் பூசப்பட்ட மீன்களில் செவுள்களும் ரத்த நிறத்தில்தான் இருக்கும், செவுளைப் பிளந்து அந்த இடத்தை தொட்டுப் பார்த்தால் கைகளில் பிசினைப் போலவும் ஒரு கூழ்மப் பொருளைத் தொடுவதுபோலவும் உணரமுடிந்தால் மட்டுமே அது ஃபிரெஷ் மீன்.

அதேபோல மீன்களை வாங்கும்போது மீனின் சதைப்பகுதியை கை விரல்களால் அழுத்திப்பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மீன் விரைப்பாக, தடிமனாக இருக்க வேண்டும். தொளதொளவென இருக்குமேயானால் அது கெட்டுப்போன மீன்.

மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கிப் பார்த்தால், மீனின் வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப்போன மீன். கெடாத மீனாக இருந்தால் மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாகத் தெரியும்.

ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களில் இருந்து மருந்து வாடை வீசும். அதை வைத்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விட முடியும்.

மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். ரத்த நிறத்திலோ, மங்கிய வெளிர் நிறத்திலோ கண்கள் இருக்குமேயானால் அது நெடுநாள் ஐஸில் வைக்கப்பட்ட மீனாகத்தான் இருக்கும்.

கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.

ஒருவேளை கெட்டுப்போன மீன் என்று தெரியாமல் சமைத்து வைத்துவிட்டாலும், அதை உண்ணும்போதே தெரிந்துவிடும். அதனுடைய சதைப்பகுதி மாவுபோல இருக்கும். இதைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மீன்களை வாங்கிய பிறகு, சமைப்பதற்கு சில மணி நேரம் ஆகும் என்றால், சுத்தம் செய்யப்பட்ட மீன்களை புளிக்கரைசலில் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் ஊறவைத்தால் சமைக்கும்வரையிலும் கெடாமல் இருக்கும்.

மீன்களைச் சுத்தம் செய்ததும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூன்று முறை அலசினால், ஒருவேளை ரசாயனங்கள் பூசப்பட்டிருந்தாலும் அவற்றால் ஏற்படுகிற விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வெயில் காலங்களில் மீன்கள் வெகு சீக்கிரமே கெட்டுவிடும். அதனால், அந்த நேரத்தில் மீன்கள் வாங்கும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். முடிந்தால் அதிகமான வெயில் இருக்கும் நாள்களில் மீன் உணவைத் தவிர்க்கக்கூடச் செய்யலாம்.''

Editor's Choice

இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.  சவுதி அரேபியாவைச் சேர்ந்த 27 வயதான சபா பேக் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இம்ரான்கான் பதான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிடப்பட்ட புகைப்படத்தில், இர்பானின் மனைவியின் முகம் மங்கலாக இருந்தது.

இந்நிலையில், இர்பான்பதான் அவரது முகத்தை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அதே படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவாக வெளியிட்டுள்ள பதான், ‘‘அதே படத்தை இங்கே நான் பதிவிடுகிறேன். மனைவியின் விருப்பப்படிதான், இன்ஸ்டாவில் அவரின் படம் மழுங்கடித்து வெளியிடப்பட்டது. நான் அவளுடைய துணைதான், அவளின் எஜமான் அல்ல’’ என தெரிவித்துள்ளார்.

Editor's Choice

மீன்களை எப்பொழுதும் பிடித்தவுடன் உண்ண வேண்டும். சில மீன்களை பதபடுத்தியும் உட்க்கொள்ளப்படுகிறது. மீன்களை பதப்படுத்தும் போது சில மீன் மற்றும் இறால் உறுப்புகளை அகற்றிவிட வேண்டும். அதேபோல் கழிவு மற்றும் சுவையற்ற மீன்கள் உணவுக்கு ஏற்றதல்ல. இந்த வகையான பயனற்ற மீன்களை வைத்து மீன் உபபொருட்களை தயாரிக்கலாம்.

ஒரு முழு மீனில் இருந்து கிடைக்கின்ற புரதக்கலவை ஒரு திடப்புரதக்கலவையாகும். மீனிலிருந்து தண்ணீர், எண்ணெய், எலும்புகள், மற்றும் இதர பொருட்களை அகற்றுவதால் மீன் புரதம் அதிகரிக்கிறது.
மீன் புரதக் கலவையின் முன்னேற்றத்தால் முழு மீனிலிருந்து பெறப்படுகின்ற புரதக்கலவை மனிதனின் ஊட்டச்சத்துக்கு ஏற்றது.

மீன் புரதக்கலவை கரகரப்பான, நிறமில்லாத, மனமில்லாத மற்றும் சுவையில்லாத ஓரு தூள். இந்த தூளை எந்தவித சுவைமணமும் குறையாமல் அறை வெப்ப நிலையிலே 3-4 வருடங்கள் வைத்திருக்கலாம். ஏறத்தாழ கூட்டான மீன் புரதக்கலவையாக பயன்படுத்தலாம். அதிக அளவுடைய உயர்ந்த செரிமான புரதம், லைசின் மற்றும் கனிமம் இவை அனைத்தும் நிறைந்ததுதான் மீன்புரதக்கலவை.

மீன் புரதக் கலவையை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆதலால் சாப்பிடும் உணவுடன் சோர்த்து சாப்பிட வேண்டும். ரொட்டியில் 5-10% மற்றும் பிஸ்கட்டில் 10% மீன் புரதக் கலவை சேர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 35கி மீன் புரதக் கலவையை உணவில் சேர்த்துக்கெரள்ள வேண்டும்.  மீன் சதையில் 15-20% புரதம் உள்ளது. சில மீன் இனங்களில் அதிகமான எண்ணெய் உடலில் இருக்கும்.(எ.க.சூறா,காட்) இது ஈரல் எண்ணெய்க்கு மூலகாரணம் உள்ளது.
மீன் பதப்படுத்துதல் மற்றம் எலும்பற்ற மீன் துண்டு தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் உபயோகமற்ற மீன்களில் நிறைய புரதம், கொழுப்பு மற்றும் கனிமம் உள்ளது.
மீனின் உபபொருட்கள், மீன் உணவு, மீன் தூள், மீன் உடல், மீன் ஈரல் எண்ணெய், பதப்படுத்திய மீன் சுவாசப்பை, இன்னும் பல. ஈரல் மற்றும் நண்டிலிருந்து புற்த்தோட்டின் மூலப்பொருள் கிடைக்கின்றது. உயிர் வேதியியல் மற்றும் மருந்து சார்ந்த பொருட்கள், பித்த நீர் உப்பு, இன்சுலின், குலுகோசமையின் மற்றும் பல.

மீன் ஈரல் எண்ணெயில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளது. சில மீனினங்களில் வைட்டமின் ‘டி’ இருக்கும். வைட்டமின் ‘ஏ’ ஈரலில் உள்ளது. சில பெரிய வகை மீன்களில் ஈரல் மற்று உறுப்புகளில் இருக்கும். சுறா மீனில் கறுப்பு நிற ஈரல் இதில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருக்கும். மற்ற நிற ஈரலை விட சூரை மற்றும் காட் ஈரல் மீன் எண்ணெயில் 250000,500/கி எண்ணெய்.

காட் ஈரல் எண்ணெய் காட் மீன் வகையிலிருந்து எடுக்கப்படுகிறது. சூரிய ஒளி படும் போது வைட்டமின் ‘ஏ’ அழிந்துவிடும். மற்றும் காற்று படும் போது எண்ணெய் கெட்டியாகும். இந்த வைட்டமின்கள் குறையாமல் இருக்க நார்டிஹய்டரோ குவாலடிக் அமிலம் (0.05%) மற்றும் அஸ்கார்பியல் பால்மிட்டேம் (0.01%). குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியம். காயம் மற்றும் எரிச்சலுக்கு போடலாம்.

இந்தியாவில் சுறா மீன்கள் மிகவும் அதிகம். இதில் நிறைய வைட்டமின் ‘ஏ’ உள்ளது. ஒரு மீனிலிருந்து 300000/கி எண்ணெய் எடுக்கலாம். புதிதாக எடுக்கப்பட்ட எண்ணெய் மஞ்சள், ஆரஞ்சு, அல்லது பொடி கலரில் உள்ளது. இந்த எண்ணெயுடன் கடலை எண்ணெயை சேர்த்தால் வைட்டமின் ‘டி’ கிடைக்கும்.

மீன் மாவு தூள் என்பது மீனிலிருந்து எடுக்கப்படுகின்ற தூள். இதை கோதுமை அல்லது மக்காசோள மாவுடன் கலந்து ரொட்டி, பிஸ்கட், கேக், இனிப்புகள் மற்றும் சோப்பில் சேர்க்கலாம். இது புரதச்சத்துக்கு பொருத்தமானது.

லோமியா மற்றும் கெளுத்தி மீனிலிருந்து சீவல்/அப்பளம் தயாரிக்கலாம். மீன் சதைகளை வேகவைத்து, மைதாவுடன் கலந்து உப்பு சேர்த்து, சீவல்/அப்பளம் செய்யலாம்.

மீன் கேக் தயாரிக்க சுறா மற்றும் கெளுத்தி மீன்கள் சிறந்தது. மீனை சுத்தம் செய்து அதை வேகவைத்து தனித்தனி பாகமாக வைக்க வேண்டும். வேகவைத்த உருளை கிழங்கை உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து மீன் பாகங்கள் நடுவில் வைத்து வேகவைக்கவும்.

மீனுடைய புரதம் செரிமானம், உயிரியல் மற்றும் வளர்ச்சி ஊக்க மதிப்பளவு போன்றவற்றை தருகிறது. மனித ஊட்டத்தில் இது பெரிய அங்கம் வகிக்கிறது. மீன் புரதத்தில் லைசின் மற்றும் மித்தியோனின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமுள்ளது. முட்டை வெள்ளைக் கரு, பீன்ஸ் புரதம் மற்றும் கேசின் போன்ற புரதத்தை விட மீன் புரதம் உயர்வானது. கோழி புரதத்துக்கு சமமானது.

15-20% புரதம் மீன் தசையிலிருந்து எடுக்கப்படுகிறது. மீன் துண்டுகள் மற்றும் மீன் கழிவுகளை சோடப்புடன் சேர்த்தால் கொழுப்பு வெளியேறும். இந்த துண்டுகளை காய வைக்கவும். அதன்பின் அரைத்தால் மீன் நாற்றம் இல்லாமல் வெள்ளை பொடி/தூள் கிடைக்கும். இதில் 80-90% புரதம் உள்ளது. ரொட்டி, இனிப்புகள், ஐஸ் கிரிம் மற்றும் மருந்துப் பொருட்கள் செய்யும் போது முட்டை வெள்ளை கருவுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.

சுறா துடுப்புகளை அடிபக்கத்தில் வெட்டி அதை கடல் நீரில் சுத்தம் செய்து மரச் சாம்பளுடன் எலுமிச்சை சாறு கலந்து வெயிலில் காயவைக்க வேண்டும். அதன்பின் முறுகலான மற்றும் மிருதுவானதாக கிடைக்கும் இஇதை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள்.

Editor's Choice
இந்தோனேசியாவில், சுயஇன்பம் செய்யும்போது ஆண்கள் பிடிபட்ட பல வழக்குகள் உள்ளன, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுயஇன்பத்திற்கான தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கலாம் என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன, இருப்பினும் தண்டனை 32 மாத சிறைத்தண்டனையாக முடிவு செய்யப்பட்டது. 
 
மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் இந்த விசித்திரமான சட்டம் உள்ளது, இங்கு ஆண் மருத்துவர்கள் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பை நேரடியாகப் பார்க்கக்கூடாது. அவர்கள் கண்ணாடியையோ அல்லது பிறப்புறுப்பின் பிரதிபலிப்பையோதான் பார்க்க வேண்டும். அவர்கள் பெண் நோயாளிகளை சோதிக்கலாம், அவர்களுடன் உரையாடலாம் ஆனால் பெண்ணுறுப்பைப் பார்க்கக்கூடாது.

லெபனானில் பெண் விலங்குடன் உடலுறவு கொள்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் ஆண் விலங்குகளுடன் கூடாது. உலகின் மிகவும் வினோதமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே லெபனானில் விலங்குகளுடன் உடலுறவு கொள்வது பரவாயில்லை, ஒரே விதி விலங்குகள் பெண்களாக இருக்க வேண்டும்.
 
துபாயில் தம்பதிகள் பொதுவெளியில் கைகளைக் கோர்த்து நடக்கலாம், ஆனால் முத்தமிட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம். இது பொது ஒழுக்கத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. துபாயில் முத்தமிடுதல், கட்டிப்பிடிப்பது, அரவணைப்பது சுற்றியுள்ளவர்களிடமிருந்து நிறைய விசித்திரமான பார்வைகளைக் கொண்டுவரும். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் சிறைதண்டனை அளிக்கப்படும். ஒருவேளை நீங்கள் குடிபோதையில் முத்தமிட்டால், உங்கள் சிறைதண்டனை ஒரு வருடம் வரை போகலாம்.
 
அரிசோனா மற்றும் ஓஹியோவில், பொதுவெளியில் விறைப்புத்தன்மை ஏற்படுவது சட்டவிரோதமானது. இதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அமெரிக்காவின் மினசோட்டாவின் சில பகுதிகளில் நிர்வாணமாக தூங்குவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

பக்கம் 13 / 90